நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 20 ஜூன், 2010

படித்ததில் பிடித்தது !!

வயல்வெளி பார்த்து

வறட்டி தட்டி

ஓணாண் பிடித்து

ஓடையில் குளித்து

எதிர்வீட்டில் விளையாடி

எப்படியோ படித்த நான்

ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து

சில மாதம் போர்தொடுத்து

வாங்கிவிட்ட வேலையோடு

வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி

கனவு தொலைத்து

காலை உணவு மறந்து

நெரிசலில் சிக்கி

கடமை அழைக்க

காற்றோடு செல்கிறேன்

காசு பார்க்க !

மனசு தொட்டு

வாழும் வாழ்க்கை

மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு

வாழும் வாழ்க்கை

பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே

வாழ்க்கை

தொலைந்து போகுமோ ?


சொந்த பந்த

உறவுகளெல்லாம்

ஷிப் பைலாய்

சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை

தொலைந்து போகுமோ

மொத்தமும்!

புரியாது

புலம்புகிறேன்

நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து

நிலவு முகம் நான் ரசித்து

கதைகள் பேசி

கவலைகள் மறந்த காலம்

இனிதான் வருமா ?

இதயம் நனைத்த

இந்த வாழ்வு

இளைய தலைமுறைக்காவது

இனி கிடைக்குமா ?


சொந்த மண்ணில்
சொந்தங்களோடு

சோறு திண்பவன்
யாரடா ?

இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

:::::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: :

எழுதியவர் பெயர் தெரியாது

:::::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: ::::::::: :

புதன், 16 ஜூன், 2010

மசாஜ் சிகிச்சையின் நன்மைகள்

1. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.


2. மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.

3. கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

4.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.

5. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

6. மசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

மசாஜ் செய்யும் முறை :

கை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.

எப்போது மசாஜை தவிர்க்க வேண்டும்?

காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.

அரசு மருத்துவமனையில் மசாஜ்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடைபயிற்சி எந்திரம், நீராவி குளியல் எந்திரம், சைக்கிளிங் எந்திரம், ஆகியவையும் உடல் மசாஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் Dr. அருணாசலம் கூறியிருப்பது : மனித உடலிலுள்ள நாடி நரம்புகள் தூண்டப்பட்டு புத்துயிர் ஊட்டுவதற்காக நவீன முறையில் தற்போது மசாஜ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மசாஜ் செய்வதின் மூலம் உடம்பிலுள்ள கழிவுகள் வெளியேறும்.

வெளிநோயாளிகளுக்கு நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் பயிற்சியும் உள்நோயாளிகளுக்கு நீராவி குளியல் சிகிச்சையும் அளிக்கப்படும்.

நடை மற்றும் சைக்கிளிங் பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும். மேலும் கால், கை, மூட்டு தலை போன்ற வலிகளுக்கும் நவீனமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென்இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். இன்றும் கப்ஸôவோடு வெங்காயம் இருக்கத் தவறுவதில்லை. நேபாளத்தில் வெங்காயம் கடவுளுக்கு நிவேதனம் செய்வதாகச் சொல்கிறார்கள். யூதர்கள் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசி வர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17. பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம் அவரை இலை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31. ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும் பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறைவும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் கவனத்திற்கு...

இன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச் சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில் சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும் 11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில் ஒருவர்) இந்தியர்.

புகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல! இரண்டல்ல! புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.

புகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
புகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.

புகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்

கறிவேப்பிலை

 நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை ... மென்று சாப்பிட... ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.


வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.

இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப் பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல - நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு

திங்கள், 14 ஜூன், 2010

மனைவியின் மனதை கவர்வது எப்படி!!!

'பெண்களை கவர்வது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த பெண்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [ சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' மனைவியை கவர்வது எப்படி' என்ற பதிவிட மணமான பெண்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துளைத்து துளைத்து கேள்வி கேட்டால் ' என்ன கல்யாண ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.


அதனால் நைசாக பேசி, நாசூக்காக நான் கேட்டு தெரிந்துக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில், மனைவியை கவர சில டிப்ஸ்............ ....

டிப்ஸ் -1:

ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.

உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.

வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:

பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

[செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை] அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள். ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:

மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,

முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.

உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,

"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

குறைவாக தூங்கினால் உயிருக்கு ஆபத்து

ஒரு ம‌னித‌ன் தினமும் குறை‌ந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு குறைவாக தூங்கினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தூக்கம் குறித்து ஆராய்ச்சி செ‌ய்தன‌‌ர்.

இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல், தூக்கமின்மைக்கும் அகால மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பெரும்பாலான மக்கள் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தான் தூங்குகிறார்கள். 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களில் 12 சதவீதம் பேர் அகால மரணம் அடைகிறார்கள். அதே போல 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினாலும் அவர்களுக்கு மரணம் முன்னதாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குறைவாக தூங்குபவர்களுக்கு சர்க்கரை வியாதி, உடல்பருமன் நோய், ரத்த அழுத்தம், உடலில் கொழுப்பு சத்து சேர்வது போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோ‌ன்ற நோ‌ய்க‌ள் ஏ‌ற்படுவத‌ற்கான அ‌றிகு‌றியாக‌க் கூட குறைவான தூ‌க்க‌த்தை‌ எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்‌கிறது ஆ‌ய்வு.

வெ‌ண்ணெ‌யி‌ல் ஆரோ‌க்‌கிய‌ம்

பலரு‌ம், வ‌ெ‌ண்ணெ‌ய் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு‌த் த‌ீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி, த‌ங்களது உண‌வி‌ல் வெ‌ண்ணையை‌ த‌வி‌ர்‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் வெ‌ண்ணை‌யிலு‌ம் ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கியு‌ள்ளன. ‌சில‌ர் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு அயோடி‌ன் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டா‌ல், வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வரலா‌ம்.

மேலு‌ம், வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌ன்டி ஆ‌க்‌சிட‌ன்‌ட்க‌ள் ர‌த்த நாள‌ங்களை‌ப் பல‌ப்படு‌த்து‌‌கி‌ன்றன. கா‌ல்‌சிய‌த்தை அ‌திகள‌வி‌ல் கொ‌ண்டு‌ள்ள வெ‌ண்ணை, ப‌ற்‌சிதைவை‌த் தடு‌க்‌கிறது.

வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள பூ‌ரித‌க் கொழு‌ப்பு, பு‌ற்றுநோயை‌த் தடு‌க்கு‌ம் த‌ன்மையை‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. அ‌த்‌தியாவ‌சியமான தாது உ‌ப்பு‌க்களை ந‌ம் உட‌ல் ‌கிர‌கி‌த்து‌க் கொ‌ள்ள வ‌ெ‌ண்ணை உத‌வி செ‌ய்‌கிறது. வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு‌த் த‌ன்மை கூட, மூளை‌க்கு‌ம், நர‌ம்பு ம‌ண்டல‌த்து‌க்கு‌ம் ந‌ன்மையையே செ‌ய்‌கிறது.

இ‌தி‌ல் உ‌ள்ள வை‌ட்ட‌மி‌ன் ஏ க‌ண்க‌ள், தோ‌லி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம் கா‌க்க உதவு‌கிறது.

‌சி‌ரி‌த்தா‌ல் ஆயு‌ள் கூடு‌ம்

‌சி‌ரி‌ப்பதா‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பது ப‌ல்வேறு மரு‌த்துவ ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ளி‌ன் மூலமாக அ‌றிய‌ப்ப‌ட்ட உ‌ண்மையாகு‌ம்.

த‌ற்போது ‌சி‌ரி‌ப்பதா‌ல் ஆயு‌ள் கூடு‌கிறது எ‌ன்‌கிறது ஒரு பு‌திய ஆ‌ய்வு. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌ப்பவ‌ர்களு‌க்கு 7 ஆ‌ண்டுக‌ள் ஆயு‌ட்கால‌ம் கூடு‌கிறதா‌ம்.

அமெ‌ரி‌க்க‌ப் ப‌ல்கல‌ை‌க் கழக‌ம் நட‌த்‌திய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், எ‌ப்போது‌ம் பு‌ன்னகை‌த் தவழு‌ம் முக‌த்துடனு‌ம், மன‌‌ம் ‌வி‌ட்டு ‌சி‌ரி‌த்து வா‌ழ்‌ந்தவ‌ர்க‌ள் சராச‌ரியாக 80 வயது வரை வா‌ழ்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

‌சி‌ரி‌க்க மற‌ந்தவ‌ர்க‌ள் 72 வயது‌க்கு‌ள்ளாக முதுமை எ‌ய்‌தி மரண‌த்தை தழு‌வு‌கி‌ன்றன‌ர். ‌சி‌ரி‌ப்‌பிலு‌ம் அச‌ட்டு ‌சி‌ரி‌ப்பு ‌சி‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறது இ‌ந்த ‌ஆ‌ய்வு.

மேலு‌ம், பு‌ன்னகை‌யி‌ன் மூல‌ம் இதய ‌வியா‌திக‌ள் ஏ‌ற்படுவது தடு‌க்க‌ப்படுவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

‌தீய பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் குறையு‌ம் ஆயு‌ள்

 ம‌னித‌ன் ப‌ல்வேறு ‌தீய பழ‌க்க வழ‌க்க‌ங்களு‌க்கு ஆ‌ட்படு‌கிறா‌ன். புகை‌ப்பது, மது அரு‌ந்துத‌ல், தவறான உணவு‌ப் பழ‌க்க‌ம், உடலு‌க்கு‌த் தேவையான உழை‌ப்‌பு இ‌ன்‌றி இரு‌ப்பது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஆயு‌ள் நா‌ட்க‌ள் குறை‌கிறது.

மேலே சொ‌ன்ன இ‌ந்த தவறான பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் ம‌னித உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள், அவனது வா‌ழ்‌வி‌ல் அவை ஏ‌ற்படு‌த்து‌ம் தா‌‌க்க‌ங்க‌ள் கு‌றி‌த்து நட‌ந்த ஆ‌ய்‌வி‌ல் இது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

ஆயு‌ள் குறை‌கிறது எ‌ன்றா‌ல் ஏதோ ஒரு நாளோ, இர‌ண்டு நா‌ட்களோ அ‌ல்ல.. 10 ஆ‌ண்டி‌ற்கு‌ம் அ‌திகமான ஆ‌‌ண்டுகளை, இதுபோ‌ன்ற தவறான பழ‌க்க வழ‌க்க‌த்தா‌ல் ஒரு ம‌னித‌ன் இழ‌க்க நே‌ரிடு‌கிறது எ‌ன்று கூறு‌கிறது அ‌ந்த ஆ‌ய்வு.

மே‌ற்கூ‌‌றிய தவறுக‌ளினா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் உட‌ல் ‌விரை‌விலேயே மூ‌ப்‌பினை அடை‌கிறது. அவரது உட‌ல் உறு‌ப்புகளு‌ம் பல‌வீன‌ம் அடை‌ந்து, அவ‌ரிட‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி ‌மிக‌க் குறைவாகவே இரு‌க்கு‌ம்.

இதனா‌ல் அவ‌ர் எ‌ளி‌தி‌ல் நோ‌ய் தா‌க்குதலு‌க்கு ஆளாவதோடு தனது ஆயுளையு‌ம் ‌விரை‌விலேயே முடி‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌கிறது எ‌ன்று கூறு‌கிறது ஆ‌ந்த ஆ‌ய்வு முடிவு.

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

பா‌ட்டு‌க்கு வே‌ண்டுமானா‌ல் நே‌த்து வ‌ச்ச ‌மீ‌ன் குழ‌ம்பு மண‌க்கலா‌ம். ஆனா‌ல் நே‌த்து வ‌‌ச்ச எ‌ந்த உணவு‌ம் ‌வீ‌ண் தா‌ன் ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அதாவது, எ‌ந்த உணவாக இரு‌ந்தாலு‌ம், அதனை சமை‌‌க்கு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியேறு‌ம். எனவே, சமை‌த்த உணவை சூடாக சா‌ப்‌பிடு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் அனை‌த்து‌ம் நமது உடலு‌க்கு ‌கிடை‌க்கு‌ம்.

சூடு ஆ‌றியது‌ம் அதனை சா‌ப்‌பிடு‌ம் போது அது வெறு‌ம் ச‌க்க‌ை‌த்தா‌ன். அ‌தி‌ல் எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை.

சூடு அ‌றியது‌ம் சா‌ப்‌பி‌ட்டாலே ச‌க்கை எ‌ன்றா‌ல், அதை மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சூடு படு‌த்‌தி சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்கு‌‌ம்?

எனவே, சமை‌த்து அ‌ப்போதே சா‌ப்‌பிடுவது உடலு‌க்கு ந‌ல்லது. ‌மீத‌ம் ‌மீ‌ந்ததை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சா‌ப்‌பிடுவதா‌ல் உடலு‌க்கு எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. மாறாக, அதனா‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்பட வே‌ண்டுமானா‌ல் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமை

 ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது.
ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும்.

வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது.

புதன், 2 ஜூன், 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

காலையில் உணவு உண்ணாமல் இருப்பது, மிக அதிகமாகச் சாப்பிடுவது,, நிறைய சர்க்கரை சாப்பிடுதல், தூக்கமின்மை…… 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.