நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 27 செப்டம்பர், 2018

குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகிவிடலாம்? இது உண்மைதானா?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்காது.

குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கணையத்தை பாதுகாக்கும் உணவுப் பொருட்கள்...!

மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் சத்து, புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. தினமும் உணவில் சிறிதளவு மஞ்சத்தூளைச் சேர்ப்பதால், நாம் புற்றுநோய்ப் பிடியிலிருந்து தப்பிக்கலாம். மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

காளானிலுள்ள நார் சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் டி2, குறைந்த கலோரி சத்து இவை கணைய பாதுகாப்பிற்கு ஏற்றவை.

காலை நேரத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி முதலிய பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது, கணையத்தைப் பலப்படுத்தும். குறிப்பாக ஆரஞ்சு, மஞ்சள்,  இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள காய்கறி வகைகளில் பீட்டா கரோட்டின் சத்து அதிகமாகவே இருக்கும். இந்த வகைச் சத்துகள் கொண்ட காய்கறிகள்  புற்றுநோயில் இருந்து கணையத்தைப் பாதுகாக்கும்.

தயிர் கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கணையத்தை வலிமைப்படுத்தும். புரோபயாடிக் எனும் நல்ல  நுண்ணுயிரிகளைக் கொண்ட தயிர், செரிமானத்துக்கு உதவும். கணையத்தின் மிக முக்கிய வேலை செரிமானம். எனவே தயிர் அதிகம் சேர்த்துக்கொள்வது  நல்லது.

பசலைக்கீரைக்கு கணையத்தினை புற்று நோயிலிருந்து கூட பாதுகாக்கும் திறன் உண்டு. வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள  வேண்டும்.

பூண்டில் உள்ள அலிசின் எனும் பயோஆக்டிவ் சத்து, கணையத்தில் உருவாகும் கட்டிகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாத்து, பலப்படுத்தும்.

அன்றாட உணவுகளில் சிறிதளவு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால், இன்சுலினைச் சரியாகச் சுரக்க உதவுகிறது.

புரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கணையப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சிறுநீர் பாதை தொற்றுகளை நீக்கும் இயற்கை உணவுகள்!

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருக்கும்.


சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட.

கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பாதுகாப்பு தரவல்லது.

காரட் தினமும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது என்று கூறுவார்கள். காரட் உங்கள் உடல்நலத்தை காக்கும் திறன் கொண்டது. மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது.

தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டதாகும். இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வராமல் தடுக்க உதவும்.

முள்ளங்கி அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவார்கள். ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க பயன்படுகிறது.

திங்கள், 24 செப்டம்பர், 2018

பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்

பற்களில் இருக்கும் வெண்மை கூட  ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். முறையில்லாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் எனாமல் மற்றும் வெண்மை தன்மை குறைந்துவிடும். எனவே குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து பற்களை வெண்மையாக பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

1) நம் உருவத்திற்கு அடையாளமாக இருக்கும் தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன்அளிக்கும் ஒரு  சிறந்த பொருள் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை வாயிற்குள் ஊறி, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்ணெய்யை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும்.

2) நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடார் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்கள் தேயிக்க வேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை அடையும்.

3) பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் முக்கியமானது எலுமிச்சை பழம். இதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேய்த்து அதை கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் தொடர்ந்து  செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை உடனே பார்க்கலாம்.

4) நல்ல தரமுள்ள பேக்கிங் சோடாவை  வாங்கி பசையாக மாற்றி, அதை பற்களில் தினமும் தேயித்து கொப்பளித்து வர வேண்டும் இந்த முறைகளை பின்பற்றி வந்தால் பற்களில் வெண்மை பளிச்சிடும்.