பாட்டுக்கு வேண்டுமானால் நேத்து வச்ச மீன் குழம்பு மணக்கலாம். ஆனால் நேத்து வச்ச எந்த உணவும் வீண் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதாவது, எந்த உணவாக இருந்தாலும், அதனை சமைக்கும் போது அதிலிருக்கும் சத்துக்கள் வெளியேறும். எனவே, சமைத்த உணவை சூடாக சாப்பிடும் போது அதிலிருக்கும் சத்துக்கள் அனைத்தும் நமது உடலுக்கு கிடைக்கும்.
சூடு ஆறியதும் அதனை சாப்பிடும் போது அது வெறும் சக்கைத்தான். அதில் எந்த சத்துக்களும் இருப்பதில்லை.
சூடு அறியதும் சாப்பிட்டாலே சக்கை என்றால், அதை மறுநாள் எடுத்து வைத்து சூடு படுத்தி சாப்பிட்டால் அதில் என்ன இருக்கும்?
எனவே, சமைத்து அப்போதே சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மீதம் மீந்ததை எடுத்து வைத்து மறுநாள் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக, அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட வேண்டுமானால் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக