நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 19 நவம்பர், 2014

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
மூலிகை கசாயம்:
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

திங்கள், 10 நவம்பர், 2014

இரத்த சோகை { ANEMIA } !!!

ரத்தமின்றி எந்த உடலும் இயங்காது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.போதுமான அளவு ரத்தம் உடலில் இல்லையேல் உடல் நிலை பாதிக்கப்படும். சிவப்பணுக்களின் எண்ணிக்கையை ரத்தத்தைப் பரிசோத்தித்து அதிலிருக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அந்த அணுகளில் உள்ள ஹீமோக்ளோபின் என்னும் சிவப்பு நிற அணுக்களின் அளவையும் கணக்கெடுத்து அங்கீகரிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருப்பின் அது இரத்தச் சோகை என அழைக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் "அனீமியா" என்று அழைகிறார்கள்.
anemia
இரும்புச் சத்தின் குறைப்பாட்டினால் ஏற்படுவது தான் இதற்கு காரணம்.
பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆங்கீகரிக்கப்பட்ட அளவு வேறுபடும்.
ஆணுக்கு சிவப்பணுக்கள் 55,00,000மும் , ஹீமோக்ளோபின் அளவு 110%, 17 கிராம் இருக்கவேண்டும்.
பெண்ணுக்கு சிவப்பணுக்கள் 45,00,000மும் ஹீமோக்ளோபின் அளவு 90%, 14.5 கிராம் இருக்கவேண்டும்.
ஹீமொக்லோபினே ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் ஆக்சிஜெனை எடுத்து செல்வது ஹீமொக்ல்பினே.
அங்கிருந்து கரியமில வாயுவை (கழிவு) எடுத்துவருகிறது.
நாம் ஆரோகியமாக இயங்குவதற்கு ஹீமோக்ளோபின் அளவு ரொம்ப முக்கியம். ஹீமோக்ளோபின் அளவு குறையத் தொடங்கினால், சின்னச் சின்னப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதை நாம் சுதாரித்து நல்ல இரும்பு சத்துள்ள பொருட்களை உண்டோமானால் எளிதில் குணப் படுத்தலாம். பேரிச்சம் பழம், தேன், பிஸ்தா பருப்பு, கீரை, பீட்ரூட் போன்றவைகளில் இரும்பு சத்து அதிகம்.
ஒருவேளை நாம் கவனிக்கத் தவறிவிட்டால், இரும்புச் சத்தின் குறைப்பாட்டால் ஹீமோக்ளோபின் அளவும் குறையத் தொடங்கும். அதன் காரணமாக உடலில் பல பாதிப்புகள் உண்டாகலாம
உடலில் வலி மூட்டு வலி
ஜீரண சக்திக் குறைந்து போவது
பெண்ணுக்கான மாதவிடாய் கோளாறுகள், ஆதில் குறிப்பாக
சீரற்ற நிலையும் அதை சார்ந்து ஏற்படும் பிரச்சனைகளும் வர
வாய்ப்புள்ளது.
ஏதேனும் ஓர் உறுப்பு வீங்குவது, அல்லது உடலில் வீக்கம்.
உடல் மெலிந்து, வெளுத்து காணப்படும்.
வேகமாக செயல் புரியும் போது தலை சுற்றல் ஏற்படும
அடிக்கடி பதற்றமடைதல்.
கைகளை முறுக்கி விட்டார் போல் உணர்ச்சி ஏற்படும்
கைகளில் ஏதோ கனத்தை வைத்தார் போன்ற உணர்வு உண்டாகும்.
கை கால் விரல்கள் மரத்துப் போவது அல்லது விண்விண்னென்று தெரிப்பது போன்ற உணர்வு.
அளவு மிகவும் குறைந்துப் போனால் அதாவது நான்கு அல்லது ஐந்து அளவிற்கு குறைந்தால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலை உண்டாகும்.
இரத்த சோகை வரக் காரணம் என்ன ?தேவையான அளவு ஓய்வும் தூக்கமும் இல்லாமல் இருப்பது.
சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது.
சீரற்ற உணவு பழக்கவழக்கங்கள்.
டைபோய்ட், மலேரியா, மூல நோய், கொக்கிபுழு நோய் , இறப்பை மற்றும் குடலிருந்து ரத்தப் போக்கு போன்ற நோய்களினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டால், ஹீமோக்ளோபின் அளவு குறையும்.


anemia
விபத்துகள், பிரசவ காலத்தில் ஏற்படும் அதிகபடியான இரத்த இழப்பு, மேலும், பெண்களுக்கான சில பிரத்யேகமான உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள், பயம், கோபம், மன அழுத்தம் போன்றவைகளாலும் இரத்த சோகை வருவதற்கான முக்கியக் காரணம் எனக் கருதலாம்.
மேற்கூறியவைகளை குணப் படுத்த முயலும் பொழுது நமக்கு உடலில் வறட்சி, உஷ்ணம் அதிகமிருந்தால், ஜீரணசக்தி மட்டுப்பட்டிருந்தால் அதுமட்டுமின்றி அடிக்கடி மலம் கழிக்கும் நிலை இருந்தால், அதை குணப் படுத்திக் கொண்டு பின் இரும்பு சத்துள்ள உணவினை உண்பது நல்லது. கூடவே வைட்டமின் சத்துள்ள பொருட்களை சேர்த்து உண்பது உடலுக்கு நன்மையைத் தரும

தேனின் மருத்துவம் குணங்கள்.! ! !

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்