நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 19 மே, 2011

வெறு‌ம் காலுட‌ன் ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி

ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி செ‌ய்பவ‌ர்களு‌க்கு கால‌ணி மு‌க்‌கியமான ‌விஷயமாக இரு‌க்கு‌ம். வெறு‌ம் காலுட‌ன் ‌சிலரா‌ல் ஓடவே முடியாது. ஆனா‌ல் வெறு‌ம் காலுட‌ன் ஓடுவதே ந‌ல்லது எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தடகள ‌வீர‌ர்க‌ள் ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி‌யா‌ல் பெறு‌ம் சாதக, பாதக‌ங்க‌ள் ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்த ஹா‌ர்வ‌ர்டு ப‌ல்கலை‌க்கழக‌ம் இ‌ப்படி‌ப்ப‌ட்ட முடிவை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

கு‌திகா‌ல் கொ‌ண்ட ஷூ அ‌ணி‌ந்து கொ‌ண்டு ஓடுபவ‌ர்களு‌க்கு தரையுட‌ன் ஏ‌ற்படு‌ம் உரா‌ய்வா‌ல் அ‌தி‌ர்வலைக‌ள் மூ‌ட்டு ம‌ற்று‌ம் உட‌ல் பகு‌திகளு‌க்கு கட‌த்த‌ப்ப‌ட்டு உட‌ல் வ‌லி ஏ‌ற்படு‌ம் சா‌த்‌திய‌க் கூறு‌க‌ள் இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.

கு‌திகா‌ல் இ‌ல்லாத ஷூ அ‌ணி‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் அடி‌ப்பாத‌த்‌தி‌ன் நடு‌ப்பகு‌தி வ‌ழியாக குறைவான அ‌தி‌ர்வுக‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டன. இதனா‌ல் உட‌ல் வ‌லி ஏ‌ற்படுவது த‌வி‌ர்‌க்க இயலாததா‌கிறது.

அதே சமய‌ம், வெறு‌ம் காலுட‌ன் ஓடியவ‌ர்களு‌க்கு எ‌ந்த‌வித பா‌தி‌ப்பு‌ம் இ‌ல்லை. இதனா‌ல் உட‌ல் வ‌லியு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது
.

ஞாயிறு, 15 மே, 2011

நல்லெண்ணைய்

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்

செவ்வாய், 3 மே, 2011

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.

எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

முதுகுவலி

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பாலானோர் சந்திக்க கூடியதாகவே உள்ளது.

வயதானவர்கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இளவயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்புவதில்லை.

நமது உடலின் பெரும்பாலான எடையை முதுகுதான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடையவர்களுக்கு இப்பிரச்சனையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.

சரியான நிலையில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகுவலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த முதுகுவலிக்கான நிவாரணமும், அதிலிருந்து விடுபடவுமான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கே:

நீங்கள் அதிக உடல் பருமன் உடையவராக இருந்தால், முதலில் உங்களது அதிகப்படியான எடையை குறையுங்கள்.அப்படி செய்தால்தான் உங்களது முதுகிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

முதுகுவலி ஏற்படும் சமயங்களில் பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெய் அல்லது யூக்கலிப்ட்ஸ் தைலம் போட்டு நன்கு மசாஜ் செய்யுங்கள்.

ஒரு மேஜைக்கரண்டி தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் முதுகுவலி குறையும்.

வைட்டமின் சி பற்றாக்குறையும் முதுகுவலிக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே உங்களது உணவில் வைட்டமின் சி சத்து அடங்கிய பால், முட்டை, கீரை போன்ற உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உப்பு கலந்த சுடு நீரில் ஒரு டவலை நனைத்து பிழிந்து, அதனை முதுகில் ஒத்தடம் கொடுக்க வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரே நிலையில் (position) தொடர்ந்து பல மணி நேரம் இருப்பதை தவிருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.கூன் போட்டு உட்காராதீர்கள்.சரியான நிலையில் உட்காராமல் இருப்பதும் முதுகுவலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்

ஆரோக்கியமாக இருப்பது எப்படி

40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.

இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.

40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறும் இந்த நிபுணர்கள் தெரிவிக்கும் மேலும் பல யோசனைகள் இங்கே:

உடற்பயிற்சி:

ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்ன பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ... இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.

பலன்கள்:

இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும்.இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.

வைட்டமின் உணவு:

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.

பயன்கள்:
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை.உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது. மூளைக்கு பயிற்சி:

இணைய தளங்களிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினர், உடற் பயிற்சியை போன்று மூளைக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். புத்தகம் வாசித்தல், செஸ் விளையாடுதல், குறுக்கெழுத்துக்கான விடை காண்பது போன்ற மூளைக்கு பயிற்சி கொடுப்பதை கட்டாயம் செய்ய வேண்டும்.உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்வது கூட மூளைக்கு கொடுக்க கூடிய நல்ல பயிற்சிதான்.

பயன்கள்:

இத்தகைய பயிற்சிகள் உங்களது மூளையை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு, முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி போன்றவ்பற்றை தடுக்கிறது.

தூக்கம்:

நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம்தான் நமது உடல் தன்னை பழுது நீக்கிக்கொள்கிறது. நீங்கள் சரி வர தூங்காவிட்டால் உங்களது உடல் பழைய நிலைக்கு திரும்ப போதுமான கால அவகாசம் கிடைக்காது.எனவே தூக்கம் கட்டாயம் வேண்டும்.

நார்சத்து உணவு:

உங்களது அன்றாட உணவில் நார்ச்சத்து உணவு கட்டாயம் இருக்க வேண்டும்.நாளொன்றுக்கு குறைந்தது 10 கிராம் நார்ச்சத்து உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இருதய நோய்ஏற்படுவதற்கான ஆபத்து 14 விழுக்காடு குறைவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் இருதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 25 விழுக்காடு வரை குறைவதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிப்பதால் நார்ச்சத்து உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.