தாய்ப்பால்தான் குழந்தைக்கு மிகச் சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தாய்ப்பால் தரும் அன்னைக்கும் தாய்ப்பால் தருவதால் பல்வேறு நலன்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற பால் மூலம் குழந்தையின் உடல் வேண்டுமானால் நன்கு வளர்ச்சியடையலாம். ஆனால் மூளை வளர்ச்சிக்கு உரியது தாய்ப்பால்தான்.
எனவே அந்த அரிய தாய்ப்பாலை அன்னை தனது குழந்தைக்கு நிச்சயம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த வாரம் தாய்ப்பால் வாரமாக சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக