ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவது நம்மில் பலருக்கும் தெரியாது.
ஒரு செயற்கையான நிகழ்வினால், உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகிறது.
மேலும், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும்.
வாய் துர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது.
சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிட்டதும், உடலால் அதனைத் தாங்கிக் கொள்ள இயலாத போது உடல் நடுக்கம் ஏற்படுகிறது.
மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பதே இல்லாமலேப் போய் விடும் ஆபத்தும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக