நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

திங்கள், 26 மே, 2014

இருமலை விரட்ட சில வழிகள்!

இன்றையக் காலக்கட்டத்தில் இருமல் ஒரு பெரும் வியாதியாக உள்ளது. இருமலை விரட்ட ஆடுதொடா இலையின் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும். மேலும், இன்புறா, வல்லாரையைக் கசாயம் செய்து சாப்பிடலாம்.
!
*
இருமலை விரட்ட சில வழிகள்
விஷ்ணு கிரந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
*
வெந்தயக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வரலாம்.*
சிறு குறிஞ்சா வேரைப் பொடி செய்து கசாயம் வைத்துச் சாப்பிடலாம்.*
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.*
சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.*
சிறுதேள் கொடுக்கு இலை, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் சாப்பிட்டு வரலாம்.*
இஞ்சிச் சாறு, மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து அருந்தலாம்.*
மிளகுடன் பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை உண்ணலாம்.*
ஓமவல்லி இலைச்சாற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கான சீதள இருமலுக்குக் கொடுக்கலாம்.*
கண்டங்கத்தரி வேர், ஆடுதொடா வேர், திப்பிலி இம்மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி. வீதம் காலை மாலை குடிக்கலாம்.*
மாதுளம்பூவின் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரலாம்.*
கடுகை மைய இடித்துத் தூள் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.


 
*
கஞ்சாங்கோரை இலைச்சாற்றை 20 துளி அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.*
நஞ்சறுப்பான் இலைச்சூரணம் ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் காணாமல் போகும்.*
கொன்றைவேர்ப்பட்டை, தூதுவளைப்பொடி கலந்து சாப்பிட்டால் இரைப்பிருமலை விரட்டலாம்.*
சோடா உப்பைத் தண்ணீரில் கலந்து குடித்தால் கக்குவான் இருமலின் வேகத்தைக் குறைக்கலாம்.*
செந்நாயுறுவி வேர்ப்பட்டைப் பொடியுடன் தேனில் மிளகுப் பொடியும் சிறிது கலந்து குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.*
பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் துணியால் கட்டிக் கொண்டு வந்தால் சளி மிகுதியால் வரும் இருமலை விரட்டலாம்.*
முசுமுசுக்கை இலைப்பொடி, தூதுவளைப் பொடியுடன் கருவேலம் பிசின் கலந்து வெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். நாள்பட்ட இளைப்பிருமல் தீரும்.

கருத்துகள் இல்லை: