உடலில் ஒவ்வொரு இயக்கமும் சீராக இருந்தால்தான் நமது உடல் நலத்துடன் இருக்கிறது என்று அர்த்தமாகும். உடலில் எந்த இயக்கம் பாதிக்கப்பட்டாலும் அது நோய்தான்.
ஆனால், இந்த செரிமானத் திறன் பாதிக்கப்பட்டால் உடலே பாதிக்கப்பட்டதாகும்.
அதாவது, செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் தொடர்ந்து பல வியாதிகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஏதேனும் நோய் என்றால், நேற்று என்ன சாப்பிட்டீர்கள் என்று மருத்துவர்கள் கேட்பதற்கும் இதுதான் அடிப்படை.
நாம் சாப்பிடும் உணவும், செரிமானத் திறனும் சீராக இருந்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவுக் குறையும்.
எனவே, நமது செரிமானம் சீராக இருக்க உரிய இடைவேளை விட்டு, எளிதான உணவுகளை சாப்பிட வேண்டும். கடினமான உணவாக இருப்பின் அவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக