நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

மருந்தாகும் மகரந்தத் தூள் !!!

தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்ததுகள்களில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.




தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த மகரந்ததாளில் புரதம், கார்போஹைட்ரேட், பி-காம்ளக்ஸ் வைட்டமின், தாது உப்பு, தேவையான கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. மகரந்த துகள்களில் உள்ள சத்துக்கள் உடலின் சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.



உடம்பில் உள்ள நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பதுதான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் தடுப்பது ஆன்டி ஆக்சிடன்ட்கள். மலர்களின் மகரந்த துகள்களில் இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன.



தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மகரந்த துகள்களை காய்கறி அல்லத சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம்.அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

கருத்துகள் இல்லை: