நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்

விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம்.
இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்

திங்கள், 29 நவம்பர், 2010

உடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.


'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்ச்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.






வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

ஞாயிறு, 28 நவம்பர், 2010

எந்த வயதில் பெண்கள் அழகு

ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.


அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்

கல்யாண சீசனில் புது மணப்பெண்களும், புது மாப்பிள்ளைகளும் அழகுக்கு அழகு சேர்க்க அலை பாய்வார்கள். மினுமினுக்கும் அழகுடன் கல்யாணப் பெண்கள் மணமேடையை அலங்கரிக்கும் காலம் இது.


கல்யாணம் என்றாலே பெண்கள் கற்பனா லோகத்தில் மிதக்கத் துவங்கி விடுவார்கள். மணப்பெண்கள் கல்யாண நாளன்று பொலிவுடன் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் சகட்டு மேனிக்கு கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். தோகள், உறவினர்கள், அழகு நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளில் பொதுவானவை 7 கேள்விகள். அவற்றுக்கு இங்கு பதில்கள் உள்ளன.

மணநாளன்று பொலிவாக இருக்க என்று முதல் சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும்?

திருமணத்திற்கு முன்பு, குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாகவே சருமத்தைப் பராமரிக்கத் துவங்கவும். தோல் நிறத்தை மெருகூட்டவும், புள்ளிகளையும் போக்க 3 மாதமாவது தேவைப்படும் என்று மும்பையைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் ஸ்வாதி ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

மணப்பெண்களின் சருமத்தின் மெருகை கூட்ட எந்த முறை சிறந்தது?

தோல் இளமையாக இருக்க, மினுமினுக்க, நிறத் திண்மையை கூட்ட பல சிகிச்சை முறைகள் உள்ளன என்று டெல்லியைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் சப்ரா கூறினார். இதில் ஆக்சிஜன் பேஷியல், லேசர் சிகிச்சை, கடல்பாசி சிகிச்சை சிறந்தவை. லேசர் சிகிச்சைக்கு 10 அமர்வு (சிட்டிங் )தேவைப்படும். பின்னர் பாருங்கள் உங்கள் தோல் எப்படி இளமையாகவும், அழகாகவும் இருக்கிறது என்று.

போடாக்ஸ் பயன்படுத்தலாமா? அவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பனதா?

தோல் இறுக்கத்துடனும், உறுதியாகவும் இருக்க பல மணப்பெண்கள் போடாக்ஸை பயன்படுத்துகிறார்கள். மேலும், மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தாரும் போடாக்ஸை பயன்படுத்துகின்றனர் என்கிறார் டாக்டர் ஸ்ரீவஸ்தவா.

முகச் சுருக்கத்தை கல்யாணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு சரி செய்துவிட முடியாது. சுருக்கமில்லாத நல்ல தோல் வேண்டுமானால் குறைந்தது 1 மாதத்திற்கு முன் போடாக்ஸ் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நிபுணர்களிடம் சென்று இந்த சிகிச்சையை செய்து கொண்டால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது.

அழகான தோல் கிடைக்க நான் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

மணப்பெண்கள் நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். யோகா, மனஅழுத்தத்தைப் போக்கும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை 2 மாதத்திற்கு முன்பே துவங்க வேண்டும் என்கிறார் டாக்டர் சப்ரா. பழங்கள், காய்கறிகள், ஒரு நாளைக்கு 3 தரம் கிரீன் டீ ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீவஸ்தவா.

நல்ல தோலைப் பெற அதற்கு ஈரத்தன்மை அளிப்பது அவசியம். எனவே, கிலென்சிங், டோனிங், மாய்சுரைசிங்கை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

நான் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்தலாமா? இது உகந்ததா?

ஒரு மணப்பெண் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதென்றால் ஒரு மாதத்திற்கு முன்பே உபயோகிக்கவும். அப்போது தான் ஏதாவது அலர்ஜி இருந்தாலும் திருமணத்திற்குள் மறைந்துவிடும் என்கிறார் சப்ரா. தோல் மினுமினுக்க வேண்டுமென்றால் வெயிலைத் தவிர்க்கவும்.

திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு எவ்வளவு செலவாகும்?

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு ரூ. 5,000ல் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். சிகிச்சைக்கு ஏற்றவாறு செலவும் அதிகரிக்கலாம்.
இந்த நிபுணர்கள் சொல்வதை செய்து பாருங்கள். பிறகு உங்கள் முகத்தில் வெட்கப் பூ சிரிப்பது போல சருமமும் ஜில்லென மினுமினுப்பதைக் காணலாம்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம்

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. மசால் வடை சுட்டாலோ, மீன் குழம்பு வைத்தாலோ எங்கிருந்தாலும் அவர்கள் உடனே ஓடிவந்துவிடுவது இதனால்தான்.

உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து லண்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு தலைவர் லொரான்ஸோ ஸ்டாஃபோர்ட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தெரியவந்த தகவல்கள்:


மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே வாசனையை நுகர்வதற்கு நம்மை தூண்டுகிறது. இவ்வாறு தூண்டப்படும் நேரத்தில் மோப்ப சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். வாசனை கமகமக்கும் இடத்துக்கு சென்றதும் ‘அதை எடுத்து சாப்பிடு’ என்று மூளையின் இன்னொரு பகுதி நம்மை தூண்டும். இதனால்தான் அதை சாப்பிடுகிறோம்.
மூளை இப்படி அடிக்கடி தூண்டினால் நிறைய சாப்பிட்டு உடல் பருமனாகிறோம். மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி குறைவு. பருமனாக உள்ளவர்களுக்கு வாசனையை வைத்தே உணவின் ருசியை நிர்ணயிக்கும் மோப்ப சக்தி அதிகம்.
இதனால்தான் ருசியான உணவுகளை எளிதில் அடையாளம் காண்கின்றனர். பருமன் அதிகமாகிறதே என்ற எச்சரிக்கை உணர்வு இல்லாமல் பிடித்த உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுகின்றனர். அதிகளவு குண்டாகி அவஸ்தைப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.

தும்மலுக்கு காரணம்

து‌ம்ம‌ல் எ‌ன்பது உட‌‌ல் ‌‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க செ‌ய்யு‌ம் த‌ன்‌னி‌ச்சையான செய‌ல். இதனா‌ல் ப‌ல்வேறு ‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து நமது உட‌ல் பாதுகா‌க்க‌ப்படு‌கிறது.

சு‌ற்று‌ச்சூழ‌லி‌ல் இரு‌க்கு‌ம் ‌கிரு‌மி ஒ‌ன்று உடலு‌க்கு‌ள் நுழைய மு‌ற்படு‌ம் போது அதனை எ‌ச்ச‌ரி‌க்கு‌ம் கரு‌வியாகவு‌ம் து‌ம்மலை‌க் கூறலா‌ம்.
பலரு‌க்கு‌ம் பல ‌வித‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ஒ‌‌வ்வாமை‌ வெ‌ளி‌ப்படு‌ம். தொட‌ர் து‌ம்ம‌ல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல், கா‌ய்‌ச்ச‌ல், சரும‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு என ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌க‌ளி‌ல் இது ஏ‌ற்படு‌ம்.
மூ‌க்கு வ‌ழியாக ஏதேனு‌ம் ‌கிரு‌மியோ ‌அ‌ல்லது தூசோ உ‌ள்ளே நுழைய மு‌ற்படு‌ம் போது அ‌ங்‌கிரு‌‌‌க்கு‌ம் நர‌ம்புக‌ள் மூளை‌‌யி‌ன் தகவலை‌ப் பெறாமலேயே தன்‌னி‌ச்சையான ஒரு செயலை செ‌ய்‌கிறது. அதுவே து‌ம்ம‌ல். த‌ன்‌னி‌‌ச்சை எ‌ன்பது மூளை‌யிட‌ம் இரு‌ந்து தகவ‌ல் பெறாம‌ல் தானாக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
‌சிலரு‌க்கு சாதாரண புகை கூட து‌ம்மலை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடலா‌ம்.

முக‌த்‌தி‌ற்‌கு‌ம் ‌சில ப‌யி‌ற்‌சிக‌ள் உ‌ண்டு

முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், ஏ, இ, யு, ஓ போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.

க‌ண்களு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், க‌ண்களை வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது ஒரு பெ‌‌ரிய வ‌ட்ட‌த்தை க‌ண்களா‌ல் சுழ‌ற்‌றி பா‌ர்‌ப்பது போ‌ல் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.
‌விர‌ல்களை நெ‌‌ற்‌றி‌யி‌ல் வை‌த்து வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி சு‌ற்‌றி மசா‌ஜ் செ‌ய்யலா‌ம். இதனா‌ல் முக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதே சமய‌ம் நெ‌ற்‌றி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் சுரு‌க்க‌ங்க‌ள் மறையு‌ம்.
மேலு‌ம், க‌ண்ண‌‌ங்க‌ள் உ‌ப்‌பி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள், வா‌யி‌ல் கா‌ற்றை ‌நிறை‌த்து க‌ண்ண‌ங்களை உ‌ப்ப வை‌த்து 10 நொடிக‌ள் இரு‌க்கலா‌ம். இ‌வ்வாறு 10 முறை செ‌ய்தா‌ல் க‌ண்ண‌ங்க‌ள் புசுபுசுவெ‌ன்று மாறு‌ம்.
இர‌ண்டு காதுகளையு‌ம் உ‌ள்ள‌ங்கைகளா‌ல் ‌அழு‌த்‌தி‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களா‌ல் எ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌க்க முடியுமோ அ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌த்தபடி 25 வரை எ‌ண்ணுவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் காது கே‌ட்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.

ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.
மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன.
இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.
மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.
மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.
மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.
அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும்.
மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும்.
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும்.
இதுதவிர, மேலே குறிப்பிட்டதுபோல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

சனி, 13 நவம்பர், 2010

கண்ணீரும்-கிருமி-நாசினிதான்

பொதுவாக நமது உட‌ல் உறு‌ப்புகளை பல வ‌ழிக‌ளி‌ல் நா‌ம் சு‌த்த‌ம் செ‌ய்‌கிறோ‌ம். கு‌ளி‌ப்பதா‌ல் உட‌ல் சு‌த்த‌ப்படு‌கிறது. ஆனா‌ல் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது த‌ெ‌ரியுமா? நமது க‌ண்‌ணீ‌ர்தா‌ன்.


ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன.

அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன. இத‌ன் காரணமாக, வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த க‌ண்‌ணீ‌ர் அ‌வ்வளவு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன.

அதுபோல, காய‌ம்ப‌ட்ட கு‌ழ‌ந்தை‌யி‌ல் ‌அழு‌ம் குழ‌ந்தை‌க்கு காய‌ம் எ‌ளி‌தி‌ல் ஆறு‌ம் ‌விநோதமு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

செவ்வாய், 9 நவம்பர், 2010

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா?

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?


ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.


சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.

பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.

ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.
தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.

த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்...

ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

முத‌ல் தா‌‌ய்‌ப்பா‌ல்

குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுருசுருப்பாக இருக்கும்.


இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்ப்பால் கொடுக்க நல்ல வாய்ப்பு. சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்கு தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன.

இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டதட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.

தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் எற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.

தா‌ய்‌ப்பாலா‌ல் மூளை வளரு‌ம்

தா‌ய்‌ப்பா‌ல்தா‌ன் குழ‌ந்தை‌க்கு ‌மிக‌ச் ‌சி‌ற‌ந்தது எ‌ன்று ப‌ல்வேறு ஆ‌ய்வுக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

தா‌ய்‌ப்பா‌ல் தரு‌ம் அ‌ன்னை‌க்கு‌ம் தா‌ய்‌ப்பா‌ல் தருவதா‌ல் ப‌ல்வேறு நல‌ன்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.
அ‌ந்த வகை‌யி‌ல், தா‌ய்‌ப்பா‌ல் குடி‌க்கு‌ம் குழ‌ந்தை‌யி‌ன் மூளை வள‌ர்‌ச்‌சியோடு ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல், தா‌ய்‌ப்பா‌ல் குடி‌க்காத குழ‌ந்தை‌யி‌ன் மூளை வள‌ர்‌ச்‌சி குறைவாக இரு‌ப்பது‌ம் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ம‌ற்ற பா‌ல் மூல‌ம் குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் வே‌ண்டுமானா‌ல் ந‌ன்கு வள‌ர்‌ச்‌சியடையலா‌ம். ஆனா‌ல் மூளை வள‌ர்‌ச்‌சி‌க்கு உ‌ரியது தா‌ய்‌ப்பா‌ல்தா‌ன்.

எனவே அ‌ந்த அ‌ரிய தா‌ய்‌ப்பாலை அ‌ன்னை தனது குழ‌ந்தை‌க்கு ந‌ி‌ச்சய‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை வ‌லியுறு‌த்தவே இ‌ந்த வார‌ம் தா‌ய்‌ப்பா‌ல் வாரமாக ச‌ர்வதேச அள‌வி‌ல் கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

சாய‌ம் வெளு‌க்காம‌ல் இரு‌க்க

பெரு‌ம்பாலு‌ம் ‌பு‌திதாக து‌ணிக‌ள் வா‌ங்கு‌ம் போது அலை‌ந்து ‌தி‌ரிவதை ‌விட அவ‌ற்றை த‌னி‌த்த‌னியாக துவை‌க்கு‌ம் போதுதா‌ன் பெ‌ண்க‌ள் அ‌திகமாக கஷ‌்ட‌ப்படு‌கிறா‌ர்க‌‌ள்.


புதிதாக வாங்கிய வ‌ண்ண ‌நிற துணிகள் சாயம் போகாமல் இருக்க, மற்ற துணிகளில் சாயம் ஒட்டாமல் இருக்க ‌சில எ‌ளிய வ‌ழிகளை ‌பி‌ன்ப‌ற்‌றினாலே போதுமானது.

ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, அதில் அரை கப் உப்பை சேர்க்கவும். க‌ல் உ‌ப்பு ந‌ன்கு கரைந்ததும் பு‌திதாக எடு‌த்த வ‌ண்ண ஆடைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் பிழிந்து எடுக்கவும்.

இ‌ந்த து‌ணிகளை சோ‌ப்பு‌ம் போட வே‌ண்டா‌ம், வேறு தண்ணீரிலு‌ம் அலச வேண்டாம். ‌பி‌ழி‌ந்து அ‌ப்படியே காய வைத்து பயன்படுத்தவும்.

அடுத்த முறை நீங்கள் இந்த துணிகளை துவை‌க்கு‌ம் போது இ‌ந்த து‌ணி‌யி‌ல் இரு‌ந்து சாய‌ம் வெ‌ளியேறாது. இ‌தி‌ல் இரு‌ந்து சாயம் மற்ற துணிகளிலு‌ம் ஒட்டாது, து‌ணியு‌ம் சீக்கிரம் வெளுத்து போகாது.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் எடு‌த்த ‌‌நிற‌த்‌திலேயே உ‌ங்க‌ள் ஆடைகளை பல கால‌ம் பய‌ன்படு‌த்தலா‌ம், வெளு‌க்காம‌ல், சாய‌ம் ஒ‌ட்டாம‌ல்..

க‌‌ண்களை பாதுகா‌க்கு‌ம் வ‌ழிக‌ள்

தொட‌ர்‌ந்து க‌ணி‌னி‌யி‌ல் வேலை செய்பவ‌ர்களு‌க்கு‌ம், அ‌திகமான நேர‌த்தை படி‌ப்ப‌தி‌ல் செல‌விடு‌ம் நப‌ர்களு‌க்கு‌ம் தூர‌ப் பா‌ர்வை ப‌றிபோகு‌ம் ஆப‌த்து ஏ‌ற்படு‌ம்.


‌அ‌வ்வாறு ‌பிர‌ச்‌சினை எழாம‌ல் இரு‌க்க க‌ணி‌னி‌ல் வேலை செ‌ய்யு‌ம் போது‌ம், படி‌க்கு‌ம் போது‌ம் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.

வாகன‌த்‌தி‌ல் செ‌ல்லு‌ம் போது ந‌ம் க‌ண்க‌ள் ‌மீது நேரடியாக வேகமாக அடி‌க்கு‌‌ம் கா‌ற்று படுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது. இது க‌ண் இமைக‌ளி‌ல் உ‌ள்ள ‌நீ‌ர்‌‌த் ‌திசு‌க்களை பா‌தி‌க்கு‌ம்.

ம‌ங்கலான இட‌த்‌தி‌ல் அ‌திக நேர‌ம் படி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்.

ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.

செ‌ரி‌க்கு‌ம் ‌திற‌ன் ‌சீராக இரு‌க்க

உட‌லி‌ல் ஒ‌வ்வொரு இய‌க்கமு‌ம் ‌சீராக இரு‌ந்தா‌ல்தா‌ன் நமது உட‌ல் நல‌த்துட‌ன் இரு‌க்‌கிறது எ‌ன்று அ‌ர்‌த்தமாகு‌ம். உட‌லி‌ல் எ‌ந்த இய‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அது நோ‌ய்தா‌ன்.


ஆனா‌ல், இ‌ந்த செ‌ரிமான‌த் ‌திற‌ன் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் உட‌லே பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாகு‌ம்.

அதாவது, செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தொட‌ர்‌ந்து பல ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து உ‌ள்ளது.

ஏதேனு‌ம் நோ‌ய் எ‌ன்றா‌ல், நே‌ற்று எ‌ன்ன சா‌ப்‌பி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கே‌ட்பத‌ற்கு‌ம் இதுதா‌ன் அடி‌ப்படை.

நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உணவு‌ம், செ‌ரிமான‌த் ‌திறனு‌ம் ‌சீராக இரு‌ந்தா‌ல் உட‌‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் பெருமளவு‌க் குறையு‌ம்.

எனவே, நமது செ‌ரிமான‌‌ம் ‌சீராக இரு‌க்க உ‌ரிய இடைவேளை ‌வி‌ட்டு, எ‌ளிதான உணவுகளை சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். கடினமான உணவாக இரு‌ப்‌பி‌ன் அவ‌ற்றை அளவோடு சா‌ப்‌பிடுவது ந‌ல்லது.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஏல‌க்கா‌யி‌ல் உ‌ள்ள ச‌த்து‌க்க‌ள்

இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன.


புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா‌ய் பெ‌ரிது‌ம் உதவு‌ம். ஏல‌க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏ‌ல‌க்கா‌ய் சே‌ர்‌த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல் குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபாடுக‌ள் ‌நீ‌ங்கு‌ம். இதனை இருபாலரும் அரு‌ந்தலா‌ம். இருவரு‌க்குமே பல‌ன் தரு‌ம்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ‌ள் ம‌ட்டுமே பயன்படுத்த வே‌ண்டு‌ம்.

துள‌சி‌த் தே‌நீ‌ர் ஆரோ‌க்‌கிய‌ம் தரு‌ம்

து‌ளி‌சி‌யை‌க் கொ‌‌ண்டு தே‌நீ‌ர் தயா‌ரி‌த்து‌க் குடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் பலரு‌க்கு‌ம் உ‌ண்டு. இ‌ந்த துள‌சி தே‌நீ‌ர் வெறு‌ம் உ‌‌ற்சாக‌த்‌தையு‌ம், ந‌ல்ல வாசனையையு‌ம் ம‌ட்டு‌ம் அ‌ளி‌க்க ‌வி‌ல்லை.


உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம், நோ‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவத‌ற்கான ச‌க்‌தியையு‌ம் அ‌ளி‌க்‌கிறது.

துள‌சி‌யை எ‌ந்த முறை‌யி‌ல் உ‌ட்கொ‌ண்டா‌லு‌ம் அது உட‌லி‌ன் ஆரோ‌க்‌‌கிய‌த்தை‌க் கா‌க்‌கிறது. ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. நோயை எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோயை குண‌ப்படு‌த்து‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோ‌யி‌ல் இரு‌‌ந்து கா‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம் து‌ள‌சி‌த் தே‌நீ‌ர் தரு‌கிறது.

துள‌சி இலைகளை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி எடு‌த்து அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் போடு‌ம் தே‌நீ‌ரி‌‌ல் கூட சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது கடை‌க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌க்‌ரீ‌ன் டீ போ‌ன்றவ‌ற்‌றி‌ல் துள‌சி சே‌ர்‌த்ததை வா‌ங்‌கி வ‌ந்து அரு‌ந்தலா‌ம்.

புதன், 27 அக்டோபர், 2010

‌சீரக‌த்‌தி‌ன் மரு‌த்துவ குண‌ங்க‌ள்

‌சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.


வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.


வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

நக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.


ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.

உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.


நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.

ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.


WDநக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.


‌வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.

மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.

‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.


மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.

‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.

‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.


கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.

திங்கள், 25 அக்டோபர், 2010

குழந்தையின் உணவு

அஸ்திவாரம் நன்றாக அமைந்தால்தான் கட்டிடம் உறுதியாக அமையும் என்பது முன்னோர்கள் வாக்கு. இந்த முதுமொழிச் சொல் கட்டடத்திற்கு மட்டுமல்ல. மனிதனுக்கும்தான். பிறந்த குழந்தைக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் உணவே எதிர்காலத்தில் அக்குழந்தை நோயில்லா மனிதனாகவும் அறிவில் சிறந்த வல்லுநராகவும் வளர முடியும். பிறந்தது முதல் குழந்தைக்கு எத்தகைய உணவுகளை கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக தெரிந்துகொள்வது ஒவ்வொரு தாய்மார்களின் முக்கிய கடமையாகும்.


குழந்தை பிறந்த முதல் 3 மாதம் வரை

பொதுவாக குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தவகையான உணவும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில் முதல் மூன்று மாதங்களுக்கு தாய்ப்பாலே குழந்தைக்குப் போதுமானது.

குழந்தைக்கு  முதல் உணவும் முக்கிய உணவும் தாய்ப்பால் தான். அதுவும் குழந்தை பிறந்த முதல் 3 நாட்கள் சுரக்கும் சீம்பால் என்று சொல்லப்படும் மஞ்சள் நிற திரவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு வேண்டும் போதெல்லாம் வேண்டிய அளவுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.

ஏதேனும் காரணங்களால் தாய்ப்பால் பற்றாக்குறை இருந்தால் பசும் பாலில் சம அளவு தண்ணீர் விட்டு சிறிது சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் இருப்பதை விட கொழுப்பும் புரதமும் பசும்பாலில் அதிகம். ஆனால் சர்க்கரையின் அளவு குறைவு. இதனால் சர்க்கரை சிறிது சேர்க்க வேண்டும்.

மூன்று முதல் நான்கு மாதம் வரை

குழந்தைக்கு தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். தாய்ப்பாலை நிறுத்தினால் குழந்தையின் ஆரோக்கியம் கெடுவதுடன், தாய்க்கு புற்றுநோய் வருவதற்கும் காரணமாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதம் முடிந்தவுடன் குழந்தைகளுக்கு காய்கறிகள் சூப், சிறிது உப்பு அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

மேலும் பழச்சாறுகளை வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். முதலில் 2 அல்லது 3 தேக்கரண்டி அளவில் கொடுக்க ஆரம்பித்து பின் படிப்படியாக 50 மி.லி., 100 மி.லி. அளவு கொடுக்கலாம். இக்காலங்களில் 1 சொட்டு மீன் எண்ணெய் கொடுக்கலாம்.

4 முதல் 6 மாதம் வரை

நான்காம் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க வேண்டும். இந்த மாதத்தில்தான் குழந்தையின் ஜீரண மண்டலம் எளிதில் செரிக்கும் கூழ் போன்ற உணவுகளை ஜீரணிக்கத் தயாராக இருக்கும். இதனால் நான்காவது மாதம் முதலே உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம்.

கடைகளில் டின்களில் அடைத்து விற்கப்படும் மாவு உணவுகளை விட எளிதாக நம் வீட்டிலேயே அத்தகைய உணவுகளை தயாரித்துக் கொடுக்கலாம்.

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

பசுவின் பால் - 100 மி.லி

சர்க்கரை - 1 ஸ்பூன்

நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

அரிசி மாவு தயாரிக்க புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் நன்கு வடிகட்டி, நல்ல வெள்ளைத் துணியில் காயவைத்து நன்கு மைய அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

2 தேக்கரண்டி அரிசி மாவை அரை டம்ளர் நீரில் போட்டு அதில் 100 மி.லி. பாலையும் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அரிசி மாவு நன்கு வெந்தவுடன் 1 ஸ்பூன் சர்க்கரையும், நெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து சிறிது கொதிக்க வைத்து ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதில குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

அரிசி மாவில் - கார்போஹைட்ரேட்

பாலில் - கால்சியம் , புரதம்

நெய் - கொழுப்பு

சர்க்கரை - குளுக்கோஸ்

என குழந்தைக்கு வேண்டிய சமச்சீர் உணவாக இது உள்ளது.

தாய்ப்பாலையும், மேற்கண்ட உணவையும் தினமும் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி கொடுத்து வந்தால் குழந்தை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த மாவு, டின்களில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மாவு உணவுகளை விடச் சிறந்தது.

6 முதல் 9 மாதம் வரை

ராகி, கோதுமை, சோயா, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் இவைகளை சேர்த்து அரைத்து மாவுக் கஞ்சியாக கொடுக்கலாம்.

முதலில் கொடுத்த தாய்ப்பால், மாவுக் கஞ்சியுடன் இந்த சத்துமாவுக் கஞ்சியையும் சேர்த்துக்கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் உடல் உறுப்புகள் நன்கு பலப்படும். எலும்புகள் பலப்படுவதுதால் குழந்தை நன்கு வளரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

9 மாதம் முதல் 12 மாதம் வரை

மேலே குறிப்பிட்ட வகைகளுடன் சற்று திடமான உணவுகளை கொடுக்க வேண்டும். இந்தக் காலங்களில் தான் குழந்தைகளுக்கு பல் முளைக்கும். இக்காலத்தில் எளிதில் சாப்பிட ஏதுவான உணவுகள், பழத்துண்டுகள், நறுக்கி கொடுக்கலாம்.

சிரிப்பதற்காக

செந்தில்: அண்ணே...சாப்ட்வேரு, ஹார்டுவேருன்னா என்னண்ணே...

கவுண்டமணி: அட..ப்ளூடூத் மண்டையா... செடியப் புடுங்குனா சாப்ட்வேரு,, மரத்தப் புடுங்குனா அது ஹார்டுவேரு...

இயக்குநர்: சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...
நடிகர்: என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்: இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...

ரிப்போர்ட்டர்: ஒபாமாவப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
சூரியா: எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க..
ரிப்போர்ட்டர்: நாசமாப்போச்சு.... உங்க ஒப்பாமா இல்ல சார்... ஒபாமா..ஒபாமா அமெரிக்கா...
சூரியா: தெரியாது சார்

நேர்முகத் தேர்வு-
தேர்வாளர்: ரயில் விபத்தைத் தடுக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
சர்தார்: ரயில் தண்டவாளத்தில் ஸ்பீடு பிரேக்கர் போட்டால் ரயில் விபத்தைத் தடுக்கலாம்.

தேர்வாளர்: ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது?
சர்தார்: டுர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்...

அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூணு பேர்தான்.

அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.
ரஷ்யன்: நாங்கதான் வீனஸில் முதலில் கை வைத்தோம்.
இந்தியன்: நாங்கதான் முதலில் சூரியனில் கால வச்சோம்....
அமெரிக்கன்: பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா சாம்பலாயிடுவீங்க..

இந்தியன்: ங்கொய்யால...நாங்க போனது நைட்லடா...

புதன், 20 அக்டோபர், 2010

மண் நிற பழங்கள்


சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.
இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நீல நிறப் பழங்கள்


நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும்.


மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.

தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.



ஆரஞ்சு நிறப் பழங்கள்


மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.


உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

பச்சை நிறப் பழங்கள்


பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .


இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.


மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.

மஞ்சள் நிறப் பழங்கள்



எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.
மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.


பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.


வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.


ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.

சிவப்பு நிறப் பழங்கள்

 கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.


ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.


வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.


இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.


மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.


கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

திங்கள், 18 அக்டோபர், 2010

படுக்கையில் சிறுநீர்…!

சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.
1. மரபு ரீதியானது,
2. ஹார்மோன் மாற்றங்கள்,
3. கவலை மற்றும் பயம்.
இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.
தடுப்பது எப்படி?
* படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
* குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கையூட்டுங்கள்.
* இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.
* 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.
* குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.
* தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.
* குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.

புதன், 13 அக்டோபர், 2010

அழகுக் குறிப்புகள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம்
கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை
தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம்அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர்
வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து
அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து
நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம்
சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்றவேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாற்றைப்
பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை
காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில்
குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்
வேர்க்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு,
கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து
அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க
வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும்,
சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து,சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி
எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில்தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம்சுத்தமாகும். பருக்களினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால்
சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை,
சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.
காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட
சருமம் புதுப் பொலிவடையும்.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம்
கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலு‌ம் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.


முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது. ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது.


இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தடையற்ற, ஆழ்ந்த உறக்கமே நல்ல உடல் நிலையை உறுதி செய்யக் கூடியது என்று கூறும் அவர்கள், தூக்கமின்மையால் ஏற்படும் கோளாறுகளையும் பட்டியலிடுகின்றனர்.

இரவு சாப்பிட்ட உணவுச் செரியாமை, குறட்டை விடும் நிலை உருவாதல், கால்களுக்கு ஓய்வின்மையால் மறுநாள் நிலவும் உடல் அசதி, பகல் நேரத்தில் உறக்கம் தோய்ந்த முகம், கோவப்படுதல், நினைவு சக்தி குறைதல் ஆகியன மட்டுமின்றி, மன நலத்தையும் பாதிக்கக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதுவும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகிய நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

8 மணி நேர ஆழந்த உறக்கம் வெற்றிக்கான முக்கியத் தேவை, ஏனெனில் அதுவே நமது உடல், மனத் திறமைகளை அதிகரிக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கூறுகின்றனர்.

தூங்குவது எப்படி?

இரவில் நல்ல தூக்கம் அவசியம் என்பதை மருத்துவம் மட்டுமல்ல, ஆன்மீகமும் வலியுறுத்துகிறது. இரவு உணவுப் பிறகு உடனடியாக படுக்கைக்குச் செல்லாமல், வீட்டின் முற்றத்திலோ அல்லது (ஆபத்தற்ற) தெருவிலோ சிறிது நேரம் உலவி விட்டு பிறகு வந்து படுத்துறங்க வேண்டும் என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.

தூங்குவதற்கு முன் நம் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல், ‘இதற்கு மேல் என் உடலின் ஓய்விற்கான நேரம் இது’ என்று கூறிவிட்டு, மனதை அமைதிப்படுத்திவிட்டு படுக்கையில் சாய வேண்டும் என்கிறார் அன்னை. ஸ்ரீ அரவிந்தரோடு ஆன்மீக முயற்சி மேற்கொண்ட அன்னை, இரண்டு கால்களையும் நன்கு நீட்டிக்கொண்டு, மல்லாந்து படுத்து, சிறிது நேரம் மனதை ஒருநிலைப்படுத்தியப் பிறகு கண்ணயர வேண்டும் என்றும், இதனை பழக்கப்படுத்தினால் அதுவே நல்லுறக்கத்தை தருமென்றும் கூறுகிறார்.

சித்த வைத்திய நிபுணர்கள், இரவு உணவிற்குப் பிறகு குறைந்து இரண்டு மைல் தூரமாவது நடந்துவிட்டு வந்து படுத்தால் உடல் நலம் கூடும் என்று கூறுகின்றனர். மதிய நேரத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை தூங்குவதை நல்லது என்று கூறும் சித்த வைத்தியர்கள், ஒரு நாள் இரவு முழுமையாக கண் விழித்தாலோ அல்லது பணியில் ஈடுபட்டாலோ அதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு சரியாவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று கூறுகின்றனர். எனவே இரவு தூக்கத்தை தவிர்ப்பது உடல் நலத்தின் மீது நாம் காட்டும் அக்கறையாகும்.

குறிப்பாக வீட்டில் இருக்கும்போது இரவு நேரத்தில் கணினிப் பணிகளை செய்வதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ உடலிற்கும் மனதிற்கும் பெரும் தீங்கிழைக்கக் கூடியது என்கின்றனர்.

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... போன்ற இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவதும் நன்றே.

அரைக்கீரையும் அற்புத குணங்களும்

பொதுவாக ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில், வீடுகளில் அடிக்கடி சமைக்கும் கீரைகளில் ஒன்றான அரைக்கீரையின் அற்புத குணங்களை இப்போது பார்ப்போம்.


இன்றையச் சூழலில் பெரும்பாலானோர் வாயு தொடர்பான பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால், அரைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், வாயு தொடர்பான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நம்மை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

அரைக்கீரையுடன், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து புளி சேர்க்காமல் கடைந்து சாப்பிட்டால் வாயு தொடர்பான தொல்லைகள் உடனடியாகத் தீரும்.

கிருமி தொற்றுகளால் ஏற்படும் தொண்டைப்புண், இருமல், சளிப்பிடிப்பு போன்றவற்றிற்கு அரைக்கீரை சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது.

ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகி உடல் பலவீனமாக இருப்பவர்கள் அன்றாடம் உணவில் அரைக்கீரையைச் சேர்த்துக்கொண்டால் உடல் பலம் பெறுவதுடன், இழந்த தெம்பும் திரும்ப வரும்.

காய்ச்சல் காரணமாகவோ, வயிறு கோளாறு காரணமாகவே சில வேளைகளில் நாக்கு அதன் ருசி தன்மையை இழந்துவிடும். அந்த சமயங்களில் அரைக்கீரையுடன் புளி சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நாக்கு இயல்பான நிலைக்குத் திரும்பும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது வளம் பெறும். இளம் வயதில் பல்வேறு காரணங்களால் ஆண்மைத் தன்மை இழப்பிற்கு பலர் ஆளாகிறார்கள். அவர்கள், இந்தக் கீரையைத் தொடர்நது சாப்பிடுவதன் மூலம் இழந்த ஆண்மைத் தன்மையை மீண்டும் பெற்றுவிட முடியும்.

பேரிச்சம் பழமும் இரத்த விருத்தியும்

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம்

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.

வியாழன், 23 செப்டம்பர், 2010

பேன், பொடுகு தொல்லையா?

பேன், பொடுகு தொல்லை பெண்களுக்குப் பெருந்தொல்லை. பேன் கூட பரவா‌யி‌ல்லை கா‌ட்டி‌க் கொடு‌ப்ப‌தி‌ல்லை. ஏனென்றால், பேனும் கருப்பு, தலை முடியும் கருப்பு. ஆனால் பொடுகு அப்படியில்லை. கருப்பான தலைமுடியில் பளிச்சென வெள்ளையாக காட்டிக் கொடுத்துவிடும்.


இந்த பேன், பொடுகு பிரச்சனைகளுக்கு எவ்வளவோ செலவு செய்பவர்களையும் நாம் பார்க்கிறோம். மேலும், பொடுகை ஒழிக்க வேண்டுமா? என்று வரும் விளம்பரங்களைப் பார்த்து அவற்றை வாங்கிப் போட்டு தலைமுடியை ஒழிக்கும் ஷாம்புகளையும் பார்க்கிறோம். 

ஆனால், இவையெல்லாம் இல்லாமல் எளிமையான இயற்கை முறையில் எப்படி ஒழிப்பது என்பதை இப்போது பார்ப்போம்:

பெரும்பாலும் தலையில் அழுக்கு சேர்வதாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்திய சீப்பை பயன்படுத்துவதாலும்தான் தலையில் பேன் உருவாகிறது.

வசம்புவை தண்ணீர் விட்டு அரைத்து, அதனை தலையில் தேய்த்து நன்றாக ஊரவிட்டு பின் தலையை அலசினால் பேன் ஓடியேவிடும்.

இதைவிட எளிதாக, வேப்பிலை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து தலைமுடியை அலசினாலே போதும் பேன் தொல்லை நீங்கும்.

கருந்துளசி இலைகளைப் பறித்து தலையணையின் மீது நன்றாக பரப்பிவிட்டு, அதன்மேல் மெல்லிய துணியைப் போட்டு அதன்மீது தலை வைத்துப் படுத்து உறங்கினால், தலையிலிருக்கும் பேன் தலைதெரிக்க ஓடியேவிடும்.

அடுத்தது பொடுகு, இதற்கும் முக்கியக் காரணம் அழுக்கான தலைமுடி, குளித்த பின் தலைமுடியை உலர்த்தாமல் இருப்பது, அதிக உடல்சூடு, அடுத்தவர் பயன்படுத்திய தலையணை, சீப்பு, துண்டு போன்றவற்றை பயன்படுத்துவதேயாகும்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தாலே போதும் பொடுகு இல்லாமல் போகும்.

நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிதளவு மிளகு ஆகியவற்றை நன்கு ஊறவைத்து பின் நன்றாக அரைத்து அதனை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலையை தண்ணீரில் அலசினால் பொடுகு நீங்கும்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

சுரைக்காய் :

இது உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்குதல், உடலை வலிமையாக்குதல், தாகத்தை அடக்குதல் போன்றவற்றிலும் உதவுகிறது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். இதன் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்தும்.

கொத்தவரங்காய் :

 இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

‌பீ‌ட்ரூ‌ட் :

 ‌பீ‌ட்ரூ‌ட் எ‌ன்றது‌ம் எ‌ல்லோருமே சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள், இது ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌ன்று, அது ம‌ட்டும‌ல்ல ‌பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உ‌ப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

புடலங்காய் :

 நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மே‌லு‌ம், உடலு‌க்கு அ‌திக கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்து‌ம். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.

அவரைக்காய் :

அவரைக்காய் : கொடி‌யி‌ல் கா‌ய்‌க்‌கு‌ம் கா‌யி‌ல் அவரை‌க்கா‌ய்‌க்கு முத‌லிட‌ம் உ‌ண்டு. இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். 

மு‌‌ள்ள‌ங்‌கி :

வே‌ர்‌ப்பகு‌தி‌யி‌‌ல் உருவாகு‌ம் கா‌ய் மு‌ள்ள‌ங்‌கியாகு‌ம். மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் ஏ ச‌த்து அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் க‌ண் பா‌ர்வை‌க்கு அ‌திக‌ம் உதவு‌கிறது. இ‌தி‌ல் சோடிய‌ம் ம‌ற்று‌ம் குளோ‌ரி‌ன் இரு‌ப்பதா‌ல் மல‌ச்‌சி‌க்கலை குண‌ப்படு‌த்து‌ம். வ‌யி‌ற்று எ‌ரி‌ச்ச‌ல், பு‌ளியே‌ப்ப‌ம் போ‌ன்ற உபாதைக‌ள் வராம‌ல் தடு‌‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் மு‌ள்ள‌ங்‌கி‌க்கு உ‌ண்டு. ‌தீ‌ப்பு‌‌ண்களு‌க்கு‌ம் மு‌ள்ள‌ங்‌கி‌ச் சாறு மரு‌ந்தாக‌ப் பய‌ன்படு‌ம். மேலு‌ம் மு‌‌ள்ள‌ங்‌கி‌யி‌‌ல் கா‌ல்‌ஷ‌ிய‌ம், மா‌ங்க‌னீ‌ஸ் கல‌‌ந்து‌ள்ளதா‌ல் பெ‌ண்களு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அடி‌க்கடி கரு‌ச்‌சிதைவு ஏ‌ற்படுபவ‌ர்க‌ள், மு‌ள்ள‌ங்‌கி‌ச் சா‌ற்‌றி‌ல் க‌ற்‌க‌ண்டு கல‌ந்து குடி‌த்து வ‌ந்தா‌ல் கரு ‌நிலை‌க்கு‌ம்.

கத்தரிக்காய் :

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றுதான். சுவை‌யி‌ல் ம‌ட்டுமே க‌த்‌தி‌ரி‌க்கா‌யி‌ல் மா‌ற்ற‌ம் உ‌ண்டு. பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்து‌கிறா‌ர்க‌ள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களு‌க்கு க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் ந‌ல்லது. ‌அம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் க‌த்‌தி‌ரி‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். அ‌தி‌ல்லாம‌ல் ஏ‌ற்கனவே சரும ‌வியா‌தி இரு‌ப்பவ‌ர்க‌ள் க‌த்‌தி‌ரி‌க்காயை உ‌ண்பதா‌ல் ‌வியா‌தி அ‌திக‌ரி‌க்கு‌ம். நமை‌ச்ச‌ல் உ‌ண்டாகு‌ம்.

வெண்டைக்காய்:

நா‌ம் கா‌ய்க‌றி கடை‌யி‌ல் சாதாரணமாக வா‌ங்கு‌ம் வெ‌ண்டை‌க்கா‌ய் ‌மிக‌ச் ‌சிற‌ந்த மரு‌த்துவ‌ப் பொரு‌ள் எ‌ன்பது பலரு‌‌‌ம் அற‌வி‌தி‌ல்லை. அதாவது வெ‌ண்ணடை‌க்கா‌ய் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வெ‌ண்டை‌க்காயை சமை‌க்காமலு‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வெ‌ண்டை‌க்கா‌யி‌ல் ‌பி ம‌ற்று‌ம் ‌சி ‌ச‌த்து‌க்களு‌ம், உ‌யி‌ர்‌ச்ச‌த்து‌க்களு‌ம் இரு‌க்‌கி‌ன்றன. இதனை சமை‌க்கு‌ம் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். உட‌‌ல் சூ‌ட்டா‌ல் அவ‌தி‌ப்படுபவ‌ர்களு‌க்கு வெ‌ண்டை‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாகு‌ம். உஷ்ண இருமலைக் குணமாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ம‌ட்டு‌ம் வெ‌ண்டை‌க்காயை குறைவாக உ‌‌ண்பது ந‌ல்லது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

வெற்றியின் இரகசியம்

உலகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்றுப் பிறந்ததன் பெருமையை அடைகிறார்கள்.
நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட !

காரணம் நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எப்பொழுது இந்தத் தாழ்வு மனப்பான்மையைத் தாழ்த்துகிறோமோ ! அப்போது தான் நாம் வெற்றி வாகையைச் சூட முடியும்.

தன்னம்பிக்கை என்பது வெற்றி தோல்வி கருதாது தன் மீதும் தான் செய்து கொண்டிருக்கும் செயல்பாட்டின் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு, தொடங்கிய காரியத்தை முழுமையாக நிறைவேற்றுவது ஆகும்.

தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ளாது தான் செய்த செயலைத் தொடர்ந்து செய்து தன்னம்பிக்கையின் மூலம் வெற்றி கண்டவர்களுள் ஒருவர் மாபெரும் தலைவரான ஆப்ரகாம் லிங்கன்.

இவர் அடையாத தோல்விகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்குத் தோல்வி அடைந்தவர். ஆப்ரகாம் லிங்கன் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சாதனையின் உச்சியை அடைந்தவர் ஆவார்.

1831 – வியாபாரத்தில் தோல்வி

1832 – சட்டமன்றத் தேர்தலில் தோல்வி

1833 – மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி

1835 – காதலியின் மறைவு

1836 – நரம்பு கோளாறு காரணமாக உடல்நலம் பாதிப்பு

1838 – சட்ட மன்றத் தலைவர் தேர்தலில் தோல்வி

1840 – எலக்டர் தேர்தலில் தோல்வி

1843 – காங்கிரஸ் தேர்தலில் தோல்வி

1855 – செனட் தேர்தலில் தோல்வி

1856 – துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி

1858 – மறுபடியும் சென்ட் தேர்தலில் தோல்வி

இத்தனை தோல்விகளையும் கண்டு அஞ்சாமல் அடுத்ததாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 1860 – ஆம் ஆண்டு அவரின் தன்னம்பிக்கைக்கு பரிசாக அமெரிக்க அதிபர் பதவி கிடைத்தது.

விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு

நாமெல்லாம் அறிந்த மிகப்பெரிய அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன். தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்.

அவர் மின்விளக்கை கண்டுபிடிக்கும் போது பலமுறை முயன்றும் தோல்வியைத் தழுவினார். சுமார் ஆயிரம் முறை ஆயிரம் இழைகளை (மின்) பொருத்தினார். ஆனால் அத்துனை முறையிலும் தோல்வியைத் தழுவி இறுதியாக சரியான டங்ஸ்டன் என்னும் இழையைப் பொருத்தி 40 மணி நேரம் எரியும் விளக்கை கண்டறிந்து சாதனை படைத்தார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம், ’நீங்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட இழைகளை பொருத்தி தோல்வி அடைந்த பிறகு இறுதியாக தானே வெற்றி அடைந்தீர்கள்’ என்றார்.

அதற்கு எடிசன், ’அப்படியல்ல நண்பரே ! நான் ஆயிரம் பொருள்கள் அதாவது ஆயிரம் இழைகள் இதற்கு பொருந்தாது என்று கண்டு பிடித்தேன்’ என்று கூறித் தன் தோல்வியையும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் காரணத்தினால் வெற்றிக் கொண்டார்.

ஆகவே, நண்பர்களே ! இவ்வாறாகத் தான் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பு, கனவு காணும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரி, இந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் வெற்றியைப் பெற முடியுமா? என்று நீங்கள் கேட்டால்.. வளர்த்துப் பாருங்கள், தெரியும் உங்களுக்கு நண்பர்களே !

எடை குறைக்க ஆசையா?

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது”

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஜோக்கு மச்சி ஜோக்கு

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட
வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ்
ஃபிங்கர் ஆய்டாது !!!

ஜோக்கு மச்சி ஜோக்கு ... (ஹா... ஹா... ஹா... )

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது .

இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது ,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு
ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .
ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?
(இது மல்லாக்கபடுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண
முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?........ "Tea"ல ஒரு "e"
இருக்கும்.
"Coffee"ல 2 "e" இருக்கும்.

ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??
யோசிக்கனும்............ ...!!

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?
(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

குடற்புண்

இன்றைய அவசர உலகில் நம்மில் அநேகர் சாப்பிடக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. கண்ட இடங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
சாப்பிடுவது, அல்லது நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பது என மாறுபட்ட உணவுப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளளோம். இதனால் அவ்வப்போது உணவு
செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலம் கிரகிப்பதற்கு உணவு இல்லாமல் வயிற்றிலுள்ள சளிச்சவ்வை கிரகித்து புண்ணை ஏற்படுத்துகிறது. இதற்கு
ஆங்கிலத்தில் அல்சர் என்று பெயர் வழங்கப்படுகிறது. இது பாரபட்சமின்றி பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாகும். இதனையே
சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் குன்மம் என்று அழைக்கின்றனர்.

‘குன்மம்’ என்ற சொல் குல்மம் - புதர் என்ற வடமொழிச் சொல்லின் சிதைவு.

வலி வரும்போது நோயினால் முன்பக்கம் குன்றவைக்கும் காரணத்தினால் இதனை குன்ம நோய் என்றும் கூறுவர்.

குன்மம் ஏற்பட காரணங்களாக சொல்லப் படுபவை

நேரத்திற்குச் சாப்பிடாமல் இருத்தல்.
அவசர அவசரமாக சாப்பிடுவது.
அடிக்கடி கோபம் கொள்ளுதல்
மந்தத்தை ஏற்படுத்தும் பொருட்களை அடிக்கடி உண்பது.

அதிக பட்டினி இருத்தல்
குறைவான தூக்கம் மற்றும் இரவில் நெடுநேரம் கண்விழித்திருப்பது.·
புகைப் பிடித்தல், அளவுக்கதிகமான மதுப்பழக்கம், போதைப் பொருட்களின் பாவனை. ·
·இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தோன்றும் குறிகுணங்கள்:

இந்த வியாதியில் விசேஷமான ஒரு அறிகுறி வயிற்றில் புரளும் ஒரு கட்டி போன்று பின்னல் முடிச்சாகும்.

செரியாமை, வயிற்றில் எரிச்சல், வாந்தி, உடல் வன்மை குறைதல், தேகம் மெலிதல், மனம் குன்றல் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

·பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, குமட்டல், ஏப்பம், வாயில் நீருறல், வாந்தி, புளியேப்பம்.

வயிறு எந்த நேரமும் அல்லது உணவு உண்ணும் முன் வரை வலித்தல் அல்லது எரிதல்

உண்ட உணவு செரியாமல் இருத்தல்

வயிறு உப்பலாக இருத்தல்.

அடிக்கடி வாந்தி உண்டாகுதல்.
·
புளித்த ஏப்பத்துடன், ஒருவித எரிச்சலுடன் வாயு வெளியேறும்.
·
எதிலும் ஆர்வம் குறைந்து, உடல் சோர்வாகக் காணப்படும்.

வாயுக் கோளாறு அதிகமாகக் காணப்படும்.

இந்த நோயை மேல்நாட்டவர் Dyspepsia (ஜீரண கோளாறு) Chronic gastritis (வயிற்று வேக்காடு) , Gastric ulcer (வயிற்று புண்), Duodenal ulcer (க்ரஹனிப்புண்), Gastric tumor (வயிற்றுக் கட்டி) என பல பெயரிட்டு அழைக்கின்றனர். இதற்கு சரியான மூல காரணத்தை மேல்நாட்டு வைத்திய நூல்களில் கூறப்படவும் இல்லை, கண்டுபிடிக்கப்படவும் இல்லை.

பொதுவாக வயிற்று நீர்ச் சுரப்பு அதிகமாவதாலும், குறைவதாலும் இந்த வியாதி ஏற்படுகிறதென்றும், அவ்விதச் சுரப்பு அதிகமாதல், குறைதல் இவைகளுக்கு நிச்சயமான காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இதற்கான காரணங்கள் பல விளக்கப்பட்டுள்ளன. இந்த நோய்க்கு காரணம் வயிறு மற்ற அவயங்களின் உள்பாகம் வறண்டு போவதேயாகும். வறட்சியினால் உள்புறத்தில் வலியும் கரடுமுரடான முடிச்சுக்களும், புண்களும் உண்டாவது சாதாரணம். இப்படி வறட்சி
ஏற்படுவதற்கு காரணம் வறண்ட உணவுகளை அதாவது நெய், எண்ணெய் கொழுப்புத் திரவங்கள் சம்பந்தப்படாத உணவுகளை அடிக்கடி, அதிகமாக உண்பதும், பசி வேளைகளில் சாப்பிடாமல் பசியை அடக்குவதும், உடம்பில் வறட்சியைக் கொடுக்கக்கூடிய வேலைகளைச் செய்வதும், அப்படிப்பட்ட சீதோஷ்ணங்களில் அதிகமாக பழகுவதும், உடம்பில் குளிர்ச்சி உண்டாவதற்கான பழக்கங்களாகிய எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் போன்ற பழங்கங்களை கடைப் பிடிக்காமல் இருப்பதும், சரீரம் பலவீனமாக இருக்கும்போது வாயுப் பதார்த்தங்களை அதிகமாக உண்பதும் ஆகும். மல மூத்திர வேகங்களை அடக்குவதும், மூலச்சூடும் குன்மத்திற்கு முக்கிய காரணமாகும். ஆதலால் இந்த நோய்க்கு ஆதாரம் வறட்சி, வாய்வு, வாதம், அக்னி பலத்தின் சமமின்மை. இவை நான்கும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை. ஆகையால் இந்த நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது உடம்பில் குளிர்ச்சி உண்டாக்கும் உணவு வகைகளை உண்பதும், லகுவான ஆகாரத்தை உண்பதும் மேலும், வாயுவைச் சமன்படுத்தக்கூடிய உணவுகளையும், மருந்துகளையும் உட்கொள்வதே ஆகும்.


மருந்துஉண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்


அதிக காரம், புளிப்பு, எண்ணெய் பலகாரங்கள், மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

·நெய் உருக்கி, மோர் பெருக்கி அதாவது நெய்யை நன்கு உருக்கியும், மோரில் அதிக நீர் சேர்த்தும் சாப்பிட வேண்டும்.

தினமும் இரவில் பால் அருந்துவது நல்லது.
·
டீ (tea), காஃபி அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.

மனக்கவலை, பரபரப்பு, மன உளைச்சல் இவற்றைக் குறைக்க வேண்டும்.

மணத்தக்காளிக் கீரை, முட்டைகோஸ் இவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.

மேற்சொன்னவற்றை சரியான முறையில் பின்பற்றினாலே குடற்புண் பாதி குணமாகி விடும்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

அழுகையோடு......கவிதை

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..
எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த முத்தம்..
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;

நமது தேசத்தின் சில அவலங்கள்!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!

புதன், 4 ஆகஸ்ட், 2010

மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.

உங்கள் உடலுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்.

1. கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

2. இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.

3. இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

4. இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

5. நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

6. நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.

7. ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

8. இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

9. மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

10 .மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

11. நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

12. உடலில் சராசரியாக 10,000,000,000, 000,000,000, 000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.

13. நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

14. உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

15. இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

16. மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.

17. பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

18. மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

19. தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.

20. நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

21. உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

22. நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

23. நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

24. மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

25. பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

இல்லை! இல்லை !!இல்லை !!!

அரேபியாவில் ஆறுகள் இல்லை
அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
ஈசலுக்கு வயிறு இல்லை.
உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.
சிங்கப்பூரில் காகங்கள் இல்லை.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பொதுவான தகவ‌ல்க‌ள்

உளுந்து வடையை அதிகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலு‌க்கு அ‌திகமான குளிர்ச்சியை உண்டாக்கும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

ஏ‌, ‌பி, ‌சி, ஆ‌கிய மூ‌ன்று வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் ‌நிறை‌ந்த ஒரே பழ‌ம் வாழை‌ப்பழ‌ம்.

க‌றிவே‌ப்‌பிலை‌யி‌ல் வா‌ய்‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கு‌ம் ரைபோ‌பிளே‌பி‌ன் எ‌ன்ற ச‌த்து‌ம், சோகை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் போ‌லி‌க் அ‌மில‌ச் ச‌த்து‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன.

வாழை‌த் த‌ண்டு உட‌லி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌ப் பொரு‌ட்களையு‌ம், ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ற்களையு‌ம் ‌நீ‌க்க வ‌ல்லது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இ‌ன்மையையு‌ம் நர‌ம்பு‌க் கோளாறுகளையு‌ம் கா‌ட்டுவதாக உ‌ள்ளது.

‌சிறு‌நீரக‌க் க‌ல் ஆப‌த்தை‌த் தடு‌க்கு‌ம் எலு‌மி‌ச்சை

எலு‌மி‌ச்சை‌யி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌சி ச‌த்து உ‌ள்ளது. இது உடலு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. அ‌தி‌ல்லாம‌ல் ப‌ல்வேறு மரு‌த்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌ப்பது எலு‌மி‌ச்சையாகு‌ம்.

த‌ற்போது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் க‌ல் உருவாகாம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் எலு‌மி‌ச்சை‌க்கு உ‌ண்டு எ‌ன்று மரு‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

‌‌சிறு‌நீரக‌த்தை நலமுட‌ன் பராம‌ரி‌ப்ப‌தி‌ல் எலு‌மி‌ச்சை‌யி‌ன் செய‌ல்க‌ள் ப‌ற்‌றி அமெ‌ரி‌க்கா‌வி‌ன் சா‌ன்டியகோ‌வி‌ல் உ‌ள்ள ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌சிறு‌நீரக நலமைய‌த்‌தி‌ன் இய‌க்குந‌ர் ரோஜ‌ர் ச‌ர் தலைமை‌யி‌லான குழு‌வின‌ர் ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர்.

ஆ‌ய்‌வி‌ல், ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் க‌ல் உருவாகாம‌ல் தடு‌ப்ப‌தி‌ல் எலு‌மி‌ச்சை ‌சிற‌ப்பாக செய‌ல்படு‌கிறது. ம‌ற்ற ‌சி‌ட்ர‌ஸ் ‌நிறை‌ந்த பழ‌ங்களை‌க் கா‌ட்டிலு‌ம் எலு‌மி‌ச்சை ‌ந‌ல்ல ‌வித‌த்‌தி‌ல் செய‌ல்படுவது‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

எனவே, ‌தினச‌ரி உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உ‌ப்பு, கா‌ல்‌சிய‌ம், புரோ‌‌ட்டீ‌ன் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் பா‌தி‌ப்பை‌க் குறை‌க்க, எலு‌மி‌ச்சை சாறு ‌மிகவு‌ம் உதவு‌ம்.

‌‌விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க

‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌‌‌ச்‌சிலை, துள‌சி, வே‌ப்ப‌ங்கொழு‌ந்து இவை மூ‌ன்றையு‌ம் ந‌ன்கு அரை‌த்து பா‌சி‌ப்பயறு, வெ‌ந்தய‌ம் பொடி செ‌ய்து கல‌ந்து தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்து வர க‌ற்றாழை நா‌ற்ற‌ம் ‌மிகு‌ந்த ‌விய‌ர்வை வருவது ‌நீ‌ங்கு‌ம்.

இது கோடை‌க்கு ஏ‌ற்ற கை வை‌த்‌திய முறையாகு‌ம்.

இதய நோ‌ய்களு‌க்கு‌ம் வை‌த்‌திய‌ம் உ‌ண்டு

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

 தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

   பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தூதுவளை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

 தூதுவளை எ‌ன்பது கொடி இனமாகு‌ம். இலை முழு‌க்க ‌சி‌றிய மு‌ட்களை‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ந்த‌க் கொடி‌யி‌ல் பூ‌க்கு‌ம் பூ மித ஊதா நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம். பழ‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம்.

தூதுவளை‌க் கொடியை பந்தல் போட்டு‌ம், வ‌ே‌லி‌யி‌ல் படர‌வி‌ட்டு‌ம் வள‌ர்‌க்கலா‌ம். கொடி‌யி‌ல் இரு‌க்கு‌ம் மு‌ட்க‌ளி‌ன் காரணமாக எ‌ந்த கா‌ல்நடைகளு‌ம் இதனை சா‌ப்‌பிடாது. எனவே பாதுகா‌‌க்க வே‌ண்டிய அவ‌சியமே இ‌ல்லை.

தூதுவளை‌க் கொடி‌யி‌ன் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை.

இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும்.

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ந்த கொடி‌யின‌ம் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் சாதாரணமாகவே வள‌ரு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.

வியாழன், 29 ஜூலை, 2010

உங்களுக்கு தெரியுமா.?

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.


# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

# ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

# ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும்.

# உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

# டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

# வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

# பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

# மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

# கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

# கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

# ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

# சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்

# ஹக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கோல்கட்டதா நகரம்.

# நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

# ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

# நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.