தொடர்ந்து கணினியில் வேலை செய்பவர்களுக்கும், அதிகமான நேரத்தை படிப்பதில் செலவிடும் நபர்களுக்கும் தூரப் பார்வை பறிபோகும் ஆபத்து ஏற்படும்.
அவ்வாறு பிரச்சினை எழாமல் இருக்க கணினில் வேலை செய்யும் போதும், படிக்கும் போதும் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
வாகனத்தில் செல்லும் போது நம் கண்கள் மீது நேரடியாக வேகமாக அடிக்கும் காற்று படுவதைத் தவிர்ப்பது நல்லது. இது கண் இமைகளில் உள்ள நீர்த் திசுக்களை பாதிக்கும்.
மங்கலான இடத்தில் அதிக நேரம் படிப்பதைத் தவிர்க்கவும்.
ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக