நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மக்காச்சோளத்தில் உள்ள சத்துக்களின் முக்கிய பங்கு என்ன...?

 சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது.

 

சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. 

 

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. எனினும் மூல நோயாளிகள் சோள உணவை  தவிர்ப்பது நலம்.


 

சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள்  நிறைந்திருக்கின்றன. மேலும் மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது.

 

சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன.

 

இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி  அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குவதாக பல முறை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

 

சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

குடல்வால் { APPENDIX }

 நமது பெருங்குடலில் குடல் வால் என்ற சிறிய குழாய் பகுதி காணப்படும். இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல் வால் அழற்சி என்கிறோம். இந்த அழற்சி சாதாரணமான ஒன்றாக இருந்தால் கூட சீக்கிரமே இதற்கு சிகிச்சை அளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சுமார் 9 சதவீத ஆண்களும் 7 சதவிகித பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் குடல் அழற்சியைப் பெறுகிறார்கள் என்று நியூயார்க் நகரத்தில் உள்ள மருத்துவமனை கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த குடல் வால் சிறியதாக நமக்கு பயனில்லாமல் இருந்தால் கூட இதில் ஏற்படும் பாதிப்பு நம் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குடல் வால் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) குறிப்பாக இளம் வயதான 5 - 25 வயதிற்குரியவர்களை அதிகம் தாக்குகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


குடல் வால் அழற்சி ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் சில நபருக்கு 3 நாட்களுக்கு அப்புறம் கூட அறிகுறிகள் தென்படுமாம். இந்த வீக்கம் பெரிதாகி அழற்சி குடல் வால் சிதைவதற்குள் அல்லது வெடிப்பதற்குள் நாம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை நாம் லேப்ரோஸ்கோபி மூலம் செய்ய முடியும். ஆனால் சிலருக்கு அறிகுறிகள் தெரிவதே இல்லை என்பதால் இதை கண்டறிவதே கடினமாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் வயிற்றில் அழுத்தி கைகளை வைத்து குடல் வாலில் அழற்சி இருக்கிறதா என்று கண்டறிய வேண்டியுள்ளது. இருப்பினும் குடல் வால் அழற்சியின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் உங்க சிகிச்சையை முன்னரே செய்ய முடியும். இதனால் உங்க உயிருக்கு ஆபத்து வருவதையும் நீங்கள் தடுத்துக் கொள்ளலாம்.


இந்த குடல் வால் அழற்சி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. பாக்டீரியா, பூஞ்சை போன்ற குடல் வாலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளால் இது ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தொற்று வீக்கமடைந்து குடல் வால் வெடிக்க ஆரம்பிக்கும்.

கீழ்கண்ட சில அடிப்படையான அறிகுறிகளை வைத்து, குடல் வால் அழற்சி இருப்பதை பிரச்சினையின் தீவிரத்துக்கு முன்பாகவே உங்களால் கண்டுகொள்ள முடியும். அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்

குடல் வால் வலி பெரும்பாலும் அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் ஏற்படுகிறது. முதல் அறிகுறியாக வலி தொப்புளில் ஏற்பட்டு அப்படியே வலி அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் கூட வலியை உணர வாய்ப்புள்ளது. சிலருக்கு அடிவயிற்றை அல்லது கால்களை கூட நகர்த்த முடியாது. அப்படி செய்யும் போது வலி அதிகமானதாக உணர்வார்கள். இருமல், தும்மல், காரில் பயணிக்கும் போது ஏற்படும் குலுங்கல் இவற்றின் போதும் வலி தீவிரமாகும். நிறைய பேருக்கு தொப்புளுக்கு வலி எடுத்தால் அதை கண்டுபிடிக்கத் தெரியாது. ஆனால் இந்த குடல்வால் அழற்சியைப் பொருத்தவரையில், வலி தீவிரமடைய ஆரம்பிக்கும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியும்.


வலியானது அடிவயிற்றில் தீவிரமாக ஆரம்பிக்கும். அப்பெண்டிக்ஸ் இருப்பவர்களுக்கு வலியின் தீவிரத்தால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க முடியாது.

காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படுதல்

100 டிகிரி காய்ச்சல் என்பது உங்களுக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கலாம். ஆனால் 103 வரை காய்ச்சல் அடித்து எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது குடல் வால் அழற்சி யாக இருக்கலாம். வலியுடன் காய்ச்சலும் உங்களை கஷ்டப்படுத்த ஆரம்பிக்கும்.

அடிவயிற்று வலியுடன் ஓரிரு நாட்களுக்கு மேல் வயிறு வீக்கமும், வாயுப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இருந்தால் உங்க குடல் வாலில் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்த பிரச்சினை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

வயிற்றை அழுத்தும் போது வலி ஏற்படுதல்

உங்கள் வலது அடிவயிற்று பகுதியை அழுத்தும் போது அந்த பகுதியில் வலியை உணர்வீர்கள். மறுபடியும் மறுபடியும் வலி உண்டாதல் அதனுடன் காய்ச்சல், குமட்டல் போன்ற பிற அறிகுறிகளும் தென்பட்டால் தாமதம் ஆகாமல் மருத்துவரை அணுகுங்கள்