நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 16 மார்ச், 2014

மாம்பழம் { தோல்நோய், அரிப்பு போன்றவை தீர }

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

மாம்பழம்
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உமாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.


மாம்பழம்
  
மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்லர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் பொருள் மாம்பழத்தில் உள்ளது. எனவே, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினை நீக்கி உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

mango
 மாம்பழத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் அளவுடன் சாப்பிட்டுப் பயன் பெறலாம்.
அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்த்துப் போராடுவதிலும் உடலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதிலும் செயல்படுகிறது. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6, மக்னீசியத்துடன் இரும்புச் சத்தையும் அதிகம் கொண்டுள்ளது. இரும்புச்சத்து ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது