நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 29 ஜூலை, 2010

உங்களுக்கு தெரியுமா.?

சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.


# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

# ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

# ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும்.

# உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

# டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

# வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

# பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

# மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

# கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

# கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

# ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

# சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்

# ஹக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கோல்கட்டதா நகரம்.

# நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

# ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

# நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

இடியின் வேகம் கொட்டாவி விடுவது ஏன்? ஓசி

இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர்


இடி மின்னலை வைத்து நீங்கள் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று உடனடியாகக் கணக்கிட முடியும். இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர். அதாவது வினாடிக்கு 1 கிலோ மீட்டர். மின்னல் தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் இடியின் சப்தம் கேட்கும். இந்த இடைப்பட்ட நேரத்தைக் கண்டுபிடித்து மூன்றால் வகுத்தால் இடி எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்பது தெரியும். உதாரணமாக மின்னலுக்கும் இடிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 27 வினாடிகள் என்று வைத்துக் கொண்டால் அதை மூன்றால் வகுத்தால் வரும் விடை 9. அப்படியானால் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இடி விழுந்தது என்று அறியலாம்.

கொட்டாவி விடுவது ஏன்?

நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
ஓசி
இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் பொகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

வியாழன், 22 ஜூலை, 2010

பாசமுள்ள நண்பரே நட்பு செய்வோம்

பாசமுள்ள நண்பரே






நண்பர்கள் இல்லாதவர்கள் நரம்பற்ற வீணைக்கு ஒப்பானவர்கள். நண்பர்கள் பலவிதம். கருணை பொழியும் அன்னையாய் ஒருவர்; அடிமை போல் சேவகம் செய்யும் ஒருவர்.

ராகங்கள் வெவ்வேறு என்றாலும், பாடல் என்னவோ அன்பென்ற ஒன்றுதான்!



நண்பர்கள் இல்லாத வாழ்க்கை, சாட்சி இல்லாத மரணம் மாதிரி. நம்மிடம் பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லை. நட்புக்கு நல்லடையாளம் வெறும் அறிமுகம் அன்று; எதையும் இழக்க சம்மதிக்கும் ஆழமான அன்பு!



ஒன்றாகச் சேர்ந்து சினிமா பார்ப்பதும், தேநீர் அருந்துவதும், கடற்கரை மணலில் கனவுகளைப் பகிர்ந்து கொள்வதும் பழக்கத்தை வளர்க்கலாம். இவற்றால் மட்டும் ஆழமான நட்பு அரங்கேறுவது இல்லை. உடன் வந்து பொழுதுபோக்குபவரிடம் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமேயன்றி, இதயத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது.



சுயநலமற்ற அன்பில்தான் நட்பு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். நண்பர்கள் வேறு; கூட்டாளிகள் வேறு; தோழர்கள் வேறு. ஒரே மாதிரியான ரசனை போதும், ஒருவரிடம் தோழமை கொள்வதற்கு! ஒரு பொதுவான நோக்கம் போதும், கூட்டாளியாய் இருப்பதற்கு! ஆனால், அழிவற்ற நட்புக்கு இன்னும் நுணுக்கமான ஆழ்ந்த அன்பு அவசியமாகிறது.



கணவனும் மனைவியும்கூட நண்பர்களாக இருக்க முடியும். அதற்கு இருவரும் திறந்த புத்தகங்களாக இருக்க வேண்டும்.





`மனைவிஅமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றார் கண்ணதாசன். மனைவி மட்டும்தானா? நண்பர்கள் அமைவதும் அவன் கொடுத்தவ ரமே!



வாய்த்த நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை வளம்பெறுகிறது. அவர்களே தீயவர்க ளாக அமைந்துவிட்டால், மொத்த வாழ்க்கையும் இருண்டு விடுகிறது. வாழ்க்கை நதியின் போக் கையே நட்பு மாற்றிவிடுவதால், வள்ளுவர் அதை நான்கு அதிகாரங்களில் ஆய்ந்திருக்கிறார். வார்த்தைச் சிக்கனம் மிக்க வள்ளுவர், நாற்பது குறளை நட்புக்குச் செலவழித்திருப்பதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்திவிடுகிறார்.



கையில் ஒருமுறை பச்சை குத்தினால், காலனின் கடிதம்வந்து, கனலில் வெந்து நீராகும் வரை அது மறைவதில்லை. நட்பும் பச்சை குத்துவது போன்றதே. மோசமான நண்பர்களை உதறிவிட்டாலும், அந்த நட்பின் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் நம்மோடு நடைபோடும்.



ஆயிரம் பேரிடம் நமக்கு அறிமுகம் நேர்ந்தாலும், ஆழமான நட்புக்குரியவர்கள் ஆறு பேர் தேறமாட்டார்கள். சோதனை நம்மைச் சந்திக்கும் சூழலில் சுயநல நட்பு சொல்லிக்கொள்ளாமலே கழன்று போகும். வாழ்க்கையை வியாபாரமாகக் கருதி சூதாட்ட வெறியோடு விளையாடுபவர்களிடம் உண்மையான நட்பு ஒரு பாதும் உருவாகாது. அன்பின் ஆதிக்கத்தில் தன்னலம் தகர்ந்து போகும். தன்னலத்தின் ஆளுகையில் அன்பு அழிந்து போகும்.



அன்புதான் இன்பம். அன்புதான் சிவம். அன்பில் கனிவதுதான் நல்ல நட்பு. அந்த நட்புக்கு நாளும் நேரமும் ஒதுக்குங்கள். வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க அதுதான் வழி!

புதன், 14 ஜூலை, 2010

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.

தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

வாழைத் தண்டு

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.




வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைப் பூ



வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.



அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘



வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?



ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.



நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது மூதுரையார் வாக்கு.



உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.

   
இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
வரலாறு: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது.
கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள் மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.
அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். .
  வாழையில் அதிகமாக இருக்கும் வகைகள்: 1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை. இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. காய்வகை பழுக்காது. பழுத்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது

மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. அதேபோல் சிறியது, தட்டை, வழவழப்பு, சொரசொரப்பா, விரல் நீளம் என்று பல வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டது.

வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.

குணங்கள்: வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ கிளைகளோ கிடையாது. உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும் குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.

சத்துக்கள்: பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி 10 மில்லி கிராம்> விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.

மருத்துவக் குணங்கள்

1.நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

2.கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

3. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

4. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

5.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

6.குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

7. மிக ஆரோக்கியமான ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.