நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

தக்காளி கடலைப்பருப்பு துவையல்

 தக்காளி உணவுகளை அடிக்கடி பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


தக்காளி - கால் கிலோ,

கடலைப்பருப்பு- 100 கிராம்,

கடுகு - 1 ஸ்பூன்,

பூண்டு - 4 பல்,

காய்ந்த மிளகாய்- 10,

எண்ணெய் - 2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.


செய்முறை


தக்காளி நன்றாக கழுவி 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.


சூடு ஆறியவுடன் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தால் சுவையான தக்காளி பருப்பு துவையல் தயார்.


கருத்துகள் இல்லை: