நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 26 மே, 2016

மரபணு { Genetic } என்றால் என்ன ?


10,000 ஆண்டுகளில் நம் டி.என்.ஏ எனப்படும் மரபணு மாறியிருக்கும்…அதனால் நான் ஏன் இன்னும் 10,000 ஆன்டுக்கு முந்தைய உனவையே சாப்பிடவேண்டும் என்றால

மரபணு
மாற்றம் என்பது எத்தனை பெரிய விசயம் என்பது நமக்கு புரிபடவில்லை என பொருள்.

உதாரணமாக
எஸ்கிமோ, வெள்ளையர், கருப்பர், மங்கோலியர், இந்தியர்….இவர்களிடையே நீலக்கண், சுருட்டை முடி, கட்டை குரல், கூட்டை உயரம், மஞ்சள் நிறம் இப்படி பல வேறுபாடுகள் உண்டு.

ஆனால்
உலகில் உள்ள எந்த இரு மனிதர்களையும் எடுத்தால் அவர்களுக்கிடையே ஜீன் வித்தியாசம் 0.1% தாண்டாது. அதாவது 99.9% நம் அனைவர் ஜீன்களும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

அதே
சிம்பன்சிக்கும் நமக்கும் ஜீன் வித்தியாசம் 2% மட்டுமே…அதாவது சிம்பன்சி 98% மனிதன், அல்லது மனிதன் என்பவன் 98% சிம்பன்ஸ

நம்
ஜீன் 2% மாறினால் நாம் சிம்பன்ஸி மாதிரி அடையாளமே தெரியாத இன்னொரு உயிரினம் ஆகிவிடுவோம்.

ஆக
மரபணு மாறிவிட்டது என அத்தனை எளிதில் சொல்லி எக்ஸ்கேப் ஆகமுடியாது..உங்கள் மரபணுவை பொறுத்தவரை நீங்கள் சைபிரிய குகையில் கையில் கல் ஈட்டியுடன் அமர்ந்திருக்கும் காட்டுவாசிதான்…உங்கள் உடல் அடுத்துவரவிருக்கும் குளிர்கால பஞ்சத்தை சமாளிக்க உங்கள் தொப்பையில் கொழுப்பை எனெர்ஜியாக சேர்த்து வைத்துகொன்டிருக்கிறது…நீங்கள் கணிணியுகத்துக்கு வந்ததாக நினைத்துகொன்டாலும் மரபணு இன்னமும் கற்காலத்தில் தான் இருக்கிறது. அது கணிணியுகத்துக்கு வந்து சேர சிலகோடி ஆண்டுகள் ஆகும

அதனால் அது இருக்கும் காலகட்ட உனவையும், வாழ்க்கைமுறையையும் (விருந்து/விரதம்) பின்பற்றினால் தான் அது ஆரோக்கியமாக இருக்கும்


புரதம் { protin } என்றால் என்ன ?


புரதத்தில் இரு வகை உண்டு. முதல் தர புரதம் (9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிரம்பியவை), இரண்டாம் தர புரதம் (9 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாதவை)

அசைவ உணவில் இருப்பது முழுக்க 9 அமினோ அமிலமும் நிரம்பிய புரதம்

தாவர உணவுகளில் இருப்பது 9 அமினோ அமிலமும் இல்லாத இரன்டாம் தர புரதம்

இப்போது ஒரு சின்ன கதையை பார்க்கலாம்

பந்தியில் ராமு, சோமு இருவரும் உணவருந்தினார்கள். ராமுக்கு பறிமாறியவர் ஐந்து இட்டிலியை இலையில் போட்டுவிட்டு, ஒரே ஸ்பூன் சட்டினியை இலையில் வைத்தார்.

சோமுவுக்கு பரிமாறியவர் எட்டு இட்டிலியை இலையில் வைத்து உடன் சாம்பார், தேங்காய் சட்டினி, கார சட்டினி, நல்லெண்ணெய்/பொடி எல்லாம் போட்டு விருந்துபசாரம் செய்து அசத்தினார்.

அதனால் எட்டு இட்டிலியை இலையில் இட்டும் சோமு எட்டு இட்டிலிகளையும் முழுமையாக உண்டு, இலையை துடைத்து எடுத்தது போல சுத்தமாக குப்பைகூடையில் போட்டான

ஐந்து இட்டிலி மட்டுமே இலையில் போட்டும், பசி அதிகமாக இருந்தும் சட்டினி இன்றி இட்டிலியை உண்ணமுடியாமல் இரண்டு இட்டிலியை மட்டுமே உண்ட ராமுவின் இலையில் மூன்று இட்டிலிகள் மீதம் இருந்தது.

புரத விசயத்தில் நிகழ்வதும் இதுவே

இரண்டாம் தர புரதத்தில் 9 வகை அமினோ அமிலமும் இல்லாததால் அப்புரதத்தின் பெரும்பகுதி வீணடிக்கபட்டு யுரிவாகாக மாற்றபட்டு கழிவாக கிட்னியால் வெளியேற்றபடுகிறது. இதனால் உடலுக்கு போதுமான புரதம் கிடைக்காமலும் நம் கிட்னியில் யுரியா அதிகம் தேங்கி யூரிக் அமிலம், கவுட், கிட்னிக்கு கூடுதல் வேலை ஆகிய சிக்கல்கள் நேர்கின்றன.

9
அமினோ அமிலமும் முழுமையாக இருக்கும் முதல் தர மாமிச/பால்/முட்டை புரதம் முழுமையாக நம் உடலால் கட்டுமான பணிகளுக்கு பயன்பட்டு கழிவாக வெளியேறுவது மிக குறைந்த அளவிலேயே நிகழ்கிறது

மற்றபடி

நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர் 100- 120 கிராம் அளவு புரதம் மேக்ஸிமம் அளவில் எடுக்கலாம். அதற்கு மேல் போனாலும் அஞ்சவேண்டியதில்லை. ஆனால் நாம் எடுக்கவேன்டிய முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

400
கிராம் சிக்கன் பிரெஸ்டில் 125 கிராம் புரதம்…சிக்கன் காலை தோலுடன் எடுக்கையில் புரத அளவுகள் குறைவு.

காலை பட்டர் டீ- 8 கிராம் புரதம்
மதியம் 3 முட்டை- 18 கிராம் புரதம்
மாலை: 300 கிராம் சிக்கன் கால் தோலுடன் 75 கிராம் புரதம். மொத்தம் 100. கலோரி போதவில்லை எனில் கூட பட்டர் நிறைய சேர்த்து எடுக்கலாம். காய்கறிகளும் எடுக்கலாம

இதே மட்டன், பீஃப், போர்க் என்றால் கொழுப்பின் சதவிகிதம் மிக அதிகம். புரதம் குறைவு. அதனால் குழுவில் மட்டன் எடுப்பவர்கள் ஆட்டுகொழுப்பை மட்டும் தனியாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்

திங்கள், 23 மே, 2016

போட்டோகிராபிக் மைண்ட் !!!

ஒரு வகுப்பில் படிக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே பாடம்தான். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் சிலரால் மட்டும் எப்படி நன்றாகப் படிக்க முடிகிறது? ஒரு சிலர் இயல்பாகவே கவனத்தைக் குவித்துப் படித்து சிறந்து விளங்குவார்கள். படித்த விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.

ஆனால்,எல்லோருக்குமே இந்தத் திறமைகள் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்காக இது நமக்கு வராது என்று விட்டுவிடமுடியாது.


கீழே காணப்படும் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள்படிக்கும் விதத்திலும் புரிந்துகொள்ளும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

நேரம்,படிக்கும் சூழல் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம். இதை எப்படிச் செய்வது?

#
உங்கள் இலக்குகள் என்ன என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது காலாண்டுத் தேர்வில் நான் இவ்வளவு மதிப்பெண் வாங்குவேன் என்றோ அரையாண்டுத் தேர்வில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வருவேன் என்றோ இருக்கலாம்.

#
ஒரு பாடத்தைத் தொடங்கும் முன் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு கவனத்தையும் செலுத்தும் வகையில்அதற்கான நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

#
படிப்பதையும் செயல்முறைப் பயிற்சிகள் செய்வதையும் அவ்வப்போதே செய்து முடித்துவிடுங்கள்.அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப் போடாதீர்கள்.

#
படிக்கிற எது ஒன்றையும் நினைவில் படமாக்கி ஞாபகம் வைக்க முயலுங்கள். போட்டோகிராபிக் மைண்ட் என்று அதை சொல்வார்கள்.

#
படிக்கிற எதையும் அன்றாட வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் படிக்கிற ஒரு பாடம் தொடர்பான ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் ஏற்கெனவே இருந்தால்தான் அதோடு தொடர்புபடுத்தி உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

#
அப்படி முற்றிலும் புதிதான விஷயங்களை மனதில் இறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவற்றை இணைத்து ஒரு குறியீட்டுத் தொடரை பாஸ்வேர்ட் போல உருவாக்கிக்கொள்ளுங்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டதும் படித்த பாடத்தின் வினாவிடைகள் எல்லாம் நினைவுக்கு வருவதுபோல பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

#
ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டே படிப்பது என்பது மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சி. படித்த பாடம் முழுவதுமே சிறு சிறு குறிப்புகளாகபாயிண்ட் பாயிண்டாக உங்கள் முன் நோட்டுப்புத்தகத்தில் காட்சிதரும். ஒரு பாரா முழுவதும் படித்ததை ஒரு வரியில் சுருக்கி குறிப்பு எழுதுவது என்பது மாணவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி.

# பாடத்தின் பொருள் புரிந்து படிப்பது மிகவும் பயன் தரும். ஒவ்வொரு வரியையும் புரிந்தபிறகு அடுத்த வரிக்கு போவது என்பது ஆரம்பத்தில் சிறிது சிரமம்போல காட்சியளிக்கும். ஆனால் அது விவேகானந்தர் போல பாரா பாராவாக படுபயங்கர வேகத்தில் வாசிக்கும் திறமையை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஆரம்ப காலடித்தடங்கள் அவை. அதனால் புரிந்து படிங்கள். புயல்வேக வாசிப்புக்கு தயார் ஆகுங்கள்.

வரிகோஸ் வெயின்ஸ் என்றால் என்ன?

வரிகோஸ் வெயின்ஸ் என்பது வழமைக்கு மாறாக விரிவடைந்த, வீக்கமான, நீல நிறமுடைய, முடிச்சுண்டு இருப்பது போல் காட்சியளிக்கும் நரம்புகளாகும். இவை பெரும்பாலும் மெல்லிய எரிச்சலூட்டும் வலியுடையதாகவும், வேதனையுடையதாகவும் விளங்குகிறது.

 
இது நரம்புகளின் உள்ளே உள்ள வால்புகள் தவறாக செயற்படுவதன் விளைவாக ஏற்படுகிறது. இதயத் துடிப்பின் மூலம், இரத்தம் நாடி வழியாக உடலில் உள்ள திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. அது மீண்டும் நாளங்கள் வழியாக இதயத்தை சென்றடைகிறது. பொதுவாக நாடி, நாளங்கள் அனைத்தும் குழாய் வடிவாக கட்ச்சியளிக்கும் ஆனால் நாளங்களில் இரத்தம் பின்நோக்கி பாய்வதைத் தடுப்பதற்க்காக அதன் உட்சுவரில் மிக மெல்லிய வால்வுகள் காணப்படும். வால்வுகள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் குருதிச்சுட்டோட்டம் பலவீனமடைவதோடு, இரத்தம் நரம்புகளினுள் திரண்டு விடுகிறது. அப்போது நரம்புகள் பெரிதாகக் காட்சியளிக்கின்றன.

வரிகோஸ் வெயின்ஸ் இன் அறிகுறிகள்:
கால் உழைவு
# வீக்கம்
# கால் புண்கள்
# சொறியும் தன்மை
# காலில் தசைப்பிடிப்பு
# கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு

ஆகியவற்றை குறிப்படலாம். குருதிச்சுட்டோட்டம் குறைவாக இருப்பதால் வரிகோஸ் வெயின்ஸ் உருவாகிறது. இது பொதுவாக ஒரே நிலையில் அதிக நேரம் இருப்பவர்கள், உட்காரும் போது கால்களை குறுக்கே போட்டு உட்காரும் பழக்கம் உடையவர்கள், வழமையாக உடற்பயிற்சி செய்யும் போது தவறான முறையில் செய்பவர்கள், ஆகியோருக்கு இது பொதுவாக ஏற்படும் ஒன்றாகக் காணப்படுகிறது.


அதிக உடல்நிறை, பாரமான பொருட்களை தூக்குதல், கற்ப காலத்தில் காலுக்கு அழுத்தம் அதிகரித்தல், போன்றனவும் வரிகோஸ் வெயின்ஸ் விருத்தியடைவதைத் தூண்டுகின்றது. மற்றும் மலச்சிக்கல், இதயச் செயலிழப்பு, ஈரல் சார் நோய்கள், வயிற்றில் ஏற்படும் கட்டிகள், போன்றானவும் வரிகோஸ் வெயின்ஸ் உருவாவதற்க்கு காரணமாகின்றது. விட்டமின் C, Bio flavonoids (முக்கியமாக ரூறின்) ஆகியவற்றின் குறைபாடும் நரம்பு சுவர்களில் கொலாஜன் அமைப்பைப் பலவீனமடைய செய்கிறது. இச் செயற்பாடு வரிகோஸ் வெயின்ஸ்க்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில் இது குடும்ப அலக்கிலிருந்தும் ஏற்படலாம். இவ் வரிகோஸ் வெயின்ஸ் உருவாவதற்க்கு ஹார்மோன் மாற்று சிகிச்சைகளும் மற்றும் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளும், பங்களிப்பு செய்கிறது. என பல விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். இந் நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.