நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

சேப்பங்கிழங்கு வறுவல்



தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு - 5 அல்லது 6
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோளமாவு - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு தேவையான தண்ணீரைச் சேர்த்து, 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து விட்டு 1/4" அளவிற்கு வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும்.  அத்துடன் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசறவும்.  பின்னர் அதில் சோள மாவைத்தூவி பிரட்டி விடவும்.  ஒரு கை தண்ணீரைத் தெளித்து நன்றாகப் பிசறி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கிழங்கு துண்டுகளை, எண்ணை கொள்ளுமளவிற்கு தனித்தனியாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  கடைசியில் சிறிது கறிவேப்பிலையையும் எண்ணையில் பொரித்து,  வறுவலின் மேல் தூவி விடவும்.

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: