நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 29 நவம்பர், 2010

உடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.


'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்ச்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.

எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.






வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

ஞாயிறு, 28 நவம்பர், 2010

எந்த வயதில் பெண்கள் அழகு

ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.


அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்

கல்யாண சீசனில் புது மணப்பெண்களும், புது மாப்பிள்ளைகளும் அழகுக்கு அழகு சேர்க்க அலை பாய்வார்கள். மினுமினுக்கும் அழகுடன் கல்யாணப் பெண்கள் மணமேடையை அலங்கரிக்கும் காலம் இது.


கல்யாணம் என்றாலே பெண்கள் கற்பனா லோகத்தில் மிதக்கத் துவங்கி விடுவார்கள். மணப்பெண்கள் கல்யாண நாளன்று பொலிவுடன் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் சகட்டு மேனிக்கு கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். தோகள், உறவினர்கள், அழகு நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளில் பொதுவானவை 7 கேள்விகள். அவற்றுக்கு இங்கு பதில்கள் உள்ளன.

மணநாளன்று பொலிவாக இருக்க என்று முதல் சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும்?

திருமணத்திற்கு முன்பு, குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாகவே சருமத்தைப் பராமரிக்கத் துவங்கவும். தோல் நிறத்தை மெருகூட்டவும், புள்ளிகளையும் போக்க 3 மாதமாவது தேவைப்படும் என்று மும்பையைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் ஸ்வாதி ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

மணப்பெண்களின் சருமத்தின் மெருகை கூட்ட எந்த முறை சிறந்தது?

தோல் இளமையாக இருக்க, மினுமினுக்க, நிறத் திண்மையை கூட்ட பல சிகிச்சை முறைகள் உள்ளன என்று டெல்லியைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் சப்ரா கூறினார். இதில் ஆக்சிஜன் பேஷியல், லேசர் சிகிச்சை, கடல்பாசி சிகிச்சை சிறந்தவை. லேசர் சிகிச்சைக்கு 10 அமர்வு (சிட்டிங் )தேவைப்படும். பின்னர் பாருங்கள் உங்கள் தோல் எப்படி இளமையாகவும், அழகாகவும் இருக்கிறது என்று.

போடாக்ஸ் பயன்படுத்தலாமா? அவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பனதா?

தோல் இறுக்கத்துடனும், உறுதியாகவும் இருக்க பல மணப்பெண்கள் போடாக்ஸை பயன்படுத்துகிறார்கள். மேலும், மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தாரும் போடாக்ஸை பயன்படுத்துகின்றனர் என்கிறார் டாக்டர் ஸ்ரீவஸ்தவா.

முகச் சுருக்கத்தை கல்யாணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு சரி செய்துவிட முடியாது. சுருக்கமில்லாத நல்ல தோல் வேண்டுமானால் குறைந்தது 1 மாதத்திற்கு முன் போடாக்ஸ் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நிபுணர்களிடம் சென்று இந்த சிகிச்சையை செய்து கொண்டால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது.

அழகான தோல் கிடைக்க நான் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

மணப்பெண்கள் நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். யோகா, மனஅழுத்தத்தைப் போக்கும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றை 2 மாதத்திற்கு முன்பே துவங்க வேண்டும் என்கிறார் டாக்டர் சப்ரா. பழங்கள், காய்கறிகள், ஒரு நாளைக்கு 3 தரம் கிரீன் டீ ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீவஸ்தவா.

நல்ல தோலைப் பெற அதற்கு ஈரத்தன்மை அளிப்பது அவசியம். எனவே, கிலென்சிங், டோனிங், மாய்சுரைசிங்கை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

நான் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்தலாமா? இது உகந்ததா?

ஒரு மணப்பெண் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதென்றால் ஒரு மாதத்திற்கு முன்பே உபயோகிக்கவும். அப்போது தான் ஏதாவது அலர்ஜி இருந்தாலும் திருமணத்திற்குள் மறைந்துவிடும் என்கிறார் சப்ரா. தோல் மினுமினுக்க வேண்டுமென்றால் வெயிலைத் தவிர்க்கவும்.

திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு எவ்வளவு செலவாகும்?

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு ரூ. 5,000ல் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். சிகிச்சைக்கு ஏற்றவாறு செலவும் அதிகரிக்கலாம்.
இந்த நிபுணர்கள் சொல்வதை செய்து பாருங்கள். பிறகு உங்கள் முகத்தில் வெட்கப் பூ சிரிப்பது போல சருமமும் ஜில்லென மினுமினுப்பதைக் காணலாம்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம்

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. மசால் வடை சுட்டாலோ, மீன் குழம்பு வைத்தாலோ எங்கிருந்தாலும் அவர்கள் உடனே ஓடிவந்துவிடுவது இதனால்தான்.

உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து லண்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் உளவியல் பிரிவு தலைவர் லொரான்ஸோ ஸ்டாஃபோர்ட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தெரியவந்த தகவல்கள்:


மூளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே வாசனையை நுகர்வதற்கு நம்மை தூண்டுகிறது. இவ்வாறு தூண்டப்படும் நேரத்தில் மோப்ப சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். வாசனை கமகமக்கும் இடத்துக்கு சென்றதும் ‘அதை எடுத்து சாப்பிடு’ என்று மூளையின் இன்னொரு பகுதி நம்மை தூண்டும். இதனால்தான் அதை சாப்பிடுகிறோம்.
மூளை இப்படி அடிக்கடி தூண்டினால் நிறைய சாப்பிட்டு உடல் பருமனாகிறோம். மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு மோப்ப சக்தி குறைவு. பருமனாக உள்ளவர்களுக்கு வாசனையை வைத்தே உணவின் ருசியை நிர்ணயிக்கும் மோப்ப சக்தி அதிகம்.
இதனால்தான் ருசியான உணவுகளை எளிதில் அடையாளம் காண்கின்றனர். பருமன் அதிகமாகிறதே என்ற எச்சரிக்கை உணர்வு இல்லாமல் பிடித்த உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுகின்றனர். அதிகளவு குண்டாகி அவஸ்தைப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.

தும்மலுக்கு காரணம்

து‌ம்ம‌ல் எ‌ன்பது உட‌‌ல் ‌‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க செ‌ய்யு‌ம் த‌ன்‌னி‌ச்சையான செய‌ல். இதனா‌ல் ப‌ல்வேறு ‌கிரு‌மிக‌ளிட‌ம் இரு‌ந்து நமது உட‌ல் பாதுகா‌க்க‌ப்படு‌கிறது.

சு‌ற்று‌ச்சூழ‌லி‌ல் இரு‌க்கு‌ம் ‌கிரு‌மி ஒ‌ன்று உடலு‌க்கு‌ள் நுழைய மு‌ற்படு‌ம் போது அதனை எ‌ச்ச‌ரி‌க்கு‌ம் கரு‌வியாகவு‌ம் து‌ம்மலை‌க் கூறலா‌ம்.
பலரு‌க்கு‌ம் பல ‌வித‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ஒ‌‌வ்வாமை‌ வெ‌ளி‌ப்படு‌ம். தொட‌ர் து‌ம்ம‌ல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல், கா‌ய்‌ச்ச‌ல், சரும‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு என ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌க‌ளி‌ல் இது ஏ‌ற்படு‌ம்.
மூ‌க்கு வ‌ழியாக ஏதேனு‌ம் ‌கிரு‌மியோ ‌அ‌ல்லது தூசோ உ‌ள்ளே நுழைய மு‌ற்படு‌ம் போது அ‌ங்‌கிரு‌‌‌க்கு‌ம் நர‌ம்புக‌ள் மூளை‌‌யி‌ன் தகவலை‌ப் பெறாமலேயே தன்‌னி‌ச்சையான ஒரு செயலை செ‌ய்‌கிறது. அதுவே து‌ம்ம‌ல். த‌ன்‌னி‌‌ச்சை எ‌ன்பது மூளை‌யிட‌ம் இரு‌ந்து தகவ‌ல் பெறாம‌ல் தானாக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
‌சிலரு‌க்கு சாதாரண புகை கூட து‌ம்மலை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடலா‌ம்.

முக‌த்‌தி‌ற்‌கு‌ம் ‌சில ப‌யி‌ற்‌சிக‌ள் உ‌ண்டு

முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் தாடைகளு‌க்கு ப‌யி‌ற்‌சி வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், ஏ, இ, யு, ஓ போ‌ன்ற எழு‌த்து‌க்களை அழு‌த்தமாக ச‌த்தமாக சொ‌ல்லவு‌ம்.

க‌ண்களு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், க‌ண்களை வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். அதாவது ஒரு பெ‌‌ரிய வ‌ட்ட‌த்தை க‌ண்களா‌ல் சுழ‌ற்‌றி பா‌ர்‌ப்பது போ‌ல் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.
‌விர‌ல்களை நெ‌‌ற்‌றி‌யி‌ல் வை‌த்து வ‌ட்ட வடி‌வி‌ல் சு‌ற்‌றி சு‌ற்‌றி மசா‌ஜ் செ‌ய்யலா‌ம். இதனா‌ல் முக‌த்‌தி‌ல் ர‌த்த ஓ‌ட்ட‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதே சமய‌ம் நெ‌ற்‌றி‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் சுரு‌க்க‌ங்க‌ள் மறையு‌ம்.
மேலு‌ம், க‌ண்ண‌‌ங்க‌ள் உ‌ப்‌பி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள், வா‌யி‌ல் கா‌ற்றை ‌நிறை‌த்து க‌ண்ண‌ங்களை உ‌ப்ப வை‌த்து 10 நொடிக‌ள் இரு‌க்கலா‌ம். இ‌வ்வாறு 10 முறை செ‌ய்தா‌ல் க‌ண்ண‌ங்க‌ள் புசுபுசுவெ‌ன்று மாறு‌ம்.
இர‌ண்டு காதுகளையு‌ம் உ‌ள்ள‌ங்கைகளா‌ல் ‌அழு‌த்‌தி‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். உ‌ங்களா‌ல் எ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌க்க முடியுமோ அ‌வ்வளவு அழு‌த்தமாக ‌பிடி‌த்தபடி 25 வரை எ‌ண்ணுவு‌ம். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் காது கே‌ட்கு‌ம் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.

மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.

ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.
மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன.
இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.
மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.
மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.
மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.
அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும்.
மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும்.
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும்.
இதுதவிர, மேலே குறிப்பிட்டதுபோல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

சனி, 13 நவம்பர், 2010

கண்ணீரும்-கிருமி-நாசினிதான்

பொதுவாக நமது உட‌ல் உறு‌ப்புகளை பல வ‌ழிக‌ளி‌ல் நா‌ம் சு‌த்த‌ம் செ‌ய்‌கிறோ‌ம். கு‌ளி‌ப்பதா‌ல் உட‌ல் சு‌த்த‌ப்படு‌கிறது. ஆனா‌ல் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது த‌ெ‌ரியுமா? நமது க‌ண்‌ணீ‌ர்தா‌ன்.


ந‌ம்முடைய க‌ண்க‌ள் எ‌ப்போது‌ம் ஈர‌ப்பதமாகவே இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல், க‌ண்க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் ‌நீர் சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. இ‌ந்த சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ர், நா‌ம் க‌ண்களை இமை‌க்கு‌ம் போது க‌ண்களை ஈரமா‌க்‌கு‌கி‌ன்றன.

அதே சமய‌ம், அ‌திகமான து‌க்க‌ம், இ‌ன்ப‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு நா‌ம் ஆளாகு‌ம் போது இ‌ந்த சுர‌ப்‌பிக‌ள் பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளா‌கி‌ன்றன. இத‌ன் காரணமாக, வழ‌க்க‌த்தை ‌விட அ‌திகமாக ‌நீ‌ர் உ‌ற்ப‌த்‌தியா‌கிறது. அதுதா‌ன் க‌ண்‌ணீராகு‌ம்.

ஆனா‌ல், இ‌ந்த க‌ண்‌ணீ‌ர் அ‌வ்வளவு சாதாரணமான ஒரு ‌விஷயம‌ல்ல. க‌ண்‌ணீ‌ரி‌ல் ‌கிரு‌மி நா‌சி‌னிக‌ள் உ‌ள்ளன. இவைதா‌ன் க‌ண்களை எ‌ப்போது‌ம் தூ‌ய்மையாக வை‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன.

அதுபோல, காய‌ம்ப‌ட்ட கு‌ழ‌ந்தை‌யி‌ல் ‌அழு‌ம் குழ‌ந்தை‌க்கு காய‌ம் எ‌ளி‌தி‌ல் ஆறு‌ம் ‌விநோதமு‌ம் ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

செவ்வாய், 9 நவம்பர், 2010

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா?

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?


ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.


சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.

பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.

ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.
தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.

த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்...

ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

முத‌ல் தா‌‌ய்‌ப்பா‌ல்

குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுருசுருப்பாக இருக்கும்.


இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்ப்பால் கொடுக்க நல்ல வாய்ப்பு. சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்கு தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன.

இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டதட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.

தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் எற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.

தா‌ய்‌ப்பாலா‌ல் மூளை வளரு‌ம்

தா‌ய்‌ப்பா‌ல்தா‌ன் குழ‌ந்தை‌க்கு ‌மிக‌ச் ‌சி‌ற‌ந்தது எ‌ன்று ப‌ல்வேறு ஆ‌ய்வுக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

தா‌ய்‌ப்பா‌ல் தரு‌ம் அ‌ன்னை‌க்கு‌ம் தா‌ய்‌ப்பா‌ல் தருவதா‌ல் ப‌ல்வேறு நல‌ன்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.
அ‌ந்த வகை‌யி‌ல், தா‌ய்‌ப்பா‌ல் குடி‌க்கு‌ம் குழ‌ந்தை‌யி‌ன் மூளை வள‌ர்‌ச்‌சியோடு ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல், தா‌ய்‌ப்பா‌ல் குடி‌க்காத குழ‌ந்தை‌யி‌ன் மூளை வள‌ர்‌ச்‌சி குறைவாக இரு‌ப்பது‌ம் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ம‌ற்ற பா‌ல் மூல‌ம் குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் வே‌ண்டுமானா‌ல் ந‌ன்கு வள‌ர்‌ச்‌சியடையலா‌ம். ஆனா‌ல் மூளை வள‌ர்‌ச்‌சி‌க்கு உ‌ரியது தா‌ய்‌ப்பா‌ல்தா‌ன்.

எனவே அ‌ந்த அ‌ரிய தா‌ய்‌ப்பாலை அ‌ன்னை தனது குழ‌ந்தை‌க்கு ந‌ி‌ச்சய‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை வ‌லியுறு‌த்தவே இ‌ந்த வார‌ம் தா‌ய்‌ப்பா‌ல் வாரமாக ச‌ர்வதேச அள‌வி‌ல் கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

சாய‌ம் வெளு‌க்காம‌ல் இரு‌க்க

பெரு‌ம்பாலு‌ம் ‌பு‌திதாக து‌ணிக‌ள் வா‌ங்கு‌ம் போது அலை‌ந்து ‌தி‌ரிவதை ‌விட அவ‌ற்றை த‌னி‌த்த‌னியாக துவை‌க்கு‌ம் போதுதா‌ன் பெ‌ண்க‌ள் அ‌திகமாக கஷ‌்ட‌ப்படு‌கிறா‌ர்க‌‌ள்.


புதிதாக வாங்கிய வ‌ண்ண ‌நிற துணிகள் சாயம் போகாமல் இருக்க, மற்ற துணிகளில் சாயம் ஒட்டாமல் இருக்க ‌சில எ‌ளிய வ‌ழிகளை ‌பி‌ன்ப‌ற்‌றினாலே போதுமானது.

ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, அதில் அரை கப் உப்பை சேர்க்கவும். க‌ல் உ‌ப்பு ந‌ன்கு கரைந்ததும் பு‌திதாக எடு‌த்த வ‌ண்ண ஆடைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் பிழிந்து எடுக்கவும்.

இ‌ந்த து‌ணிகளை சோ‌ப்பு‌ம் போட வே‌ண்டா‌ம், வேறு தண்ணீரிலு‌ம் அலச வேண்டாம். ‌பி‌ழி‌ந்து அ‌ப்படியே காய வைத்து பயன்படுத்தவும்.

அடுத்த முறை நீங்கள் இந்த துணிகளை துவை‌க்கு‌ம் போது இ‌ந்த து‌ணி‌யி‌ல் இரு‌ந்து சாய‌ம் வெ‌ளியேறாது. இ‌தி‌ல் இரு‌ந்து சாயம் மற்ற துணிகளிலு‌ம் ஒட்டாது, து‌ணியு‌ம் சீக்கிரம் வெளுத்து போகாது.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் எடு‌த்த ‌‌நிற‌த்‌திலேயே உ‌ங்க‌ள் ஆடைகளை பல கால‌ம் பய‌ன்படு‌த்தலா‌ம், வெளு‌க்காம‌ல், சாய‌ம் ஒ‌ட்டாம‌ல்..

க‌‌ண்களை பாதுகா‌க்கு‌ம் வ‌ழிக‌ள்

தொட‌ர்‌ந்து க‌ணி‌னி‌யி‌ல் வேலை செய்பவ‌ர்களு‌க்கு‌ம், அ‌திகமான நேர‌த்தை படி‌ப்ப‌தி‌ல் செல‌விடு‌ம் நப‌ர்களு‌க்கு‌ம் தூர‌ப் பா‌ர்வை ப‌றிபோகு‌ம் ஆப‌த்து ஏ‌ற்படு‌ம்.


‌அ‌வ்வாறு ‌பிர‌ச்‌சினை எழாம‌ல் இரு‌க்க க‌ணி‌னி‌ல் வேலை செ‌ய்யு‌ம் போது‌ம், படி‌க்கு‌ம் போது‌ம் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.

வாகன‌த்‌தி‌ல் செ‌ல்லு‌ம் போது ந‌ம் க‌ண்க‌ள் ‌மீது நேரடியாக வேகமாக அடி‌க்கு‌‌ம் கா‌ற்று படுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது. இது க‌ண் இமைக‌ளி‌ல் உ‌ள்ள ‌நீ‌ர்‌‌த் ‌திசு‌க்களை பா‌தி‌க்கு‌ம்.

ம‌ங்கலான இட‌த்‌தி‌ல் அ‌திக நேர‌ம் படி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்.

ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.

செ‌ரி‌க்கு‌ம் ‌திற‌ன் ‌சீராக இரு‌க்க

உட‌லி‌ல் ஒ‌வ்வொரு இய‌க்கமு‌ம் ‌சீராக இரு‌ந்தா‌ல்தா‌ன் நமது உட‌ல் நல‌த்துட‌ன் இரு‌க்‌கிறது எ‌ன்று அ‌ர்‌த்தமாகு‌ம். உட‌லி‌ல் எ‌ந்த இய‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம் அது நோ‌ய்தா‌ன்.


ஆனா‌ல், இ‌ந்த செ‌ரிமான‌த் ‌திற‌ன் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் உட‌லே பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதாகு‌ம்.

அதாவது, செ‌ரிமான‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தொட‌ர்‌ந்து பல ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து உ‌ள்ளது.

ஏதேனு‌ம் நோ‌ய் எ‌ன்றா‌ல், நே‌ற்று எ‌ன்ன சா‌ப்‌பி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் கே‌ட்பத‌ற்கு‌ம் இதுதா‌ன் அடி‌ப்படை.

நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உணவு‌ம், செ‌ரிமான‌த் ‌திறனு‌ம் ‌சீராக இரு‌ந்தா‌ல் உட‌‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் பெருமளவு‌க் குறையு‌ம்.

எனவே, நமது செ‌ரிமான‌‌ம் ‌சீராக இரு‌க்க உ‌ரிய இடைவேளை ‌வி‌ட்டு, எ‌ளிதான உணவுகளை சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். கடினமான உணவாக இரு‌ப்‌பி‌ன் அவ‌ற்றை அளவோடு சா‌ப்‌பிடுவது ந‌ல்லது.