நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 12 ஜனவரி, 2017

பருப்புக் கீரை கடையல்

தேவையான பொருட்கள்:
கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 1/4 கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
தக்காளி - 1 (பெரியது)
மிளகாய் வத்தல் - 4
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும். பாதி தக்காளியை பொடியாக வெட்டி வைத்துக்கொண்டு வெங்காயத்தை பொடியாக வெட்டவும். குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். சுவையான பருப்புக் கீரை கடையல் தயார். சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்