நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

வாழைப்பழ பாயாசம்

தேவையான பொருட்கள்:
அரிசி : 100 கிராம்
சர்க்கரை : 200 கிராம்
தேங்காய் : 1/2
ஏலக்காய் : 5
முந்திரி : சிறிதளவு
மஞ்சள் வாழைப்பழம் : 2 (மிக சிறிய துண்டாக நறுக்கியது)
செய்முறை: அரிசியை நன்றாக சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியையும் தேங்காயையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அரிசி, தேங்காய் கலவை அடுப்பில் வைத்து கிளறவும். அடுப்பை மிக சிறியதாக எரியவிடவும்.
மாவு பிரியாமல் சேர்த்து கொதித்து அரிசி கலவை நன்றாக வேக வேண்டும். எல்லாம் சேர்ந்து கொதித்தபின் வாழைப்பழத்தை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரியையும், ஏலக்காய் தூளையும் போட்டு இறக்கவும்.

ச‌ப்பா‌த்‌தி செ‌ய்ய கு‌றி‌ப்புக‌ள்

ச‌ப்பா‌த்‌தி‌க்கு மாவுபிசை‌ந்துகுறை‌ந்தது அரை ம‌ணி நேரமாவது ஊ‌றியபி‌ன்னரே சா‌ப்‌பா‌த்‌திதிர‌ட்ட வே‌ண்டு‌ம்.
ச‌ப்பா‌த்‌திதிர‌ட்டியதுமே தோசை‌க்க‌ல்‌லி‌ல் போ‌ட்டு எடு‌க்க வே‌ண்டு‌ம். ச‌ப்பா‌த்‌தியைதிர‌ட்டியபி‌ன் அ‌திக நேர‌ம் வை‌த்தா‌ல் வற‌ண்டுவிடு‌ம். முளைக் கட்டிய கொத்துக் கடலையை அரைத்து மாவுடன் சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி, பூரி மிகவும் சத்துள்ளதாகவும் சுவையாகவும் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நன்றாகக் கனிந்த இரண்டு வாழைப் பழங்களை சேர்த்து, சிறிது டால்டாவையும் ஊற்றிப் பிசைந்து சப்பாத்தி செய்தால் மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து எந்த பதார்த்தம் செய்தாலும், அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டையோ, சுக்கையோ சேர்த்து வேக வைத்தால் வாய்வுத் தொந்தரவு ஏற்படாது. எளிதாகவும் ஜீரணமாகும்.
கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசியாக இருப்பதுடன் உடலுக்கும் வலிமை தரும்.

தர்பூசணிப் பொரியல் செய்யலாம் வாங்க.....!

முதலில் தர்பூசணியைச் சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். தர்பூசணியின் வெளியோட்டினைத் துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குடமிளகாய், பூண்டு, இஞ்சி, தேவையான அளவு நறுக்கி வைத்துக் கொள்ளவும். தயிர் ஒரு கிண்ணம் மற்றும் தக்காளிச்சீவல், ஒரு பழம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொள்கலனை அடுப்பில் வைத்துச் சூடேற்றவும். பின்பு சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் போட்டு எண்ணெய் காய்ந்து விட்டதென உறுதிப்படுத்திக் கொள்ளவும். பின்பு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், தக்காளி, தர்பூசணியோட்டுச் சீவல் ஆகியவற்றை வரிசையாகச் சற்று இடைவெளி விட்டு, கொள்கலனில் இட்டு, இட்டு, வதக்கவும். தற்போது முட்டையை உடைத்து இடவும். பின்பு அந்தக் கிண்ணத்திலிருக்கும் தயிர் ஊற்றிக் கிண்டவும்.
தேவையான அளவு மிளகாய்த்தூள் இடவும். பின்பு, கொஞ்சமே கொஞ்சம் உப்பு இட்டு மிக மிதமான சூட்டில் ஐந்து மணித்துளிகள் மூடப்பட்ட கொள்கலனில் வேகவிடவும். தற்போது சுவைமிக்கத் தர்பூசணிப் பொரியல் தயார். கொஞ்சம் செய்துதான் பாருங்களேன். அதன் சுவையை ரசித்து ருசித்து உங்க நண்பர்களிடமும், உறவினர்களுடமும் சொல்லி மகிழுங்கள்.

சனி, 1 ஆகஸ்ட், 2015

பூண்டு

பூண்டு
பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.பூண்டில் வைட்டமின்கள் '', பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

*
புற்றுநோய் வராமல் தடுக்கும்.

*
ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இத னால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.

*
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்!

*
கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.

*
எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

*
கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை களின் எடை அதிகரிக்கும்.

*
சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.

*
வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.

*
ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.

*
கண்ணில் புரைவளர் வது தவிர்க்கப்படும்.

*
சளியை போக்கும்.

*
உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.

*
முதுகுவலி குறையும்.

*
காசநோய் வராமல் தடுக்கும்.

*
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*
உடலை இளமையாக வைத்துக்கொள்ளும்.பூண்டின் மருத்துவ பலன்கள்,............இத்தகையை மகத்துவம் கொண்ட பூண்டுவை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லது. தினமும் காலை ஒரு மடக்கு தண்ணீர் அருந்திவிட்டு பூண்டு பல் 2- எடுத்து அரை குறையாக மென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சற்று வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை பூண்டு கஞ்சி வைத்து சாப்பிடலாம். பசும்பாலில் பூண்டு போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பசும்பாலில் பூண்டு காய்ச்சும்போது ஒரு தம்ளர் பாலுக்கு குறைந்தபட்சம் ஒரு பூண்டு போடப்பட வேண்டும்.பச்சையாக தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது, அவித்து 2 பூண்டு சாப்பிடுவதற்கு சமம். ஆனால் குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக பூண்டுவை சாப்பிடக்கூடாது.

புடலங்காய் ....

புடலங்காய் :
Gourd புடலங்காய்


நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. மே‌லு‌ம், உடலு‌க்கு அ‌திக கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்து‌ம். சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.

பீ‌ட்ரூ‌ட்

பீ‌ட்ரூ‌ட் : ‌




பீ‌ட்ரூ‌ட் எ‌ன்றது‌ம் எ‌ல்லோருமே சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள், இது ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌ன்று, அது ம‌ட்டும‌ல்ல ‌பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உ‌ப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.