நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 26 ஜூலை, 2012

தோட்டத்தில் இருக்கும் களைச்செடிகளை அகற்ற வேண்டுமா?

வீட்டில் ஆசையாக வளர்க்கும் தோட்டத்தில் பாம்புகள், எலிகள் மற்றும் சிலந்திகள் வந்து தங்கிவிடுகின்றன. மேலும் களைச்செடிகளும் முளைத்து புதர் போல் மாறிவிடுகிறது. அவ்வாறு இருப்பதால் தோட்டத்திற்குள்ளே நுழைவதற்கே பயமாக இருக்கும். அத்தகைய பூச்சிகளை, விலங்குகளை தோட்டத்தில் இருந்து அகற்ற, கடைகளில் விற்கும் பூச்சிக்கொல்லிகளை வாங்கி தெளித்தால், அவைகள் இறந்துவிடுவதோடு, வராமலும் இருக்கும். ஆனால் களைச்செடிகளை மட்டும் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கும். அதற்கும் சில எளிமையான வழிகள் இருக்கின்றன.
களைச்செடிகளை அகற்ற ஈஸியான டிப்ஸ்...
* முதலில் ப்ளீச்சிங் பவுடரை மேலே தூவுவதை தவிர்க்க வேண்டும். இதனால் செடிகள் தான் கருகிவிடும். ஆகவே அதற்கு பதிலாக அந்த ப்ளீச்சிங் பவுடரை நீரில் கரைத்து நிலத்தில் தெளிக்க வேண்டும். இதனால் தோட்டத்தில் இருக்கும் களைகள் அழிவதோடு, பூச்சித் தொல்லைகளும் இல்லாமல் இருக்கும்.
* பேக்கிங் சோடா ஒரு சிறந்த களைச்செடிகளை அழிக்க உதவும் பொருள். அதற்கு சிறிது பேக்கிங் சோடாவை கையில் எடுத்துக் கொண்டு, செடிகளைச்சுற்றி தூவ வேண்டும். இதனால் களைகள் வராமல் தடுக்கலாம்.
* எப்போதும் தோட்டத்திற்கு உரங்களை போட வேண்டும். இதனால் களைகள் வளராமல் இருப்பதோடு, தோட்டத்தில் வளர்க்கும் செடிகளும் நன்கு ஆரோக்கியமாக வளரும். முக்கியமாக அதிக அளவு உரங்களையும் தோட்டத்திற்கு போடக் கூடாது. இது வளரும் செடிகளை அழித்துவிடும்.
* செடிகள் இருக்கும் இடத்தில் தண்ணீர் வற்றியதும், நீரை ஊற்றிக்கொண்டே இருக்க கூடாது. அவ்வாறு ஊற்றினால் களைகள் நன்கு வளரும். ஆகவே அதிகமான அளவு தண்ணீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டாம்.
* தோட்டத்தில் நடக்கும் பாதைகளில் இருக்கும் களைகளை அகற்றுவது என்பது மிகவும் கடினமானது. ஆகவே அப்போது உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து, நடைபாதைகளில் ஊற்றினால் களைகளது வளர்ச்சியானது தடைபடும்.
* உப்புக்களை தோட்டத்தில் இருக்கும், செடிகளை சுற்றி வைத்திருக்கும் செங்கற்களைச் சுற்றி தூவ வேண்டும். இதனால் தேவையற்ற களை மற்றும் புற்கள் வளராமல் இருக்கும்.
* ஒரு அவுன்ஸ் வோட்கா, சிறிது வினிகர் மற்றும் 3-4 துளி சோப்புத் தண்ணீரை, நீரில் கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, களை உள்ள இடத்தில் தெளிக்க வேண்டும். இதனால் களைகள் வராமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை: