நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 1 ஜூன், 2017

சூடான மைதா பக்கோடா !!!

தேவையான பொருட்கள் :

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - அரை கட்டு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

*
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

*
இஞ்சி, .மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

*
அடுத்து மைதா மாவுடன் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

*
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

*
இப்போது மொறுமொறுவென சூடான மைதா பக்கோடா ரெடி!!!

*
இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

கருத்துகள் இல்லை: