நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 29 ஜூலை, 2010

இடியின் வேகம் கொட்டாவி விடுவது ஏன்? ஓசி

இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர்


இடி மின்னலை வைத்து நீங்கள் இருக்குமிடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று உடனடியாகக் கணக்கிட முடியும். இடியின் வேகம் மணிக்கு 1200 கிலோ மீட்டர். அதாவது வினாடிக்கு 1 கிலோ மீட்டர். மின்னல் தோன்றிய சிறிது நேரத்திற்குப் பின்னர்தான் இடியின் சப்தம் கேட்கும். இந்த இடைப்பட்ட நேரத்தைக் கண்டுபிடித்து மூன்றால் வகுத்தால் இடி எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்பது தெரியும். உதாரணமாக மின்னலுக்கும் இடிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் 27 வினாடிகள் என்று வைத்துக் கொண்டால் அதை மூன்றால் வகுத்தால் வரும் விடை 9. அப்படியானால் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இடி விழுந்தது என்று அறியலாம்.

கொட்டாவி விடுவது ஏன்?

நாம் சோர்வாக இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு நிலைதான் கொட்டாவி. இந்த கொட்டாவி எதனால் ஏற்படுகிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அளவு அதிகரிக்கும் போது நமக்கு கொட்டாவி எற்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் கொட்டாவி விடும்பொழுது மூச்சை ஆழ்ந்து உள்ளிழுக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்று ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைத்து, ஆக்ஸிசனின் அளவை அதிகரிக்கிறது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உண்மைதானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
ஓசி
இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் பொகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

கருத்துகள் இல்லை: