நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 15 ஜூலை, 2020

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் வடை

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான பிரெட் வடை ரெடி.

காரசாரமான மைசூர் சில்லி சிக்கன்

சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,

தேவையான பொருட்கள்

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான மைசூர் சில்லி சிக்கன் ரெடி.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயாவின் பயன்கள்...!!

பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவு சோயா மட்டுமே. பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.

சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. 
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது. 
 
எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை,  குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
 
வாழ்நாள் முழுவதும் சீரான, ஆரோக்கியமான வாழ்வுக்கு, நோய் தடுப்பு முறைகளே சிறந்த ஆதாரமாகும். இதில் பெரும்பங்கு வகிப்பது ஆரோக்கியமான இயற்கை  உணவுகளே. நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஊட்டச்சத்து நிறைந்த சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம்,  கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது. 

குழந்தைகளின் முடிவளர்ச்சிக்கு உதவும் சில பயன்தரும் குறிப்புகள் !!

குழந்தையின் தலையில் முடி இருக்கிறதோ இல்லையோ வாரம் இருமுறை தலைக்கு குளிப்பாட்டுங்கள். தினமும் தலைக்கு குளிப்பாட்ட வேண்டாம். வெயிலில் சென்றால் தலையில் மறைக்க பேபி டவல், ஹேட், கேப் பயன்படுத்து நல்லது.

சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுகள் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ, பி, சத்துக்கள் முடியின் தரத்தை மேம்படுத்தும். பருப்புகள்,  பப்பாளி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் இச்சத்துக்கள் உள்ளன.

தொடர்ந்து எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து வந்தால் ஸ்கால்புக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும். இதனால் முடி வளர்ச்சியும் சீராக இருக்கும். முடிக்கு  தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.

2 அல்லது 3 நாளைக்கு ஒருமுறை முடியை அலசுங்கள். வியர்வையால் உண்டாகும் அழுக்கு, கிருமிகள் நீங்கும். மேலும் தயிர், செம்பருத்தி, முட்டை போன்ற இயற்கை கண்டிஷனரை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். முடி ஆரோக்கியமாகும்.

ஈரமான முடியை துவட்டும்போது, மிதமான அழுத்தத்தில் முடியை துவட்டுங்கள். வேகமாக தேய்க்க கூடாது. ஒத்தி எடுப்பது சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கு  முடியை காய வைக்க டவலால் துடைப்பதே சரியான வழி. ப்ளோ ட்ரையர் போன்றவற்றை எக்காரணத்துக்கும் பயன்படுத்த கூடாது.

தலைக்கு மிருதுவான பிரஷ் அல்லது சீப்பை பயன்படுத்துவது நல்லது. சீரான இடைவெளியில் ஹேர் கட் செய்வதால், குழந்தைகள் அழகாக இருப்பார்கள். முடி  பிளவுகளும் ஏற்படாது. கண்கள் அருகில் வரை, முடி வளர்ந்து தொல்லை செய்யாது.