நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 30 நவம்பர், 2015

மனதை வருடிய வரிகள்

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்!!!
தந்தையிடம் பணம் இருந்தால் அவர் பெயரை நம் பெயரோடு இணைகிறோம் நம்மிடம் பணம் இருந்தால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம்!!!
உன் வாழ்கையில் எந்த ஒரு நாளில் உன் முன்னாள் எந்த பிரட்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய்!!!
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும்!!!
ஆயிரம் பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒருகல் போதும்! ஆயிரம் மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒருகெட்டவன் போதும்!
"நமக்கு வரும் தடைகளை கண்டு மிரளுவதை விட ஒரு முறை துணிவதே மேல் வரலாற்றில் பல சரித்திரங்களை மாற்றியவர்கள் எல்லாம் தடைகளை தவிடு பிடியாக்கியவர்கள்

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன

நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்..
மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். – நபிகள் நாயகம்

நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்லாவோட்சு

தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பயனும்தான் வெற்றிக்கான வழி.
மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு. உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்..!
அன்பிற்கும் நோபல் பரிசு வழங்க பெற்று இருப்பது உண்மையில் பாராட்ட கூடிய விசையம் அன்பையே மையமாக வைத்து வாழ்ந்து காட்டிய அன்னை தெரேசா தான்

இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல . அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்களால் தான்.
"வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையே செய்வோம்

நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்

நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்!
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
பயத்தை விடு! இல்லை இலட்சியத்தை விட்டு விடு!"

நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். – தோழர் மாவோ

பு ரட்சிகள் உருவாகுவதில்லை நாம்தான் உருவாக்கவேண்டும் ! தோழர்சேகுவாரா

சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினாலென்ன? நின்றாலென்ன?
நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்!
நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்

கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூல வேர்"..!
எத்தனை நிறைகள் இருந்தாலும், ஒரு குறை இருந்தால்!!! இவ்வுலகம் உன்னை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடும்!!!
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !! தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!
அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு!
ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும் !! தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவதே இல்லை!!
விதைகள் கீழ் நோக்கிஎறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்..! விழும்போது விதையென விழு விருட்சமாய் எழு!
செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை !!! உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான் !!!
"அறிவின் ஆழம் புரியட்டும் சிகரம் கண்ணில் தெரியட்டும் …!
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவான செயல் ..!!
முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும்

நம்மை சிந்திக்க தூண்டும் வரிகள் !!!
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்

உண்மையான போராளியின் உண்மையான வார்த்தைகள் !!
"வெற்றியே விட தோல்விக்கு பலம் அதிகம் " "வெற்றி சிரித்து மகிழ வைக்கும் " "தோல்வி சிந்தித்து வாழ வைக்கும் "

நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.
இதமான வார்த்தைகளை பேச முடியாத பட்சத்தில்மௌனம் காப்பது மேல் அல்லது உங்களின் சூழ்நிலையை மாற்றுவது சிறந்தது!
"போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல .. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே"…!!
ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை..!

புரட்சியாளன் வெற்றிப்பெற்றால் அவன் போராளி..! தோல்வியுற்றால் அவன் தீவிரவாதி..!

திங்கள், 16 நவம்பர், 2015

நகைச்சுவைகள்

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. – பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!

 

மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க ...



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக

, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்: கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்: கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை: எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு
: சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி: எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு: பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது

செவ்வாய், 10 நவம்பர், 2015

எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது சோயா பீன்ஸ்!!

சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயிர் கொல்லியானஎய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.
அதில் சோயாபீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும்எச்..வி.’ கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெனிஸ்டின் செல்களில் எச்..வி. கிருமிகள் ஊடுருவி பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.