நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 22 மே, 2012

பொக்கிஷங்கள்

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்! 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்! ...

திங்கள், 21 மே, 2012

பீ‌ட்ரூ‌ட் ,

‌ ‌பீ‌ட்ரூ‌ட் எ‌ன்றது‌ம் எ‌ல்லோருமே சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள், இது ர‌த்த ‌விரு‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌ன்று, அது ம‌ட்டும‌ல்ல ‌பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாது உ‌ப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

ஞாயிறு, 13 மே, 2012

பலாப்பழ அல்வா மற்றும் பாயசம் !

இது பலாப்பழ சீசன்.  இப்பொழுது கிடைக்கும் பழத்தை உபயோகித்து, பலாப்பழ விழுதை செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது, "இனிப்பு இலை அடை", "கொழுக்கட்டை", "பாயசம்" என்று விதவிதமாக சமைக்கலாம். பெரும் அளவில் செய்ய முடியாவிட்டால், தேவைக்கேற்ற பலாச்சுளைகளை வாங்கி சிறு அளவில் செய்யலாம்.

பலாப்பழ விழுது
  

தேவையானப்பொருட்கள்:

பலாச்சுளை - 10 முதல் 15 வரை
பொடித்த வெல்லம் - 1 கப்
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

பலாச்சுளையிலிருந்து, கொட்டையை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் 1/4 தண்ணீர் சேர்த்து, பிரஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.  இதை மைக்ரோவேவ் அவனிலும் அல்லது திறநத பாத்திரத்திலும் வேக வைத்தெடுக்கலாம்.  வெந்தப் பலாச்சுளை சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

விழுது எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சம அளவிற்கு வெல்லம் சேர்க்க வேண்டும்.  மேற்கூறிய அளவிற்கு ஒரு கப் வரை விழுது கிடைக்கும்.  எனவே ஒரு கப் பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டவும்.  வடிகட்டிய வெல்லப்பாகை ஒரு அடி கனமான் வாணலியில் விட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதையும் சேர்த்து, அடுப்பிலேற்றி, மிதமான தீயில் கிளறவும்.  பாகும், விழுதும் நன்றாகச் சேர்ந்து, கெட்டியாக சுருண்டு வரும் வரைக் கிளறி, சுக்குப்பொடியைத் தூவி மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ அல்வா


அல்வா செய்ய வேண்டுமென்றால், மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, சுக்குப் பொடிக்குப் பதில் சிறிது ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரிப்பருப்பு, சிறிது நெய் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

பலாப்பழ பாயசம் 


பாயசம் செய்ய மேற்கண்ட முறையில் விழுது தயாரித்து, கடைசியில் ஒரு கப் தேங்காய்பாலைச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள், முந்திரி,  ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.  தேங்காய்பாலிற்குப்பதில் சாதாரண பாலையும் சேர்க்கலாம்.

செவ்வாய், 8 மே, 2012

உடல் முழுவதும் மருந்தாகும் 'ஆட்டிறைச்சி'

மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்கவேண்டும்.
ஆட்டின் தலை:இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்.ஆட்டின் கண்:கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.ஆட்டின் மார்பு:கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்.ஆட்டின் இதயம்:தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்.ஆட்டின் நாக்கு:சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்.ஆட்டின் மூளை:கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.ஆட்டின் நுரையீரல்:உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.ஆட்டுக் கொழுப்பு:இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்.ஆட்டின் குண்டிக்காய்:இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.ஆட்டுக்கால்கள்:எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்

திங்கள், 7 மே, 2012

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா?


ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம் ,

madulai
மாதுளை

வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது.

banana
வாழைப் பழம்


சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.


grapes
திராட்சை பழங்கள்


அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.


guava
கொய்யாப் பழங்கள்



சிறு துரும்பும் பல் குத்த உதவுவதுபோல இந்த சின்ன விஷயங்களிலும் நாம் கவனம் எடுக்கும்போது நமது உடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. நீண்ட ஆயுட்காலத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

Orange Fruit
ஆரஞ்சு


பழங்கள் நமது உடல்நலத்தில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நோய்வாய்ப் படும் காலங்களில் பழமே மிகவும் பிரதான உணவாக இருக்கிறது. மருத்துவர்கள் இக்காலங்களில் பரிந்துரை செய்வது பழங்கள் தான்.

ஆரோக்கியம் தரும் சில அற்புத பழங்களின் படங்கள்:


amla
நெல்லிக் கனிகள்

star fruit
நட்சத்திர பழங்கள்

naval palam
நாவல் பழங்கள்

tomatoes
தக்காளிப் பழங்கள்


apple fruits
ஆப்பிள் பழங்கள்


`



papaya fruit
பப்பாளிப் பழம்



Holy Spirit Fruit
செர்ரி பழங்கள்
குறிப்பு: பதிவில் குறிப்பிட்டுள்ள பழம் வாழைப்பழம். நாம் அன்றாட விருந்துகளில் பயன்படுத்தும் பழமாகையால், குறிப்பாக விருந்தில் வாழைப்பழம் வைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளதாலும் சாப்பிட்ட பிறகே பலரும் பழத்தை சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர்க்கவே இப்பதிவு.. பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். நன்றி.!

ஞாயிறு, 6 மே, 2012

கேழ்வரகு ragi இனிப்பு மற்றும் கார சேமியா !!

கேழ்வரகு சேமியா,  வெவ்வேறு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு, அவரவர் நிறுவன பெயரில் விற்கப்படுகிறது.   நான் "அணில் ராகி சேமியாவை" உபயோகித்து இனிப்பு மற்றும் கார சேமியா செய்தேன்.    சேமியாவை சமைக்கும் முறையை சேமியா பாக்கெட்டிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.  அதன்படி சேமியாவை வேக வைத்துக் கொண்டால்,  அதை உபயோகித்து விதவிதமான உணவைத் தயாரிக்கலாம்.
சேமியா வேக வைக்க:
ஒரு பாக்கெட் (200 கிராம்) ராகி சேமியாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, மூன்று நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் அதை அலசி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, எண்ணை தடவிய இட்லி தட்டில் பரப்பி, 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுத்து, ஆற விடவும்.இனிப்பு சேமியா:
தேவையானப்பொருட்கள்:
வேக வைத்த சேமியா (மேற்படி வேக வைத்ததில் பாதி அளவு)தேங்காய்த்துருவல் - 1/4 கப்சர்க்கரை - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை செய்முறை:மேற்கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.கார சேமியா:

தேவையானப்பொருட்கள்:வேக வைத்த சேமியா (மேற்படி வேக வைத்ததில் பாதி அளவு)எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்கடுகு - 1/4 டீஸ்பூன்கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரைபச்சை மிளகாய் - 2 அல்லது 3கறிவேப்பிலை - சிறிதுநறுக்கிய காய்கள் (கேரட், குடமிளகாய், தக்காளி போன்றவை ) - 1/2 கப்எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுசெய்முறை:ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.  பருப்புகள் சிவக்க வறுபட்டதும், வெங்காயம், பச்சைமிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்), கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.  பின்னர் அதில் காய்களைச் சேர்த்து, சிறிது உப்பையும் போட்டு ஓரிரு நிடங்கள் வதக்கவும்.  கடையில் வேக வைத்துள்ள சேமியா, சிறிது உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.  அடுப்பிலிருந்து இறக்கும் முன், எலுமிச்சம் பழச்சாற்றச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

புதன், 2 மே, 2012

கேழ்வரகு இட்லி/தோசை

கேழ்வரகு இட்லியை வெவ்வேறு முறைகளில் தயாரிக்கலாம்.

1 கப் கேழ்வரகு, 1 கப் இட்லி அரிசி, 1/2 கப் உளுத்தம் பருப்பு, 2 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, உப்பு போட்டு கரைத்து, புளிக்க வைத்து, மறுநாள் இட்லி அல்லது தோசை செய்யலாம்
 
கேழ்வரகிற்குப்பதில், கேழ்வரகு மாவை சேர்த்தும் செய்யலாம்.  மேற்கூறிய பொருட்களில், கேழ்வரகை தவிர்த்து விட்டு மற்ற அனைத்தையும் ஊற வைத்து அரைத்து, அத்துடன் 2 கப் கேழ்வரகு மாவையும் சேர்த்து,  உப்பு போட்டு கரைத்து, இரவு முழுவதும் புளிக்க விட்டு, மறுநாள் இட்லி/தோசை சுடலாம்.
 
அல்லது, வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவில் (2 கப் மாவிற்கு 1 கப் கேழ்வரகு மாவு) கேழ்வரகு மாவைச் சேர்த்து,  அத்துடன் சிறிது உப்பும்,  1/2 டீஸ்பூன் "ஃபுரூட் சால்ட்டும்"  சேர்த்துக் கலந்து, இட்லி/தோசை செய்யலாம்.
 
நான் இரண்டாவதாகக் கூறியுள்ள முறைப்படி, அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து, அத்துடன், கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, புளிக்க வைத்து இட்லி/தோசை செய்தேன்.

மாவில் சுவைக்காக, கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டி செய்தேன்.

தோசை சுட,. இட்லி மாவில் மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசையாக சுட்டெடுக்கவும்.

கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.