நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

புதன், 25 நவம்பர், 2020

சப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...?

 திருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.


சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

 

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான  சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்பு கொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும்  பயன்படுத்தலாம்.

 


கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 

முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ  வேண்டும்.

 

இருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு  செய்ய வேண்டும்.

 

வெள்ளைபடுதல் குணமாக  இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.


ஞாயிறு, 8 நவம்பர், 2020

இரத்த சோகைக்கு எதிராக போராடும் சத்துக்களை கொண்ட ஆப்ரிகாட் !!

 தினசரி உணவில் உலர்ந்த ஆப்ரிகாட்களை சேர்த்துக் கொள்வது, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடியதான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் நல்லது.



இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான  செம்பும் இதில் நிறைந்துள்ளது. 

 

தினமும் இந்த ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தால் குடலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதில் அதிகம் கரையும் மற்றும் கரையாத நார் சத்து இருப்பதால்,  உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

 

சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், நல்ல போஷாக்குடன் இருக்கவும், ஈரத்தன்மை மிகவும் முக்கியம். இந்த பழம் சருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மையை  போதுமான அளவு தந்து எப்போதும் நீரேற்றத்தோடு வைத்திருக்க உதவுகின்றது.

 

இந்த பழத்தில் வைட்டமின் A மற்றும் பல சத்துக்கள் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. இதனால் கண்களில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் குணமடைந்து, நலல் ஆரோக்கியம் பெற உதவுகின்றது


செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மன அழுத்தம் இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்...?

 மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.


பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும்  இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

 


சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும்  மனஅழுத்தம்  இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.

 

மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும்போது, எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

 

பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே  நரைமுடியானது வந்துவிடுகிறது.

 

எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால்  பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.

 

மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு  சக்தியானது குறைவாக  உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது ஏற்படும்.

செரிமான பாதையில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!

 தினமும் உணவு உட்கொண்ட பிறகு வெந்நீர் அருந்துவது சிறந்தது. வெந்நீர் அருந்துவதால் உணவு சீக்கிரமாக செரிமானம் ஏற்படுகிறது.  மேலும் வயிறு உப்பசம்  குறையும்.


இஞ்சியில் உள்ள அமிலம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. தினந்நோறும் இஞ்சியை சிறு துண்டாகவும் உண்டு வரலாம் அல்லது இஞ்சி  டீயாகவும் பருகலாம்.

 

உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு ஓமத்தை மென்று சாதாரண நீர் அல்லது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சீராகும். தினமும் ஒரு லவங்கத்தை  சாப்பிடுவதாலும், இரண்டு லவங்கத்தை நீரில் கொதிக்கவைத்து சிறிது தேன் கலந்து குடித்துவர செரிமானம் சீராகும்.

 


பட்டையில் உள்ள மருத்துவ குணமானது செரிமானப் பாதையில் உள்ள கோளாறுகளை சரிசெய்து ஜீரணத்தை சுலபமாக்குகிறது. தினமும் தமான சுடு தண்ணீரில்  எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் ஏற்படாது.

 

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய்க்கிருமிகளும் வர  வழிவகுக்கும்.

 

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. மேலு சாப்பிட்ட உடன் தேநீர் அருந்துவதால், இவற்றில் உள்ள அமிலங்கள் உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்த்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடுகிறது.

 

சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிடுவதால் இவை வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மக்காச்சோளத்தில் உள்ள சத்துக்களின் முக்கிய பங்கு என்ன...?

 சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது.

 

சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. 

 

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. எனினும் மூல நோயாளிகள் சோள உணவை  தவிர்ப்பது நலம்.


 

சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள்  நிறைந்திருக்கின்றன. மேலும் மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது.

 

சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன.

 

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி  அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குவதாக பல முறை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

 

சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

குடல்வால் { APPENDIX }

 நமது பெருங்குடலில் குடல் வால் என்ற சிறிய குழாய் பகுதி காணப்படும். இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல் வால் அழற்சி என்கிறோம். இந்த அழற்சி சாதாரணமான ஒன்றாக இருந்தால் கூட சீக்கிரமே இதற்கு சிகிச்சை அளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சுமார் 9 சதவீத ஆண்களும் 7 சதவிகித பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் குடல் அழற்சியைப் பெறுகிறார்கள் என்று நியூயார்க் நகரத்தில் உள்ள மருத்துவமனை கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த குடல் வால் சிறியதாக நமக்கு பயனில்லாமல் இருந்தால் கூட இதில் ஏற்படும் பாதிப்பு நம் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குடல் வால் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) குறிப்பாக இளம் வயதான 5 - 25 வயதிற்குரியவர்களை அதிகம் தாக்குகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


குடல் வால் அழற்சி ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் சில நபருக்கு 3 நாட்களுக்கு அப்புறம் கூட அறிகுறிகள் தென்படுமாம். இந்த வீக்கம் பெரிதாகி அழற்சி குடல் வால் சிதைவதற்குள் அல்லது வெடிப்பதற்குள் நாம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை நாம் லேப்ரோஸ்கோபி மூலம் செய்ய முடியும். ஆனால் சிலருக்கு அறிகுறிகள் தெரிவதே இல்லை என்பதால் இதை கண்டறிவதே கடினமாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் வயிற்றில் அழுத்தி கைகளை வைத்து குடல் வாலில் அழற்சி இருக்கிறதா என்று கண்டறிய வேண்டியுள்ளது. இருப்பினும் குடல் வால் அழற்சியின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் உங்க சிகிச்சையை முன்னரே செய்ய முடியும். இதனால் உங்க உயிருக்கு ஆபத்து வருவதையும் நீங்கள் தடுத்துக் கொள்ளலாம்.


இந்த குடல் வால் அழற்சி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. பாக்டீரியா, பூஞ்சை போன்ற குடல் வாலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளால் இது ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தொற்று வீக்கமடைந்து குடல் வால் வெடிக்க ஆரம்பிக்கும்.

கீழ்கண்ட சில அடிப்படையான அறிகுறிகளை வைத்து, குடல் வால் அழற்சி இருப்பதை பிரச்சினையின் தீவிரத்துக்கு முன்பாகவே உங்களால் கண்டுகொள்ள முடியும். அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்

குடல் வால் வலி பெரும்பாலும் அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் ஏற்படுகிறது. முதல் அறிகுறியாக வலி தொப்புளில் ஏற்பட்டு அப்படியே வலி அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் கூட வலியை உணர வாய்ப்புள்ளது. சிலருக்கு அடிவயிற்றை அல்லது கால்களை கூட நகர்த்த முடியாது. அப்படி செய்யும் போது வலி அதிகமானதாக உணர்வார்கள். இருமல், தும்மல், காரில் பயணிக்கும் போது ஏற்படும் குலுங்கல் இவற்றின் போதும் வலி தீவிரமாகும். நிறைய பேருக்கு தொப்புளுக்கு வலி எடுத்தால் அதை கண்டுபிடிக்கத் தெரியாது. ஆனால் இந்த குடல்வால் அழற்சியைப் பொருத்தவரையில், வலி தீவிரமடைய ஆரம்பிக்கும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியும்.


வலியானது அடிவயிற்றில் தீவிரமாக ஆரம்பிக்கும். அப்பெண்டிக்ஸ் இருப்பவர்களுக்கு வலியின் தீவிரத்தால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க முடியாது.

காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படுதல்

100 டிகிரி காய்ச்சல் என்பது உங்களுக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கலாம். ஆனால் 103 வரை காய்ச்சல் அடித்து எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது குடல் வால் அழற்சி யாக இருக்கலாம். வலியுடன் காய்ச்சலும் உங்களை கஷ்டப்படுத்த ஆரம்பிக்கும்.

அடிவயிற்று வலியுடன் ஓரிரு நாட்களுக்கு மேல் வயிறு வீக்கமும், வாயுப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இருந்தால் உங்க குடல் வாலில் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்த பிரச்சினை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

வயிற்றை அழுத்தும் போது வலி ஏற்படுதல்

உங்கள் வலது அடிவயிற்று பகுதியை அழுத்தும் போது அந்த பகுதியில் வலியை உணர்வீர்கள். மறுபடியும் மறுபடியும் வலி உண்டாதல் அதனுடன் காய்ச்சல், குமட்டல் போன்ற பிற அறிகுறிகளும் தென்பட்டால் தாமதம் ஆகாமல் மருத்துவரை அணுகுங்கள்


புதன், 15 ஜூலை, 2020

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் வடை

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான பிரெட் வடை ரெடி.

காரசாரமான மைசூர் சில்லி சிக்கன்

சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,

தேவையான பொருட்கள்

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான மைசூர் சில்லி சிக்கன் ரெடி.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயாவின் பயன்கள்...!!

பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவு சோயா மட்டுமே. பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.

சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. 
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது. 
 
எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை,  குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
 
வாழ்நாள் முழுவதும் சீரான, ஆரோக்கியமான வாழ்வுக்கு, நோய் தடுப்பு முறைகளே சிறந்த ஆதாரமாகும். இதில் பெரும்பங்கு வகிப்பது ஆரோக்கியமான இயற்கை  உணவுகளே. நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஊட்டச்சத்து நிறைந்த சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம்,  கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது. 

குழந்தைகளின் முடிவளர்ச்சிக்கு உதவும் சில பயன்தரும் குறிப்புகள் !!

குழந்தையின் தலையில் முடி இருக்கிறதோ இல்லையோ வாரம் இருமுறை தலைக்கு குளிப்பாட்டுங்கள். தினமும் தலைக்கு குளிப்பாட்ட வேண்டாம். வெயிலில் சென்றால் தலையில் மறைக்க பேபி டவல், ஹேட், கேப் பயன்படுத்து நல்லது.

சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுகள் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ, பி, சத்துக்கள் முடியின் தரத்தை மேம்படுத்தும். பருப்புகள்,  பப்பாளி, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் இச்சத்துக்கள் உள்ளன.

தொடர்ந்து எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து வந்தால் ஸ்கால்புக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லும். இதனால் முடி வளர்ச்சியும் சீராக இருக்கும். முடிக்கு  தேவையான ஈரப்பதமும் கிடைக்கும்.

2 அல்லது 3 நாளைக்கு ஒருமுறை முடியை அலசுங்கள். வியர்வையால் உண்டாகும் அழுக்கு, கிருமிகள் நீங்கும். மேலும் தயிர், செம்பருத்தி, முட்டை போன்ற இயற்கை கண்டிஷனரை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். முடி ஆரோக்கியமாகும்.

ஈரமான முடியை துவட்டும்போது, மிதமான அழுத்தத்தில் முடியை துவட்டுங்கள். வேகமாக தேய்க்க கூடாது. ஒத்தி எடுப்பது சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கு  முடியை காய வைக்க டவலால் துடைப்பதே சரியான வழி. ப்ளோ ட்ரையர் போன்றவற்றை எக்காரணத்துக்கும் பயன்படுத்த கூடாது.

தலைக்கு மிருதுவான பிரஷ் அல்லது சீப்பை பயன்படுத்துவது நல்லது. சீரான இடைவெளியில் ஹேர் கட் செய்வதால், குழந்தைகள் அழகாக இருப்பார்கள். முடி  பிளவுகளும் ஏற்படாது. கண்கள் அருகில் வரை, முடி வளர்ந்து தொல்லை செய்யாது.

திங்கள், 15 ஜூன், 2020

குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்...?

ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் ஒரு நாளைக்கு 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.
நம் குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் சரியாகும். 
 கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை  சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ்  செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.
 ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி  குடித்தால் குடல் சுத்தமாகும்.
 குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து  வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.
 அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
 கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும்  சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வைக்கும்.

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வெரிகோஸ் வெயின் நோய்க்கு தீர்வு..!!

சுத்தமான மண், எறும்பு புற்றுமண் சிறிதளவு எடுத்து நீரில் குழைத்து நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய வைத்து, ஒரு மணி நேரம் கழித்து  வெதுவெதுப்பான நீரில் கழுவினால் அதிக வலி, வீக்கம் நரம்பு வலி குறைவதை உணரமுடியும்.


மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு - 3 துண்டு, கற்றாழை நுங்கு - தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.

இதை நரம்பு சுருட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரை பொறுமையாக இதை செய்து வர வேண்டும். அப்படி செய்துவந்தால் முதலில் வீக்கமும், பிறகு வலியும், படிப்படியாக குறைந்து நரம்பு சுருட்டல் விலகும்.

அத்திக்காயிலிருந்தும் பால் கிடைக்கும். இதை நரம்பு முடிச்சி இருக்கும் இடங்களில் தடவி பிறகு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் நரம்பு சுருட்டல் சரியாகும்.

மூட்டுகளுக்கும், நரம்புகளுக்கும் வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய்கள் பலவும் உண்டு. அதில் ஒன்றை தேர்வு செய்து இலேசாக சூடு செய்து நேரடியாக நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் தேய்க்காமல் சற்று கீழிலிருந்து தேய்த்து நரம்பு முடிச்சு இருக்கும் பகுதியில் இலேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்தால்  படிப்படியாக நரம்பு வலி நிவாரணம் பெறலாம்.
 நரம்பு சுருட்டலை அறிந்ததும் மருந்து கடைகளில் கிடைக்கும் சுருக்க கால் உறைகளை. பொதுவாக கால் வலி இருப்பவர்கள், இதை பயன்படுத்தலாம். இந்த சாக்ஸை அணிவதன் மூலம் கால்களுக்கு அழுத்தம் கொடுத்து காலில் இருக்கும் கெட்ட ரத்தத்தை இதயத்தை நோக்கி செல்வதற்கு தூண்டுகின்றன. இதனால் நரம்பு  வீக்கம் குறையும்

வியாழன், 14 மே, 2020

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய காரணம் என்ன....?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது.

கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான  இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின்  உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.

ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து நிறைந்து உணவை அதிகம் பரிந்துரைக்கின்றார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், கர்ப்பிணிப்  பெண்களுக்கு ஏற்படக் கூடும்.

கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும். உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. உடலில் இரும்புச் சத்து சரியாகக்  கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம். முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில்  ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

புதன், 13 மே, 2020

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா...? எளிய இயற்கை அழகு குறிப்புகள்...!

சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப்  பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.
 
வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள்.  அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும். இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை  இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.
 
விளக்கெண்ணெய்யை தினமும் புருவங்களில் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெய்யில், புரதச்சத்து,  ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. 
 
ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை  புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள். 
 
முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை  ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும்  குறைகிறது. 

கொலஸ்ட்ரால் உண்டாவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

நம் உடலில் கல்லீரல் உடலுக்குத் தேவையான கொழுப்பில் குறிப்பிட்ட அளவை மட்டுமே சுரக்கிறது. அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலமும் நம் உடலில் கொழுப்பு சேர்கிறது. அதிலும் நாம் கொழுப்புச் சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளையும் துரித உணவுகளையும் உண்பதால் நம் உடலில் கொலஸ்ட்ராலின்  (இரத்தத்தில் கொழுப்பின்) அளவு அதிகரிக்கிறது.

 
சிறுவயதிலிருந்தே கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்டவர்களுக்கு ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது.  இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இளவயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.
 
அன்றாடம் உடற்பயிற்சி இல்லாமல் செயலற்று இருப்பதும் அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாமலும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்க காரணமாகிறது.
 
உடல் பருமனாகவும், உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருப்பதால் கலோரிகள் எரிக்கப்படாததால் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிக்கும். பொதுவாக இவ்வாறு இருப்பது நல்ல கொழுப்பின் (மிகையடர்த்தி லிப்போ புரதத்தின்) அளவைக் குறைக்கிறது.
 
நாம் உண்ணும் உணவில் நல்ல கொழுப்புகளும் உள்ளன. அவைகளை நமது உணவில் சேர்த்து உண்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் அண்டாமல் நமது உடல் மிக நலமுடன் இருப்பதுடன் நமது இருதயமும் நலமாக இருக்கும்
 
புகைப் பிடித்தலும் இரத்தக் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவை அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகும். இவ்வாறு கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவது இதயம் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஞாயிறு, 22 மார்ச், 2020

சுலபமான முறையில் காராப் பூந்தி செய்ய...!

தேவையான பொருள்கள்:
காராப் பூந்தி

கடலைப் பருப்பு - 200 கிராம்
இட்லி அரிசி - 50 கிராம்
நிலக்கடலை - 3 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
காயத்தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:

முதலில் கடலைப்பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் பருப்பு, அரிசியுடன் மிளகாய் தூள், காயத்தூள், உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்வாக அரைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களில் அரைபட்டு விடும்.
                                                                                     
நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் எண்ணெயின் மேல் ஒரு பெரிய கண் கரண்டியை  வைத்து ஒரு மேஜைக்கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.

பூந்தி நன்கு சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் போட்டு வெந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.

சூடாக இருக்கும் எண்ணெய்யில் கறிவேப்பிலையை வறுத்து காரப்பூந்தியுடன் சேர்க்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள நிலக்கடலையும் சேர்த்து கலந்து விடவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான காராப் பூந்தி தயார்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

வீட்டிலேயே செய்யலாம் பாதாம் பர்ஃபி

பாதாம் பருப்பு பர்ஃபிடியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 400 கிராம்



செய்முறை:

பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும்.

பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.

சூப்பரான பாதாம் பருப்பு பர்ஃபி ரெடி.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்....!!

வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது.
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை  கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது. ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு  துணைபுரிகிறது.

தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது.

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாக்குகின்றது.

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும்  தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது

திங்கள், 10 பிப்ரவரி, 2020

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம்,  கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன்,  நினைவாற்றல் அதிகரிக்கும்.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை  ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

கறிவேப்பிலையை இந்த முறையில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக்  கொண்டிருக்கும்.
கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம், கடுக்காய்த்தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி ஒரு  சிட்டிகைபொடியை வெந்நீரில் இரு வேலை குடித்து வர அழிந்துப் போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும்.

நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள், உடலில் எங்காவது இருந்தால் அவற்றைப் வெளியேற்றும்.

கறிவேப்பிலை இலையைக் கைப்பிடி அளவு, மிளகாய் 2 இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையல் செய்து சாப்பிசலாம். இவை குமட்டல், வாந்தி, அசீரணபேதி, சீதபேதி, செரியா மந்தம், வயிற்றுக் கோளாறு குணமாகும்.

கறிவேப்பிலை இலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, கைப்பிடி அளவுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி வர  பித்தநரை, இளநரை மாறும்.

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டு பிசைந்து சுடுசோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல், பேதி நிற்கும். குடல் பலவீனத்தால் ஏற்படுகின்ற  பேதியும் நிற்கும்.

கறி வேப்பிலையை தொடர்ந்து உணவில் உபயோகித்துவர சளி, கபநீர்க்கட்டு அடங்கும். கறிவேப்பிலை, ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில்  போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி நான்கு வேலை 50 மில்லி வீதம் குடித்து வர சளி, இருமல், காய்ச்சல், வாதக் காய்ச்சல்  குணமாகும்.

நோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்!

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.



* தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

* ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும்.

* இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் சாப்பிடலாம்.

* அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

* எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

* உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.