நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 23 மே, 2013

மூளையைப் பாதிக்கும் பத்து பழக்கங்கள்

மூளை
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்க ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்...!

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று...!

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை...!

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வுகொடுக்கும் . வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலி மூளைக்கு நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது...!

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது...!

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது...!

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்உருவா கின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது...!

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள் !!

இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் அந்த பிரச்சனைகளை தவிர்க்க பலரும் டயட்டை பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகமாக உள்ளது என்று டயட்டை மேற்கொள்கின்றனர். இவ்வாறு டயட்டை மேற்கொண்டால் மட்டும் போதாது, டயட்டில் என்ன உணவுகளை சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம். அவ்வாறு தினமும் மேற்கொள்ளும் டயட்டில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சேர்க்க வேண்டுமென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அத்தகைய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவற்றை தினமும் உணவில் சேர்த்தால், அவை வயிற்றை நிறைத்து, உடலை சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!
பசலைக் கீரை
கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால், தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது. அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே மதிய வேளையில் இநத் கீரையை வேக வைத்து, கடைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது
பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அவை உடலில் புற்றுநோய் செல்கள் வராமல் தடுப்பதோடு, மற்ற கொடிய நோய்கள் வராமலும் தடுக்கும். மேலும் இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதால், சருமமும் பொலிவோடு இருக்கும்
எலுமிச்சை
தினமும் குறைந்தது ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, உடல் எடையும் குறையும்

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நன்கு சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸில் பீட்டா-குளுக்கான் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. மேலும் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும். மேலும் டயட்டில் இருப்பவர்கள், இதனை தினமும் சேர்த்து வந்தால், செரிமானப் பிரச்சனை இல்லாமல் இருக்கும்

செவ்வாய், 14 மே, 2013

வாய் ஆரோக்கியமே ! இதயத்தின் ஆரோக்கியமும் !!

சுத்தமான பற்கள் மற்றும் சுவாச ஆரோக்கிய பழக்கம், வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது. பொதுவாக பல் மருத்துவரை நாட வேண்டும் என்று கூறுவது வழக்கம், ஆனால் பெரும்பாலும் நாம் அதை செய்வதும் இல்லை. நம் வாய் ஆரோக்கியம் குறித்து கவலை கொள்வதும் இல்லை.தாய்வானை சேர்ந்த ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான வாய் என்பது இதய பாதுகாப்பிற்கு உகந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதய கோளாறுக்கு முக்கிய பலவீனமாக கூறப்படும் ஊற்றறை உதறல்( arterial caliberation), ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்றவற்றை வாய் ஆரோக்கியத்தை காப்பதன் மூலம் தவிர்க்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது
  மொத்தம் 29,000 பேரின் வாய் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முடிவில், அதன் முடிவில் அவர்களது இதய ஆரோக்கியம் குறித்து பரிசீலித்து அதன் மூலம் அவர்களிடம் அசாதாரண இதய துடிப்பு என்பது காணப்பதவில்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

வாய் ஆரோக்கியத்துடன் உள்ளவர்களுக்கு பாக்டீரியா தமனிகள் பாதிப்பு மிகவும் குறைவு, இவர்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.சர்வதேச இதயவியல் சம்மேளனம் முடிவில் கூறுகையில், பல் மருத்துவரை தவறாமல் பார்த்து வாய் சுகாதாரத்தை பேணுபவருக்கு மூன்றில் ஒரு பங்கானவருக்கு இதய ஆரோக்கியம் அம்சமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி !!!

மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தர்பூசணி
தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

நோய்விடுபட அற்புதங்கள் செய்யும் இளநீர் !!!

உலக அளவில் தென்னை வளர்ப்பில் இந்தியா 3-ம் இடத்தை வகிக்கிறது. தென்னையானது 56 சதவீதம் இளநீருக்காகவும், 44 சதவீதம் தேங்காய் எண்ணை மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா உஷ்ணம் மிகுந்த நாடாகும். அதிலும் குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதுடன், உடலை குளிர்ச்சி ஆக்குவதில் முதன்மை இடம் வகிக்கின்ற இளநீர் தென்னையில் இருந்து தான் பெறப்படுகிறது.


நோய்களை தடுக்கும் இளநீர்
இளநீரில் சர்க்கரை சத்து 5.5 சதவீதத்திற்கு அதிகமாகவும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மையை செவ்விளநீர் பெற்றுள்ளது. இவ்வாறு பலவகைகளில் பயன்படும் தென்னையை நடும்போது இளநீருக்காக மட்டும் உள்ள தென்னை மரங்களை மட்டும் சாகுபடி செய்யாமல், இளநீர் மற்றும் தேங்காய்க்கு பயன்படும் திருவையாறு-2 என்ற ரக தென்னம்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் தென்னை விவசாயிகள் நல்ல இலாபம் பெறலாம். கோடைகால வியாதிகளை தடுக்கக்கூடிய இளநீரை நாம் பருகி நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.நச்சு நீக்கி
நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது.குறைந்த இரத்த அழுத்தம்
இளநீரில் உள்ள குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வழி செய்கிறது. தீக்காய நிவாரனி
தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது.எடை இழப்பு
இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது.

ஆமணக்கெண்ணெயின் அரிய மருத்துவ குணங்கள்

கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிக்க...
ஆமணக்கெண்ணெய் இனிப்பானது. இது விபாகத்திலும் இனிப்பு. இது சீக்கிரமாக வேலை செய்கிறது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது, கபம், வீக்கம், குளிர்ச் சுரம் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக இருக்கிறது



ஆமணக்கெண்ணெய்

உபயோகங்கள் : குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற மருந்துகளில் மிக உத்தமமானது இது. இதை நாள் தோறும் ஒரு தேக்கரண்டி அளவு தாய்ப் பாலிலேனும், பசும் பாலிலேனும் கலந்து கொடுக்கலாம். வயிற்றினுள் ஏற்படும் வீக்கமான நிலையில் இதை மிகவும் பாதுகாப்பான மலப் போக்கியாகக் கொடுக்கலாம். ஆயுர்வேத மருத்துவர்கள், சிற்றாமணக்கு எண்ணெயை ஆமவாத நோயில், நோய்க்குரிய மருந்தாகக் கருதப்படுவது ஏன் எனின், அது உடலிலுள்ள விஷத்தன்மையை வெளிப்படுத்த உதவி செய்கின்றது. வெளிப் பிரயோகத்தில், தோலின் வெடிப்புகட்கும், பிளவுகட்கும், பாதங்களின் எரிச்சலுக்கும் பயன்படுகிறது. சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் கலந்து பசையாக சிரங்குகட்கு வெளிப்பிரயோகமாகப் போடலாம். கட்டிகளுக்குப் போட அவை பழுத்து உடையும். சிற்றாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவரப் பெண்களுக்குப் பால் சுரக்கும்.

இலைகளைச் சிறுக அரிந்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கித் தாங்கக்கூடிய சூட்டில், வேதனையுடன் கூடிய கீல்வாதங்கட்கும், வாதரத்த வீக்கங்கட்கும் ஒற்றடமிடலாம்; இதனால் வேதனை தணியும். சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமபாகமெடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காய் அளவு மூன்று நாளைக்குக் காலையில் மாத்திரம் கொடுத்து, நான்காம் நாள் 3 அல்லது 4 முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைச் சூரணம் கொடுக்க, காமாலை தீரும். மலக்கட்டும், வயிற்று வலியும் உள்ளபோதும், சூதகக் கட்டு அல்லது சூதகத் தடையுடன் அடிவயிற்றில் வலிகாணும்போதும், அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு எண்ணெயை இலேசாகத் தடவி, அதன் மீது சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டுவர, அவைகள் குணப்படும். வாதத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் கஷாயங்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். எண்ணெயின் செய்கை : மலமிளக்கி (Laxative) ; வரட்சியகற்றி (Emollient) சிறப்புக் குணம் : சிற்றாமணக்கு எண்ணெயினால் மருந்தின் வேகம், வாயுவினால் மூலத்தில் உண்டாகும் அழரை ஆகியவை நீங்கும். குழந்தைகளைத் தாய் போல வளர்க்கும். இதைப் பேதியாவதற்குக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் பேதிக்குத் கொடுக்க இது ஓர் சிறந்த மருந்தாகும். இது குடலைத் தூண்டி மலத்தைச் சுகமாகக் கழிக்கும். வயிற்று வலி, ஆசனக் கடுப்பு முதலிய துர்க்குணங்களைப் பிறப்பிக்காது; ஆகையால், கைக்குழந்தை முதல் கிழ வயதுடையவர் வரையிலும், கர்ப்பிணி, பிரசவித்த பெண், பித்ததேகி, மூலரோகி, சீத இரத்த பேதியால் வருந்துவோர், பிரமேக ரோகிகள் ஆகியவர்களுக்குப் பயமின்றிக் கொடுக்கலாம். வயிற்று வலியால் துன்புறுவோருக்கு இதைக் கொடுக்க, சாந்தமாய்ப் பேதியாகும். கபத்தினால் ஏற்படும் கோழைக்கட்டு, சுவாசம், சுவாச காசம் இவைகட்குச் சிற்றாமணக்கெண்ணெய் இரண்டு பங்கு, தேன் அரை பங்குசேர்த்து நன்றாய் உறவுபடக் கலந்து கொடுக்க இலேசாக மலம் போதலுடன் நோய் தணிந்து சுகமுண்டாகும். கண்கள், மருந்து வேகத்தாலும், தூசுகள் விழுந்து அருகி சிவந்தாலும், சிற்றாமணக்கெண்ணையும் முலைப்பாலும் கூட்டிக் குழைத்துக் கண்ணிலிட, சிவப்பு மாறும்; அருகலும் குணமாகும்.