நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 18 மார்ச், 2015

புகைப் பிடிப்பதை நிறுத்த உதவும் வெப்சைட்!!!

ஒவ்வொரு சிகரெட்டும் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது. * ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும். *
 
சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதி நிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.
*
புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள். *
எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.*
புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம். *
உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.அடுத்தடுத்து இப்படி வெளியாகும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளால் அண்மைக் காலமாக, சிலர், உண்மையிலேயே புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பதாகவும், அதற்கான இணைய தளம் எதுவும் உள்ளதா எனக் கேட்டார்கள். அனைவரும் இணையம் பயன்படுத்துவோர் என்பதால், அவர்களுக்கு இணையம் நல்ல கட்டுப்பாடு அதிகாரியாகச் செயல்படும் என எண்ணி, அப்படிப்பட்ட ஒன்றை இணையத்தில் தேடினோம்.அப்போதுதான் கண்ணில் பட்டது http://smokefree.gov/.
இந்த தளம் இது போல விருப்பம் உள்ளவர்களைத் திசை மாறாமல் கொண்டு செல்கிறது. அதற்குப் பல வழிகளைக் கையாள்கிறது.இந்த இணைய தளம் சென்றவுடன், முதலில் புகை பிடிப்பதிலிருந்து வெளியேற உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்களா? என்ற வினாவுடன் ஒரு பிரிவினைப் பார்க்கலாம்.
ஏனென்றால், வெகு காலம் புகை பிடிக்கும் ஒருவர், நிச்சயமாய் நிறுத்துவதற்கான முடிவினை எடுக்க வேண்டும். அதில் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், அடுத்து தரப்படும் பிரிவில், எந்த எந்த வழிகளில் புகை பிடிப்பதனை நிறுத்தலாம் என்று பல வழிகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
மேலும், இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம், சத்தான உணவினை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகளால் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது எனப் பல பிரிவுகளில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
புகைப்பவர்கள் எல்லாரும் ஒரு முறை இந்த தளம் சென்று பார்த்தால், நமக்காக இத்தனை முயற்சிகள் எடுத்து தகவல்களைத் தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு, புகைப்பதனை நிறுத்த முயற்சிப்பீர்கள்

நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் !!

சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.தற்போது, நாண் ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம்.ஆனால் இதில் தீமைகள் ஏராளம் நிறைந்துள்ளன,

நாண் ஸ்டிக் பாத்திரமானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பெர்ப்ளூரோஆக்டனாயிக் அமிலம் என்ற சேர்மம் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.இந்த அமிலம் கார்சினோஜெனிக் என்னும் புற்றுநோயை உண்டாக்கும். அதிலும் நாண் ஸ்டிக் பாத்திரத்தை அளவுக்கு அதிகமாக சூடேற்றும் போது, அது இந்த அமிலத்தின் நச்சுக் புகையை வெளியேற்றப்பட்டு, உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்கும்.
பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் ஹைப்போ தைராய்டு ஏற்படக்கூடும்.
அறிவாற்றல் குறைபாடுகள் தொடர்ச்சியாக நாண் ஸ்டிக் தவாவை பயன்படுத்தினால், அதில் உள்ள நச்சுப் புகை உணவில் கலந்து, அதனை உட்கொண்டு வருவதன் மூலம் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும்.
எலும்பு நோய்கள் தொடர்ந்து நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், அவை எலும்புகளின் வலிமையை குறைத்து, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.
புற்றுநோய் நாண் ஸ்டிக் தவாவில் உள்ள சேர்மம், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜெனிக் எனும் கூட்டு. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், எளிதில் புற்றுநோய் உடலைத் தாக்கும்.
மாரடைப்பு ஆய்வு ஒன்றில், நாண் ஸ்டிக்கில் உள்ள அமிலம் உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகப்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் ட்ரை கிளிசரைடு அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் இருக்கும்.
இனப்பெருக்க பிரச்சனை தற்போது தம்பதியர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாததற்கு காரணம், அவர்கள் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் உணவை சமைத்து உண்பது என்றும் சொல்லலாம். குறிப்பாக நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்த உணவை பெண்கள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு குழந்தை பிறப்பதிலும், குழந்தை பிறப்பு குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

புதன், 11 மார்ச், 2015

முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம் !!

வெங்காயம் சமையலுக்குதான் பயன்படும் என்றில்லை! தற்போது அனைத்து வகையான உபயோகங்களுக்கும் பயன் படுகிறது.வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது. அதே சமயம் சிறந்த கிருமி நாசினியாகும்.
நம் முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவ வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம். மேலும் முகத்தில் உள்ள கரு வண்ண புள்ளிகளும் மறையும்.
வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும்.
கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கண்களை விழித்து அலம்பினால் சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும். ஆரோக்கியமாக வாழவும் புத்தெம்புடன் காணவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

ஞாயிறு, 8 மார்ச், 2015

பற்களைப் பாதுகாப்பது எப்படி?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்.
ஒருவரின் முகத்திற்கு அழகைத் தருவது அவரது பற்களே.
பற்கள் சீராகவும், ஒழுங்காகவும் அமையாவிட்டால் மனிதர்களின் அழகே கேள்விக்குறியாகி விடும்
.
நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை அரைப்பதுடன், உணவானது எளிதில் செரிமானம் அடைய பற்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
பல்போனால், சொல்போச்சு என்பார்கள். எனவே நாம் பேசுவதற்கும் பற்கள் மிகவும் முக்கியம்.
பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுகளே. ஈறுகளில் நோய் ஏற்படுவதன் முதல்கட்டம், நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் போன்றவை ஏற்படலாம்.
பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே சாதாரணமாகவே உள்ள இடைவெளி நோய் ஏற்படும்பட்சத்தில், பாக்டீரியா மற்றும் அதனால் வெளிவரும் விஷப் பொருட்களாலும் உமிழ் நீருடன் சேர்ந்து ஈறுகளில் பள்ளத்தை ஏற்படுத்தி விடும். இதன் தொடர்ச்சியாகவே ஈறுகளில் அதிக இடைவெளி ஏற்பட்டு, பற்கள் ஆடத்தொடங்கி முடிவில் பற்களை எடுக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு விடும்.
சில நேரங்களில் தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

ஈறுகளில் இரத்தம் கசிதல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படக்கூடும்.
பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படர்ந்து, நாளடைவில் காரையாக மாறி விடுகிறது