நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 21 டிசம்பர், 2015

வைட்டமின் b நிறைந்த உணவுகள்

உடலுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் உடலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் ‘B’ பற்றி அறிந்து கொள்வோம்

வைட்டமின் ‘B’ நீரில் கரையக்கூடிய உயிர்ச்சத்தாகும். உடலின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் இதன் பங்கு அதிகம். வைட்டமின் ‘B’ கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன.

வைட்டமின் ‘B1’ (Thiamine)

வைட்டமின் ‘B2’ (Riboflavin)

வைட்டமின் ‘B3’ (Niacinamide)

வைட்டமின் ‘B5’ (Pantothenic acid)

வைட்டமின் ‘B6’ (Pyridoxine)

வைட்டமின் ‘B7’ (Biotin)

வைட்டமின் ‘B9’ (Folic acid)

வைட்டமின் ‘B12’ (Cyanocobalamin)

வைட்டமின் ‘B’ ன் பொதுவான பயன்கள்

உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

எலும்பு, தசை இவற்றின் உறுதிக்கு வைட்டமின் ‘B’ பயன்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு புத்துணர்வு கொடுக்கிறது.

மூளையின் சுறுசுறுப்புக்கும், செயல்பாட்டிற்கும் வைட்டமின் ‘B’ அதிகம் உதவுகிறது.

நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி செயல்பட வைக்கிறது. இரத்த சோகை எனும் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

உணவு செரிமானத்தில் அதிக பங்கு வகிக்கிறது.

இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீர்களை பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. அறிவு வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் அதிகம் உதவுகிறது.

வைட்டமின் ‘B1’

இந்த உயிர்ச்சத்து உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தக் குழாய்களிலுள்ள அடைப்புகளை நீக்கி பலம் கொடுக்கிறது. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. இந்த உயிர்ச்சத்து மனித உடலுக்கு தினமும் 50 மி.கி. அளவு தேவைப்படுகிறது. அதற்கு அதிகமானால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட வைட்டமின்1’ கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, உருளைக் கிழங்கு, முட்டை, ஆரஞ்சு இவற்றில் அதிகளவு உள்ளது. அசைவ உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B2’

உடல் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இது நுண்ணூட்டச் சத்தாகும். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. சராசரியாக ஒரு மனிதன் தினமும் உணவின் மூலம் 1.2 மி.கி. அளவு உட்கொள்ள வேண்டும். வைட்டமின்2’ பால், வெண்ணெய், முட்டை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, தக்காளி, காளான் மற்றும் மஞ்சள் நிறங்கொண்ட பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B3’

இது மனித உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தாகும். தினமும் 40 மி.கி. - 50 மி.கி. அளவு உடலுக்குத் தேவைப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உண்ட உணவு செரிப்பதற்கும், அவற்றிலுள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மன அழுத்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. நினைவாற்றலை அதிகரிக்கும். இவை புரதச் சத்து நிறைந்த உணவுகளில் அதிகம் காணப்படுகிறது.

முட்டை, பால், நெய், சோயா பீன்ஸ், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B5’

இவை சருமத்தைப் பாதுகாப்பதுடன், தலைமுடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் உயிர்ச்சத்தாகும். நரம்புகளை வலுப்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. உடலில் இன்சுலின் அளவை சீராக சுரக்கச் செய்து, சர்க்கரை நோயிலிருந்து விடுபட வைக்கிறது. இது பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகளில் அதிகம் உள்ளது. நன்கு வேகவைத்த உணவுகளில் இச்சத்து வெளியேறி விடுகிறது.

வைட்டமின் ‘B6’

மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. இவை காய்கறிகள், வாழைப்பழம், முந்திரி, பாதாம் பருப்பு, இவைகளில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B7’

கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பச்சைக் கீரைகள், சமைக்காத உணவுகள் மற்றும் அசைவ உணவுகளில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ‘B9’

செல்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இரும்புச்சத்தை உறிஞ்ச முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தச் சோகையைப் போக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. இந்த உயிர்ச்சத்து மீன்களில் அதிக அளவு உள்ளது. பழங்கள், காய்கறிகள், கீரைகளிலும் உள்ளது.

வைட்டமின் ‘B12’

மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கவும், ரத்தச் சோகையைப் போக்கவும் இந்த உயிர்ச்சத்து மிகவும் பயன்படுகிறது.

நரம்பு மண்டலத்தை சிராக்கி செயல்பட வைக்கிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், வேகவைக்காத உணவுகள், மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘B’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

வைட்டமின் ‘B1’

வைட்டமின் ‘B1’ குறைபாட்டால் பெரி பெரி என்ற நோய் உண்டாகிறது.

உடலின் எடை குறைந்து போகும். நரம்புகளின் செயலிழப்பு காரணமாக கை, கால் மறத்துப் போகும். உடலெங்கும் வலி உண்டாகும். ஞாபக மறதி அதிகரிக்கும். மூளை அடிக்கடி சோர்வாகும். உடல் எப்போதும் சோர்வுடனேயே இருக்கும். இரத்தச் சோகை ஏற்படும். சருமத்தில் அதிக சுருக்கங்கள் தோன்றும். நகங்கள் வெளுத்து காணப்படும். விரல், மணிக்கட்டுப் பகுதிகளில் வலி ஏற்படும். இதய துடிப்பானது சில நேரங்களில் அதிகரித்தும், சில நேரங்களில் குறைந்தும் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்.

வைட்டமின் ‘B2’

வைட்டமின் ‘B2’ குறைந்தால் நாக்கு வெடித்து காணப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அடிக்கடி ஜலதோஷம், தும்மல் உண்டாகும்.

வைட்டமின் ‘B3’

வைட்டமின் ‘B3’ குறைந்தால் வயிற்றுப்போக்கு உண்டாகும். நினைவாற்றல் குறையும். சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படும். பெல்லகரா (Pellgra) என்ற நோயின் பாதிப்பு உண்டாகும்.

வைட்டமின் ‘B5’

வைட்டமின் ‘B5’ குறைந்தால் சரும பாதிப்பு உண்டாகி,சருமத்தில் புண்கள் ஏற்படும். தோலில் சுருக்கம் உண்டாகும். தலைமுடி உதிர்தலும் இதன் குறைபாடுதான். சர்க்கரை வியாதி உண்டாக வாய்ப்புள்ளது.

வைட்டமின் ‘B6’

வைட்டமின் ‘B6’ குறைந்தால் இரத்தச் சோகை ஏற்படும். பற்கள் உறுதியிழக்கும். மன அழுத்தம் உண்டாகும். அதிக தாகம், இரத்த அழுத்தம் உண்டாகும்.

வைட்டமின் ‘B7’

வைட்டமின் ‘B7’ குறைந்தால் கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் சிறுகுழந்தைகள் வரை வளர்ச்சி பாதிக்கப்படும்.

வைட்டமின் ‘B9’

வைட்டமின் ‘B9’ போலிக் அமிலக் குறைபாட்டில் தாய்க்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இரத்த சோகை உண்டாக்கும். மூளை அதிக சோர்வடைந்து ஞாபக சக்தியைக் குன்றச் செய்யும்.

வைட்டமின் ‘B12’

வைட்டமின் ‘B12’ குறைபாட்டால் இரத்தசோகை உண்டாகும், நரம்புத் தளர்வு உண்டாகும். நினைவாற்றல் குறையும். பெரும்பாலும் இந்நோய் முதியவர்களை அதிகம் தாக்கும். சில சமயங்களில் பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

வைட்டமின் ‘B’ சத்து குறைவு சோதனை மூலம் கண்டறியப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இயற்கை முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியம் பெறலாம்.

வியாழன், 17 டிசம்பர், 2015

சோளமாவை வைத்து அல்வா எப்படி செய்வதென்று ஒரு ஸ்வீட் பதிவு !

தேவையான பொருள்கள் -
சோளமாவு - 100 கிராம
சீனி - 200 கிராம
நெய் - 3 மேஜைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 15
கேசரி கலர் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 200 மில்லி

செய்முறை

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவுடன் 50 மில்லி தண்ணீர் ஊற்றி கட்டி வராதபடி கலக்கி வைக்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.





கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்
  





அடுப்பில் அதே நான்ஸ்டிக் கடாயை வைத்து மீதமுள்ள 150 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் சீனியை போடவும்.



 சீனி கரைந்ததும் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
அதே நான்ஸ்டிக் கடாயில் சீனிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.





நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையை சேர்த்து 10 நிமிடம் அல்லது அல்வா பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.


அல்வா பதம் வந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், முந்திரிப்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.


சுவையான சோளமாவு அல்வா ரெடி.

புதன், 9 டிசம்பர், 2015

ஆரோக்கிய இதயத்தை எப்படி பாதுகாக்கலாம் !!!


இதய சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். இதயம் தான் நமது உடல் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக்கொள்கிறது.. ஏனெனில் இருதய அமைப்பில் அடங்கியுள்ள இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உடலை பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமானதாகும். ஆதலால் போதுமான உடற்பயிற்சியும், ஆரோக்கிய உணவுகளும் இதய பாதுகாப்பிற்கு அவசியம். இதை கடைபிடித்தால் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

உணவு
கட்டுப்பாடு =உணவு
கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மயோ கிளினிக் நிறைவுற்ற மற்றும் கொழுப்பின் எல்லையை பரிந்துரைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உயர் இரத்த கொழுப்பின் அளவு காரணமாக தமனியில் உள்ள பிளேக் கட்டமைப்பை அதிகரிப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுகிறது. குறைந்த கொழுப்புசத்துள்ள உணவுகளான மீன், கொழுப்பில்லா பால், பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு, முட்டையில் வெள்ளைக்கரு போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள், ஃபைபர், போன்றவை இதய பாதுகாப்பிற்கான முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது.

எடை நிர்வாகம்தோற்றத்தை
கவனத்தில் கொண்டாலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் கவனம் வேண்டும். உடல் பருமனாக இருந்தால் கரோனரி இதய நோய் மரணத்தை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. 30 64 வயது வரை உள்ளவர்கள் குறிப்பாக எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.. பருமனான உடல் கொண்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு மற்றும், குறைவான ஹெச்டிஎல், போன்றவை இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான மனதை பராமரிக்க வேண்டும்.

உடற்பயிற்சிஆரோக்கிய இதயத்திற்கு தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஒட்டமைப்பு மற்றும் தசைகள் வலுவடைகின்றது. நடைபயிற்சி, நெடுந்தூர நடை, ஜாகிங், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்றவை ஆரோக்கிய இதயத்தை மேம்படுத்த சிறந்த வழிகள். தினமும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளான நாயுடன் நடைபயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி, வெகுதொலைவில் இருக்கும் கடை, போன்றவைகளுக்காக உங்களது காரை பயன்படுத்துவதை விட்டு விட்டு உங்களது கால்களை பயன்படுத்துங்கள் இது ஆரோக்கிய இதயத்திற்கு சிறந்த பங்களிப்பாகும்.

வாழ்க்கை முறைஉங்கள்
ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யுங்கள். அமெரிக்க இதய சங்கம் புகைபிடிப்பது தான் இதய நோயிற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது. ஆதலால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதலாக புகைபிடிப்பதால் நுரையீரல் நோயை ஊக்குவித்து, தடிப்பு ஏற்படுவதன் மூலம் இதயம் பாதிப்படைகிறது. புகை பிடிப்பது பக்கவாதம், வெளிப்புற தமனி நோய், அயோர்டிக் குருதி நாள நெளிவு போன்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஆபத்து அறிகுறிகள்

அசெளகரியமான உணர்வு, மார்பு மையப்பகுதியில் அழுத்தம், முழுவதுமாக அழுத்தம் மற்றும் வலி, இரண்டு கைகளிலும் வலி, தாடை, கழுத்து அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அழுத்தத்துடன் கூடிய வலி ஏற்படும். , மூச்சுத்திணறல், குளிர்ந்த வியர்வை, குமட்டல், இலேசான மயக்கம், போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். திடீரென ஏற்படும் ஸ்ட்ரோக், திடீர் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

திங்கள், 30 நவம்பர், 2015

மனதை வருடிய வரிகள்

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்!!!
தந்தையிடம் பணம் இருந்தால் அவர் பெயரை நம் பெயரோடு இணைகிறோம் நம்மிடம் பணம் இருந்தால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம்!!!
உன் வாழ்கையில் எந்த ஒரு நாளில் உன் முன்னாள் எந்த பிரட்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய்!!!
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும்!!!
ஆயிரம் பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒருகல் போதும்! ஆயிரம் மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒருகெட்டவன் போதும்!
"நமக்கு வரும் தடைகளை கண்டு மிரளுவதை விட ஒரு முறை துணிவதே மேல் வரலாற்றில் பல சரித்திரங்களை மாற்றியவர்கள் எல்லாம் தடைகளை தவிடு பிடியாக்கியவர்கள்

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன

நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்..
மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். – நபிகள் நாயகம்

நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்லாவோட்சு

தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பயனும்தான் வெற்றிக்கான வழி.
மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு. உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்..!
அன்பிற்கும் நோபல் பரிசு வழங்க பெற்று இருப்பது உண்மையில் பாராட்ட கூடிய விசையம் அன்பையே மையமாக வைத்து வாழ்ந்து காட்டிய அன்னை தெரேசா தான்

இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல . அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்களால் தான்.
"வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையே செய்வோம்

நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்

நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்!
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
பயத்தை விடு! இல்லை இலட்சியத்தை விட்டு விடு!"

நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். – தோழர் மாவோ

பு ரட்சிகள் உருவாகுவதில்லை நாம்தான் உருவாக்கவேண்டும் ! தோழர்சேகுவாரா

சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினாலென்ன? நின்றாலென்ன?
நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்!
நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்

கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூல வேர்"..!
எத்தனை நிறைகள் இருந்தாலும், ஒரு குறை இருந்தால்!!! இவ்வுலகம் உன்னை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடும்!!!
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !! தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு!
ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும் !! தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவதே இல்லை!!
விதைகள் கீழ் நோக்கிஎறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்..! விழும்போது விதையென விழு விருட்சமாய் எழு!
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை !!! உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான் !!!
"அறிவின் ஆழம் புரியட்டும் சிகரம் கண்ணில் தெரியட்டும் …!
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவான செயல் ..!!
முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும்

நம்மை சிந்திக்க தூண்டும் வரிகள் !!!
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்

உண்மையான போராளியின் உண்மையான வார்த்தைகள் !!
"வெற்றியே விட தோல்விக்கு பலம் அதிகம் " "வெற்றி சிரித்து மகிழ வைக்கும் " "தோல்வி சிந்தித்து வாழ வைக்கும் "

நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
இதமான வார்த்தைகளை பேச முடியாத பட்சத்தில்மௌனம் காப்பது மேல் அல்லது உங்களின் சூழ்நிலையை மாற்றுவது சிறந்தது!
"போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல .. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே"…!!
ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை..!

புரட்சியாளன் வெற்றிப்பெற்றால் அவன் போராளி..! தோல்வியுற்றால் அவன் தீவிரவாதி..!