நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 18 ஜனவரி, 2022

பழங்காலத்து மறந்து போன ஆச்சரியமூட்டும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

 என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதைவிட வேகமாக நம்முடைய ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி வருவதை நம்மால் மறுத்து விடவும் முடியாது. ஓடியாடி உழைத்த பணமெல்லாம் கடைசியில் மருத்துவத்திற்கு தான் நாம் செலவு செய்கிறோம். இதை உணர்ந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்போமோ? என்னவோ? தெரியவில்லை. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் கூட ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்ததை நினைத்தால் இப்பொழுதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.


அவர்கள் விட்டு சென்ற ஆச்சரியமூட்டும் சில வீட்டு வைத்தியங்களை, இன்றும் நாம் பயன்படுத்தினால் நீண்ட ஆயுளைப் பெற முடியும். நம் வீட்டு சமையல் அறையில் இல்லாத மருந்துகளை விடவா? மருந்தகத்தில் கொடுக்கும் மருந்துகள் வேலை செய்து விடும்? இரண்டு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் செய்து வந்த இந்த வீட்டுக் மருத்துவ குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

 நம் உடலானது அதிகம் தண்ணீரால் நிரம்பியது. நாம் தண்ணீரை எப்பொழுது குறைவாக குடிக்கிறோமோ! அப்பொழுது ஆரோக்கிய பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்து விடும். இதற்கு முதல் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணிற்கு கொப்பரையாக இருக்கும் தேங்காயுடன் கசகசாவை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஒரே நாளில் வாய்ப்புண் காணாமல் போய்விடும். சிறு துண்டு கடுக்காயை எடுத்து வாயின் ஓரத்தில் வைத்துக் கொண்டு இருந்தால் வாய்ப்புண் விரைவாக ஆறும்.

அடுத்தும் இதே பிரச்சனை தான். தண்ணீர் குடிக்காதவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. நீர்க்கடுப்பு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். நீர்க்கடுப்பு இருப்பவர்களுக்கு புழுங்கல் அரிசியை வடித்த தண்ணீருடன், சிறிதளவு உப்பும், ஒரு டீஸ்பூன் வெண்ணெயையும் கலந்து குடித்து வர கொஞ்ச நேரத்திலேயே நல்ல நிவாரணம் கிடைத்துவிடும்.


கடினமான உணவுப் பொருட்களையும், குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இளமையிலேயே பற்கூச்சம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பற் கூச்சத்தை விரைவாக சரி செய்வதற்கு, புதினா இலைகளை காய வைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். புதினாவின் விதைகளை அடிக்கடி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால் பற் கூச்சம் ஏற்படுவது படிப்படியாக குறைந்து விடும்.


வயது முதிர்வு காரணமாக வரும் இடுப்பு வலி, மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனடியாக நீங்குவதற்கு சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யும் கலந்து ஆற வைத்து குடித்து வந்தால் விரைவாக நிவாரணம் கிடைக்கும்.


முடி வளர இயற்கை மருத்துவ குறிப்புகள் !!!

 வழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை  மறையும்.

இளநரை கருப்பாக: நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக: ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர்,  செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர முடி கருப்பாகும்.


காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை பெற: அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

நரை போக்க: தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.