நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 25 ஆகஸ்ட், 2010

அழுகையோடு......கவிதை

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..
எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த முத்தம்..
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;

நமது தேசத்தின் சில அவலங்கள்!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!

புதன், 4 ஆகஸ்ட், 2010

மனித உடலைப் பற்றி சில தகவல்கள்.

உங்கள் உடலுக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்.

1. கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

2. இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.

3. இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.

4. இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.

5. நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.

6. நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.

7. ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.

8. இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.

9. மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.

10 .மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.

11. நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.

12. உடலில் சராசரியாக 10,000,000,000, 000,000,000, 000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.

13. நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.

14. உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.

15. இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.

16. மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.

17. பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.

18. மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது.

19. தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.

20. நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

21. உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.

22. நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.

23. நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.

24. மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.

25. பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

இல்லை! இல்லை !!இல்லை !!!

அரேபியாவில் ஆறுகள் இல்லை
அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
ஈசலுக்கு வயிறு இல்லை.
உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.
சிங்கப்பூரில் காகங்கள் இல்லை.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

பொதுவான தகவ‌ல்க‌ள்

உளுந்து வடையை அதிகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலு‌க்கு அ‌திகமான குளிர்ச்சியை உண்டாக்கும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

ஏ‌, ‌பி, ‌சி, ஆ‌கிய மூ‌ன்று வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் ‌நிறை‌ந்த ஒரே பழ‌ம் வாழை‌ப்பழ‌ம்.

க‌றிவே‌ப்‌பிலை‌யி‌ல் வா‌ய்‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கு‌ம் ரைபோ‌பிளே‌பி‌ன் எ‌ன்ற ச‌த்து‌ம், சோகை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் போ‌லி‌க் அ‌மில‌ச் ச‌த்து‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன.

வாழை‌த் த‌ண்டு உட‌லி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌ப் பொரு‌ட்களையு‌ம், ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ற்களையு‌ம் ‌நீ‌க்க வ‌ல்லது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் த‌ன்ன‌ம்‌பி‌க்கை இ‌ன்மையையு‌ம் நர‌ம்பு‌க் கோளாறுகளையு‌ம் கா‌ட்டுவதாக உ‌ள்ளது.

‌சிறு‌நீரக‌க் க‌ல் ஆப‌த்தை‌த் தடு‌க்கு‌ம் எலு‌மி‌ச்சை

எலு‌மி‌ச்சை‌யி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌சி ச‌த்து உ‌ள்ளது. இது உடலு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. அ‌தி‌ல்லாம‌ல் ப‌ல்வேறு மரு‌த்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌ப்பது எலு‌மி‌ச்சையாகு‌ம்.

த‌ற்போது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் க‌ல் உருவாகாம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் எலு‌மி‌ச்சை‌க்கு உ‌ண்டு எ‌ன்று மரு‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

‌‌சிறு‌நீரக‌த்தை நலமுட‌ன் பராம‌ரி‌ப்ப‌தி‌ல் எலு‌மி‌ச்சை‌யி‌ன் செய‌ல்க‌ள் ப‌ற்‌றி அமெ‌ரி‌க்கா‌வி‌ன் சா‌ன்டியகோ‌வி‌ல் உ‌ள்ள ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌சிறு‌நீரக நலமைய‌த்‌தி‌ன் இய‌க்குந‌ர் ரோஜ‌ர் ச‌ர் தலைமை‌யி‌லான குழு‌வின‌ர் ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர்.

ஆ‌ய்‌வி‌ல், ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் க‌ல் உருவாகாம‌ல் தடு‌ப்ப‌தி‌ல் எலு‌மி‌ச்சை ‌சிற‌ப்பாக செய‌ல்படு‌கிறது. ம‌ற்ற ‌சி‌ட்ர‌ஸ் ‌நிறை‌ந்த பழ‌ங்களை‌க் கா‌ட்டிலு‌ம் எலு‌மி‌ச்சை ‌ந‌ல்ல ‌வித‌த்‌தி‌ல் செய‌ல்படுவது‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

எனவே, ‌தினச‌ரி உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உ‌ப்பு, கா‌ல்‌சிய‌ம், புரோ‌‌ட்டீ‌ன் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் பா‌தி‌ப்பை‌க் குறை‌க்க, எலு‌மி‌ச்சை சாறு ‌மிகவு‌ம் உதவு‌ம்.

‌‌விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க

‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌‌‌ச்‌சிலை, துள‌சி, வே‌ப்ப‌ங்கொழு‌ந்து இவை மூ‌ன்றையு‌ம் ந‌ன்கு அரை‌த்து பா‌சி‌ப்பயறு, வெ‌ந்தய‌ம் பொடி செ‌ய்து கல‌ந்து தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்து வர க‌ற்றாழை நா‌ற்ற‌ம் ‌மிகு‌ந்த ‌விய‌ர்வை வருவது ‌நீ‌ங்கு‌ம்.

இது கோடை‌க்கு ஏ‌ற்ற கை வை‌த்‌திய முறையாகு‌ம்.

இதய நோ‌ய்களு‌க்கு‌ம் வை‌த்‌திய‌ம் உ‌ண்டு

தாமரை இதழ்களை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் பொடியைத் தேன்விட்டு குழப்பி 2 வேளை சாப்பிட்டு வர, இருதயம் பலப்படும். இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் சீராக அனுப்பும்.

செந்தாமரை பூவின் இதழ்களை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர உடல் சூடு தணியும்.

தாமரை விதைகள் நன்றாகக் காய்ந்ததாக ஒரு கையளவு எடுத்து 1 டம்ளர் பசும் பாலில் 12 மணிநேரம் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்தப் பாலை மட்டும் குடித்துவர, உடல் குளிர்ச்சி அடைந்து மூத்திரம் வெள்ளையாகப் பிரிந்து போகும்.

தாமரை விதையை 1 கிராம் எடுத்து அதை 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்துவர உடல் சூடு தணிந்து தாது வளர்ச்சி அடையும்.

கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர, வீரிய விருத்தியும், தேக பலமும் உண்டாகும். (குட்ட வியாதி உள்ளவர்களுக்கு இது ஆகாது.)

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

 தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

   பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தூதுவளை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

 தூதுவளை எ‌ன்பது கொடி இனமாகு‌ம். இலை முழு‌க்க ‌சி‌றிய மு‌ட்களை‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ந்த‌க் கொடி‌யி‌ல் பூ‌க்கு‌ம் பூ மித ஊதா நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம். பழ‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம்.

தூதுவளை‌க் கொடியை பந்தல் போட்டு‌ம், வ‌ே‌லி‌யி‌ல் படர‌வி‌ட்டு‌ம் வள‌ர்‌க்கலா‌ம். கொடி‌யி‌ல் இரு‌க்கு‌ம் மு‌ட்க‌ளி‌ன் காரணமாக எ‌ந்த கா‌ல்நடைகளு‌ம் இதனை சா‌ப்‌பிடாது. எனவே பாதுகா‌‌க்க வே‌ண்டிய அவ‌சியமே இ‌ல்லை.

தூதுவளை‌க் கொடி‌யி‌ன் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் கொண்டவை.

இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும்.

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ந்த கொடி‌யின‌ம் ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் சாதாரணமாகவே வள‌ரு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.