ரத்தமின்றி எந்த உடலும் இயங்காது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.போதுமான அளவு ரத்தம் உடலில் இல்லையேல் உடல் நிலை பாதிக்கப்படும். சிவப்பணுக்களின் எண்ணிக்கையை ரத்தத்தைப் பரிசோத்தித்து அதிலிருக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அந்த அணுகளில் உள்ள ஹீமோக்ளோபின் என்னும் சிவப்பு நிற அணுக்களின் அளவையும் கணக்கெடுத்து அங்கீகரிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருப்பின் அது இரத்தச் சோகை என அழைக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் "அனீமியா" என்று அழைகிறார்கள்.
இரும்புச் சத்தின் குறைப்பாட்டினால் ஏற்படுவது தான் இதற்கு காரணம்.anemia |
பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆங்கீகரிக்கப்பட்ட அளவு வேறுபடும்.
ஆணுக்கு சிவப்பணுக்கள் 55,00,000மும் , ஹீமோக்ளோபின் அளவு 110%, 17 கிராம் இருக்கவேண்டும்.
பெண்ணுக்கு சிவப்பணுக்கள் 45,00,000மும் ஹீமோக்ளோபின் அளவு 90%, 14.5 கிராம் இருக்கவேண்டும்.
ஹீமொக்லோபினே ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் ஆக்சிஜெனை எடுத்து செல்வது ஹீமொக்ல்பினே.
அங்கிருந்து கரியமில வாயுவை (கழிவு) எடுத்துவருகிறது.
நாம் ஆரோகியமாக இயங்குவதற்கு ஹீமோக்ளோபின் அளவு ரொம்ப முக்கியம். ஹீமோக்ளோபின் அளவு குறையத் தொடங்கினால், சின்னச் சின்னப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதை நாம் சுதாரித்து நல்ல இரும்பு சத்துள்ள பொருட்களை உண்டோமானால் எளிதில் குணப் படுத்தலாம். பேரிச்சம் பழம், தேன், பிஸ்தா பருப்பு, கீரை, பீட்ரூட் போன்றவைகளில் இரும்பு சத்து அதிகம்.
ஒருவேளை நாம் கவனிக்கத் தவறிவிட்டால், இரும்புச் சத்தின் குறைப்பாட்டால் ஹீமோக்ளோபின் அளவும் குறையத் தொடங்கும். அதன் காரணமாக உடலில் பல பாதிப்புகள் உண்டாகலாம
ஜீரண சக்திக் குறைந்து போவது
பெண்ணுக்கான மாதவிடாய் கோளாறுகள், ஆதில் குறிப்பாக
சீரற்ற நிலையும் அதை சார்ந்து ஏற்படும் பிரச்சனைகளும் வர
வாய்ப்புள்ளது.
உடல் மெலிந்து, வெளுத்து காணப்படும்.
அடிக்கடி பதற்றமடைதல்.
கைகளில் ஏதோ கனத்தை வைத்தார் போன்ற உணர்வு உண்டாகும்.
கை கால் விரல்கள் மரத்துப் போவது அல்லது விண்விண்னென்று தெரிப்பது போன்ற உணர்வு.
அளவு மிகவும் குறைந்துப் போனால் அதாவது நான்கு அல்லது ஐந்து அளவிற்கு குறைந்தால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலை உண்டாகும்.
இரத்த சோகை வரக் காரணம் என்ன ?தேவையான அளவு ஓய்வும் தூக்கமும் இல்லாமல் இருப்பது.
சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது.
சீரற்ற உணவு பழக்கவழக்கங்கள்.
டைபோய்ட், மலேரியா, மூல நோய், கொக்கிபுழு நோய் , இறப்பை மற்றும் குடலிருந்து ரத்தப் போக்கு போன்ற நோய்களினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டால், ஹீமோக்ளோபின் அளவு குறையும்.
anemia |
மேற்கூறியவைகளை குணப் படுத்த முயலும் பொழுது நமக்கு உடலில் வறட்சி, உஷ்ணம் அதிகமிருந்தால், ஜீரணசக்தி மட்டுப்பட்டிருந்தால் அதுமட்டுமின்றி அடிக்கடி மலம் கழிக்கும் நிலை இருந்தால், அதை குணப் படுத்திக் கொண்டு பின் இரும்பு சத்துள்ள உணவினை உண்பது நல்லது. கூடவே வைட்டமின் இ சத்துள்ள பொருட்களை சேர்த்து உண்பது உடலுக்கு நன்மையைத் தரும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக