நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 22 மார்ச், 2018

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?

குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய்  பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால்  கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால் , உடல்  எடையை குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது  நல்லது.

கத்தரிக்காய் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம் குறையும்.

கத்தரிக்காய் சாப்பிடுவதால் பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

செவ்வாய், 20 மார்ச், 2018

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் தெரியும்

வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.

அதாவது நீரை கொதிக்க வைத்து அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து 3 நிமிடம் கழித்து, அதை வடிகட்டி, தேன் கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையில் குடிக்கலாம்.

வெந்தய டீ குடிப்பதன் நன்மைகள்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்கள் போன்ற பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, நம் உடம்பில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவும் குறையும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 1 டம்ளர் வெந்தய டீயை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி, குடல் மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய நோயின் தாக்கம், விட்டமின் B1 குறைபாட்டினால் ஏற்படும் பெரிபெரி நோய் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்கிறது.
பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவும்.
வெந்தய டீயை தினமும் குடித்து வந்தால் அது நம் உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.
வெந்தய டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அது மூட்டு வலி, முழங்கால் வலி முழுவதுமாக குணமாக்கும்.
சைனஸ், சளித் தொல்லை, பொடுகு பிரச்சனை, தொண்டைப்புண், வாய் புண் மற்றும் உடல் துர்நாற்றம் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

வியாழன், 1 மார்ச், 2018

விக்கல் ???

விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல் எடுக்கும், சில சமயங்களில் இது ஆபத்தில் கூட முடியும், மூச்சுக் குழாயில் உணவு சென்று அடைத்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.

உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது.

உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும்.

விக்கல் வர என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள்.

வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

விக்கல் நிறுத்த என்ன செய்வது?

* மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள்
*
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும்.
*
மென்மை உப்புகள் பயன்படுத்தவும்
*
எலுமிச்சை சாபிட்டால் விக்கல் நின்றுவிடும்.