நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது.
100
கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும். மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல்நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.
நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.
நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.

மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன் !

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல்வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. விலையும் மிக மலிவாக ரூ.15 முதல் ரூ.20க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

புகைப் பிடிப்பதை நிறுத்தியவர்கள் உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற ஆரோக்கிய உணவுகள்!

புகை பிடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும். புகைக்கு அடிமையானவர்கள் எளிதில் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். புகையிலையில் இருக்கும் மிக முக்கிய மூலப்பொருளான நிகோடின் தொடர்ந்து உடலில் செல்லும்போது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும்.
இந்த அதிவேக ரத்த அழுத்ததைத் தாங்க முடியாமல், நுரையீரல் தன்னுடைய சுத்திகரிக்கும் வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகும். இதனால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.
 மது அருந்தும்போது அதை உட்கொள்பவருக்கே அதிக பாதிப்பு. ஆனால், புகையால், புகைப்பவருக்கு மட்டுமல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகப் பாதிப்பை தந்து, சுற்று சூழலுக்கும் அது தீங்கை விளைவிக்கிறது.
மேலும், புகைப்பிடிப்பதால், உடலில் வைட்டமின்கள் , சி சத்துக்கள் இழக்கப்படும். இந்த வைட்டமின் நம் உடலில் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நிரந்தர நோயாளியாக வாய்ப்பு அதிகம்.

புகைப் பிடிப்பதை நிறுத்தினாலும், நம் உடலில் இருந்து நிகோடினை வெளியேற்ற பல வருடங்கள் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம், புகைத்ததினால், உடலில் கலந்த நிகோடின் அளவைக் குறைக்கலாம்.
ப்ராக்கோல
இதில் வைட்டமின் சி மற்றும் பி5 அதிகமாக இருப்பதால், புகையிலையினால் குறைந்த, வைட்டமின் சி-யின் அளவை அதிகரிக்கச் செய்யும். அது மட்டுமின்றி, உடலில் கலந்துள்ள நிகோடின் அளவைக் குறைக்க இது உதவுகிறது.
ஆரஞ்சு
பொதுவாக நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஆரஞ்சு சாறு மிகவும் நல்லது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸை குடிப்பவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதுடன் மன அழுத்தம், சோர்வுகளை நீக்கவல்லது. இதிலிருந்தும் நமக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும்.
கேரட
ஒவ்வொருமுறை புகைப்பிடிக்கும் போதும் நம் உடலில் மூன்று முதல் நான்கு நாட்கள் அந்த நிகோடின் அளவு குறையாமல் தங்கி விடுகிறது. இதனால் நமது உடலின் உள் உறுப்புகள் மட்டுமில்லாமல் தோலின் தன்மையும் மாறிவிடுகிறது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் , சி, கே மற்றும் பி சத்துக்கள் வேகமாகச் செயல் புரிந்து உடலில் கலந்துள்ள நச்சுப்பொருளான நிகோடினை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
பசலைக்கீரை
கீரை என்றாலே சத்துதான். அதிலும் பசலைக் கீரையில் பல வைட்டமின்கள் உள்ளன. இதில் ஃபோலிக் ஆசிட் அதிகமாகக் காணப்படுகிறது. ஃபோலிக் ஆசிட், ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.
கிவ
பார்ப்பதற்குச் சப்போட்டா பழம் போல இருக்கும் இது. எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவே இருக்கிறது. இந்த அதிசய பழத்தின் மூலம் உடலில் கலந்துள்ள நிகோடின் அளவை விரைவில் வெளியேற்றலாம்.
தண்ணீர்
புகைப்பதினால் உடலில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படும். அதிகளவு தண்ணீர் குடிப்பதின் மூலம், புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும். அது மட்டுமின்றி, நிகோடின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகள் !!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
வாழைப்பழம
இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்.
தர்பூசண
கோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன்(Lycopene), வைட்டமின் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
ஆரஞ்ச
ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
பசலைக்கீர
பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சீராக பராமரிக்கவும் உதவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்க
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.
திராட்சை ஜூஸ
தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.
கேரட
ஆண்கள் கண்டிப்பாக தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

 
 
 

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க சில எளிய வழிகள்!!!

அவர்களை கண்காணிப்பதன் மூலம் உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனையை உள்ளதா இல்லையா என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்கள் குழந்தை மலம் கழிக்க வேண்டும். சில குழந்தைகள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறைதான் மலம் கழிப்பார்கள். மலம் கழிக்க கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வாந்தி, வயற்று வலி, வயறு வீக்கம்,பசியின்மை போன்றவை மலச்சிக்கல் நோயின் அறிகுறிகளாகும். அதனால், அவர்களது டயட்டில் கவனம் கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிடுவதும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.உங்கள் குழந்தைகளின் மலம் கழிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான சில வழிகளைப் பார்க்கலாம்.
1.
ஊட்டச்சத்தான உணவு உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுவகைகள் மிகவும் அவசியமானதாகும். நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை கொடுங்கள். ருசியானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்க வேண்டும். அவர்கள் டயட்டில் பழங்களும் காய்கறிகளும் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களது உணவை அழகாக அலங்கரித்து அவர்களின் பசியை தூண்டுங்கள். உங்கள் குழந்தை நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் போதுமான நீரை பருகுமாறு பார்த்துக்கொள்ளவும். இதனால் உங்கள் குழந்தை மலம் கழிப்பது சீராகும்.
2. வயிற்றை சுத்தம் செய்தல் மலச்சிக்கலை சரிசெய்வதற்கு குழந்தைகளுக்கு லக்சடிவ் மற்றும் ஸ்டூல் சாப்ட்னர் போன்றவற்றை கொடுக்கலாம். இந்த ஸ்டூல் சாப்ட்னர்கள் பாதுகாப்பானதாகும். எனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்டூல் சாப்ட்னர்கள் பயன்படுத்துவதை உடனே நிறுத்தி விடக்கூடாது.
3. உடல் உழைப்பு உடல் நலம் சீராக இருப்பதற்கு உடல் உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இதனால் குழந்தைகளுக்கும் உடலுழைப்பு மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையிடம் போதுமான உடல் உழைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு நாளில் ஒரு குழந்தையிடம் சராசரியாக 60 நிமிடங்கள் உடலுழைப்பு இருக்குமாறு பார்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
4. மருந்துகளில் கவனம் உங்கள் குழந்தைக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகளைக் கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்கும் மருந்துகளில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். அப்படி கொடுக்கும் மருந்தினால் மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனே நிறுத்தி விடவேண்டும். மாறாக அவ்வாறு கொடுக்கும் மருந்தினால் உங்கள் குழந்தையின் உடல் நலம் சீராக இருந்தால் உடனே நிறுத்திவிடகூடாது. இதுவே குழந்தைகளிடையே ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதற்கான வழிகளில் சிறந்த ஒன்றாகும்.
5. ஒழுங்குமுறை சிறிய ஒழுங்குமுறை கூட பல விந்தைகளை செய்யும். வழக்கமான நேரம் ஒன்றை மலம் கழிப்பதற்காக ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் உங்கள் குழந்தை மலம் கழிக்குமாறு செய்யவேண்டும். உங்கள் குழந்தையிடம் "இது பாத்ரூம் போக வேண்டிய நேரம்" என்னும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மேற்கூறிய அனைத்தையும் செயல்படுத்தினால் உங்கள் குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இவை அனைத்து வழிகளையும் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். இருப்பினும், ஒரு குழந்தை குறைவான நார்ச்சத்தை உட்கொண்டு ஸ்டூல் சாப்ட்னர் உபயோகிப்பதும், குறைவான உடலுழைப்பு செய்து அதிக நார்ச்சத்து உணவை உட்கொள்ளுவது போன்றவை எந்த பலனையும் அளிக்காது. அதனால், சரியான முறையில் இவை அனைத்தையும் செயல்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம