காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீரில் கழுவுவது மிகவும் முக்கியம்தான். ஆனால் அதுவே அதிகமாக செய்யும் போது சத்துக்களை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
பொதுவாக தானியங்களை ஒரு முறை அல்லது 2 முறை அலசினால் போதுமானது. அதுவும் தண்ணீர் விட்டு லேசாக தானியத்தை களைந்து பின் அந்த நீரை ஊற்றி விட்டால் போதும்.
அதற்காக தானியத்தை கைகளால் நன்கு பிசறி கழுவிக் கொண்டே இருக்க வேண்டாம்.
அதுபோலத்தான் காய்கறிகளையும் நறுக்குவதற்கு முன்பாக ஒரு முறை அலசிவிட்டு பிறகு நறுக்கிப் பயன்படுத்த வேண்டும். பழங்களை தோலுடன் நன்கு கழுவியபிறகு சாப்பிடலாம்.
காய்கறிகளை தண்ணீரில் வேக வைப்பதை விட ஆவியில் வேக வைப்பது நல்லது. காய்கறிகளின் தோலை அதிகமாக நீக்கிவிட வேண்டாம்