நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 26 மே, 2014

பேரீச்சை !!!


அவசிய‌ உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம்.
அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள்.
பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் , பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, மருத்துவ குணம் கொண்ட இப்பழத்தை தினம் உண்டு நோயற்ற வாழ்க்கை வாழ்வோமாக!

இருமலை விரட்ட சில வழிகள்!

இன்றையக் காலக்கட்டத்தில் இருமல் ஒரு பெரும் வியாதியாக உள்ளது. இருமலை விரட்ட ஆடுதொடா இலையின் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும். மேலும், இன்புறா, வல்லாரையைக் கசாயம் செய்து சாப்பிடலாம்.
!
*
இருமலை விரட்ட சில வழிகள்
விஷ்ணு கிரந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
*
வெந்தயக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வரலாம்.*
சிறு குறிஞ்சா வேரைப் பொடி செய்து கசாயம் வைத்துச் சாப்பிடலாம்.*
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.*
சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.*
சிறுதேள் கொடுக்கு இலை, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் சாப்பிட்டு வரலாம்.*
இஞ்சிச் சாறு, மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து அருந்தலாம்.*
மிளகுடன் பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை உண்ணலாம்.*
ஓமவல்லி இலைச்சாற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கான சீதள இருமலுக்குக் கொடுக்கலாம்.*
கண்டங்கத்தரி வேர், ஆடுதொடா வேர், திப்பிலி இம்மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி. வீதம் காலை மாலை குடிக்கலாம்.*
மாதுளம்பூவின் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரலாம்.*
கடுகை மைய இடித்துத் தூள் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.


 
*
கஞ்சாங்கோரை இலைச்சாற்றை 20 துளி அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.*
நஞ்சறுப்பான் இலைச்சூரணம் ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் காணாமல் போகும்.*
கொன்றைவேர்ப்பட்டை, தூதுவளைப்பொடி கலந்து சாப்பிட்டால் இரைப்பிருமலை விரட்டலாம்.*
சோடா உப்பைத் தண்ணீரில் கலந்து குடித்தால் கக்குவான் இருமலின் வேகத்தைக் குறைக்கலாம்.*
செந்நாயுறுவி வேர்ப்பட்டைப் பொடியுடன் தேனில் மிளகுப் பொடியும் சிறிது கலந்து குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.*
பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் துணியால் கட்டிக் கொண்டு வந்தால் சளி மிகுதியால் வரும் இருமலை விரட்டலாம்.*
முசுமுசுக்கை இலைப்பொடி, தூதுவளைப் பொடியுடன் கருவேலம் பிசின் கலந்து வெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். நாள்பட்ட இளைப்பிருமல் தீரும்.