நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

சனி, 18 பிப்ரவரி, 2017

நீரிழிவு, கொழுப்பு அதிகமா? கவலையே படாதீங்க!

லவங்க பட்டை பற்றி கேள்விப்பட்டிருப் பீர்கள். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.

இவ்வாறு சொல்லியிருப்பவர்கள் யார் தெரியுமா?அமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.

நீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர். 40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.

* 18
முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.
* 23
முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.
*
இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.
அமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.

நம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

அல்சரும்… உண்மையும்





நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள்.
மறுபடியும்
ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் தவறு. பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போது தான் அல்சரே வருகிறது. பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன.
வயிற்றில்
நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. சரியான நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பதும் தவறு. நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.
தினம்தோறும்
இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப்போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ…. அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை(புண்களை) உருவாக்குகிறது. ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.
அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

சனி, 11 பிப்ரவரி, 2017

இருமல் மருந்துகளைக் கடைகளில் சுயமாக வாங்கிக் குடிக்கும் பழக்கம், நம்மில் பலருக்கும் இருக்கிறது. இது சரியா?

இது சரியில்லை.
இருமல் என்பது நம் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்துவதற்காக உடல் ஏற்படுத்திக்கொண்ட இயற்கையான ஒரு செயல்பாடு. இருமல் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. காற்றில் கலந்து வரும் தூசி, புகை, வாசனை, வேதிப்பொருட்கள் எனப் பலவும் இருமலைத் தூண்டலாம். மூக்கு, தொண்டையில் தொடங்கி நுரையீரலின் மூச்சு சிறுகுழல்கள்வரை எந்த இடத்திலும் கிருமிகள் தாக்கி, சளி பிடித்து இருமல் வரலாம்.
தடுமம், தொண்டைப் புண், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, சிஓபிடி (COPD), புற்றுநோய் ஆகியவை இருமலை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்குவகிக்கின்றன. இதயம் செயலிழக்கும்போது நுரையீரலில் நீர் கோத்து இருமல் வருவதுண்டு. ஒவ்வாமையும், புகைபிடித்தலும் இருமலை வரவேற்பவை. சுவாசப் பாதைக்குத் தொடர்பில்லாத அல்சர், நெஞ்செரிச்சல், குடல்புழு காரணமாகவும் இருமல் வரலாம். உணவு புரை யேறினால்கூட இருமல் வரும்.
இப்படியான காரணங்களைக் கொண்டு, இருமலைப் பல வகைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். திடீர் இருமல், நாட்பட்ட இருமல், வறட்டு இருமல், சளி இருமல், ஒவ்வாமை இருமல், ஆஸ்துமா இருமல், இரவு நேர இருமல் என்பன முக்கியமான வகைகள்.

எந்த இருமலுக்கு என்ன மருந்து?
இருமலானது சுவாசப் பாதையில் எந்த இடத்தில் உருவாகிறதோ, அதைப் பொறுத்தும், சளி அல்லது நீர் கோத்திருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்தும், வீசிங் இருப்பதைப் பொறுத்தும் இருமலின் சத்தம் வேறுபடும். அதை வைத்தே நோய் பாதிக்கப்பட்டுள்ள இடத்தை மருத்துவரால் தெரிந்துகொள்ள முடியும். அடுத்த கட்டமாக, ஸ்டெதாஸ்கோப்பைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் மார்பை முறையாகப் பரிசோதிக்கும்போது, இருமலுக்குக் காரணமும் வகையும் தெரிந்துவிடும். அதற்கேற்பத்தான் அவர் இருமல் மருந்தை எழுதிக் கொடுப்பார்.
உதாரணமாகச் சளி இருமல் என்றால் சளியைக் குறைக்க மருந்து, ஆஸ்துமா என்றால் மூச்சுக் குழாயை விரிக்கிற மருந்து, ஒவ்வாமை என்றால், அதைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தருவது, இதயச் செயலிழப்பு காரணம் என்றால் சிறுநீரைப் பிரிக்கும் மருந்து கொடுப்பது எனக் காரணத்தைக் களையும்போதுதான் நோய் குணமாகும்.
சரியான காரணத்தைக் களைய…
எந்த வகை இருமல், என்ன காரணம் எனத் தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்தால், இருமலுக்கான அடிப்படைக் காரணத்தைக் களைய முடியாது. அதனால் இருமல் குறையாது. வீண் செலவுதான் ஏற்படும். மருத்துவரிடம் போவதைத் தள்ளிப்போடுவதால், நோய் அதிகப்படவும் வாய்ப்பிருக்கிறது.
இருமல் மருந்துகளில் சளியை வெளியேற்றும் மருந்துகள், வீசிங் பிரச்னையைக் குறைக்கும் மருந்துகள், மூளையில் இருமல் மையத்தைக் கட்டுப்படுத்தி இருமலை மட்டுப்படுத்தும் மருந்துகள், தூக்கம் வரச்செய்யும் மருந்துகள் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றைச் சுயமாக வாங்கி உட்கொள்ளும்போது, அவற்றின் அளவு அதிகமாகி ஆரோக்கியம் கெடலாம்.
உதாரணமாக, ஆஸ்துமாவுக்குத் தரப்படும் ஒருவகை மருந்து அளவுக்கு மீறினால் விரல் நடுக்கத்தைக் கொடுக்கும்; நெஞ்சு படபடக்கும். தூக்கம் தரும் இருமல் மருந்துகளுக்குப் பல பேர் அடிமையாவதும் உண்டு. வாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரத்தை இயக்குபவர்கள், இரவு நேரப் பணியாளர்கள் இம்மாதிரியான இருமல் மருந்துக்கு அடிமையாகி, விபத்துகளைச் சந்திக்கின்றனர்